Breaking

Showing posts with label Announcements of Police. Show all posts
Showing posts with label Announcements of Police. Show all posts

Monday, April 29, 2024

Thursday, March 23, 2023

March 23, 2023

2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

1819 ஆண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், 780 பெண் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் என மொத்தம் 2599 காலிப்பணியிடங்கள் - தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களின் கடிதம், நாள்: 20.03.2023

Police Recruitment of Grade II Police Constables Estimate of vacancy for the year 2023 - Approved and sent for commencement of recruitment process - Reg.

Friday, February 03, 2023

February 03, 2023

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை அளிப்பது தொடர்பாக - காவல்துறை இயக்குநர் சுற்றறிக்கை குறிப்பாணை - Dt: 03.02.23 Police - Director of Police Circular Memorandum - Dt: 03.02.23 regarding paying last respects to Police personnel who lost their lives

காவல்துறை இயக்குநர் அலுவலகம்,

சுற்றறிக்கை குறிப்பாணை

காவல் - உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை- அளிப்பது தொடர்பாக

பொருள்:

அனைத்து மாநகரமாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அன்னாரது

இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் காவல் படைத் தலைவர் சார்பாக யம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும்.

மேலும், இந்நிகழ்வை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அக்காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு, ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஒய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும். 3) இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

Wednesday, October 26, 2022

October 26, 2022

வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் அமல்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் அமல்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் தொடர்பாக அக்.20 தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறை சார்பில் அக்.28 முதல் அமல்படுத்தப்படும் என்று கூறி இருந்த நிலையில் இன்று முதல் அமல் படுத்தப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இருசக்கர, மூன்று சக்கர வாகனத்தில் பயணி குறிப்பிடும் இடத்துக்கு ஏற்றி செல்ல மறுத்தால் ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறை ரூ.1500 வரை வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களை பதிவு செய்யாமல் இருந்தால் முதல் முறை ரூ.500, 2ம் முறை ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் முதல்முறை ரூ.500-ம் 2 வது முறையாக ரூ.1500 அபராதம் வசூலிக்கப்படும். அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். மாக்களை அச்சறுத்தம் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு முதல்முறை ரூ.1000 2வது முறை ரூ.10,000 வசூலிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2வது முறையாக ரூ.1500 அபராதம் விதிக்கப்படும். கார்கள், ஜீப்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக ஓட்டினால் ரூ.2000 அபராதம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் அமர்ந்து பயணிப்பவருக்கு அபராதம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

சாலைகளில் வாகனங்களை பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10,000 அபராதம். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் முதல்முறை ரூ.1,000 2-வது முறை ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இனி 46 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத் தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog