Breaking

Showing posts with label School teacher transfer. Show all posts
Showing posts with label School teacher transfer. Show all posts

Monday, June 19, 2023

Monday, May 15, 2023

Saturday, May 13, 2023

Thursday, April 13, 2023

April 13, 2023

ஆசிரியர்கள் கவனத்திற்கு!

ஆசிரியர்கள் கவனத்திற்கு!

பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile-இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.

எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நாள், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile-இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும்

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது

Wednesday, February 01, 2023

February 01, 2023

ஆசிரியர்களை பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ்

ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் - Students will be affected if teachers change jobs - Minister Anbil Mahes

பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை

பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால், தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

மாணவர்களைப் பொருத்தவரை படிப்பதற்காக வரக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம். எனவே, குழந்தைகளைப் படிப்புக்கு மட்டுமே ஆசிரியர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் பயன்படுத்த வேண்டும். வேறு விதங்களில் பயன்படுத்தினால் துறை ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத் தேர்வை மாணவர்கள் பதற்றப்படாமல் அச்சமின்றி எழுத வேண்டும்.

கடைசி நேரத்தில் மட்டுமே படிப்பதைத் தவிர்த்து, இப்போதிருந்தே படித்தால் தேர்வு அச்சத்தைத் தவிர்க்கலாம் என்றார் அமைச்சர். ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு:

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:

அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என்று ஆணையத்திடம் தெரிவித்து, பணிநிரவல் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி பணியிடம் மாற்றம் செய்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர், மாணவிகள் பாதிக்கப்படுவர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெறவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதிலிருந்தே, அவர்களுக்கு தோல்விப் பயம் தொடங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது என்றார் அமைச்சர்

Monday, July 11, 2022

July 11, 2022

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்த செய்தி

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு

முன்னுரிமை வரிசை எண் 1065 முதல் 1500 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 12.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 12.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

------தொடக்க கல்வி இயக்குநர்

Wednesday, July 06, 2022

July 06, 2022

Tamil vs English - ஆசிரியர்கள் சண்டையால் பணியிட மாற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசுப்பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்ட 2 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷும், தமிழ் ஆசிரியர் தமிழ்செல்வனும் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மாறி மாறி அடித்து கொண்டனர்.

இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

Saturday, July 02, 2022

July 02, 2022

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில், அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும் என குறிப்பிப்பட்டுள்ளது.

Wednesday, June 29, 2022

June 29, 2022

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல்

மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் என்று பரவி வரும் தவறான பட்டியல் : இடைநிலை ஆசிரியர்களின் மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் என 131 பக்க PDF File அனைத்து குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

அப்பட்டியலைத் தயார் செய்தது யாரெனத் தெரியவில்லை. மேலும் அப்பட்டியலில்,

1.மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. பிற மாவட்டத்திற்கு

என்ற இரு விருப்பங்களைத் தேர்வு செய்து விண்ணப்பித்தோரின் பெயர்கள் மட்டுமே உள்ளது. ஆனால், மாறுதல் விண்ணப்பம் அளித்த போது,

1. ஒன்றியத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

2. மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

3. ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் & பிற மாவட்டத்திற்கு

4. பிற மாவட்டத்திற்கு

என்ற 4 விருப்பத் தேர்வுகள் இருந்தன. இதில், ஒன்றிய / மாவட்ட அளவிலான கலந்தாய்வுகளில் புதிய பள்ளிகளைத் தேர்ந்தெடுக்காத ஆசிரியர்களும் பிற மாவட்டத்திற்குச் செல்ல நடைபெறவுள்ள கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்கள்.

ஆனால், தற்போது பகிரப்பட்டு வரும் பட்டியலில் அத்தகையோரின் பெயர்கள் இல்லை. எனவே இது முழுமையான பட்டியல் அல்ல என்பதோடே முன்னுரிமையும் மாறக்கூடும் என்பதால், இது தவறான பட்டியல்.

ஒருவேளை இது துறைரீதியாக வெளியிடப்பட்டதுதான் என்றால் மேற்படி ஆசிரியர்களின் பெயர்களும் அடங்கிய முழுமையான பட்டியலை வெளியிட அறிவுறுத்த வேண்டும்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
June 29, 2022

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 7ம்தேதி கவுன்சலிங் தொடங்கும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்கும் கவுன்சலிங் ஜூலை 7ம் தேதி தொடங்கும் என்று தொடக்க கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடத்துவது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கின் காரணமாக மேற்கண்ட கவுன்சலிங் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கவுன்சலிங் ஜூலை மாதம் நடக்க உள்ளது. இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் கவுன்சலிங் ஜூலை 7ம் தேதி நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் மாவட்டம் விட்டு மாவட்டம் 8ம் தேதியும் நடக்கும். ஒருசில நீதிமன்ற வழக்குகளில் காலிப்பணியிடங்கள் புதிதாக ஏற்பட்டால் அந்த காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கும், ஏற்கனவே பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்துக்குள் மாறுதல் நடந்த கடைசி நாளான 25.2.22ம் தேதி நிலவரப்படி உள்ள காலிப்பணியிடங்களுக்குதான் மாவட்டம் விட்டு மாவட்டம் கவுன்சலிங் நடக்கும். 2021-22 பொது மாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை. இந்த பணி நிரவலில் மாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலில் கலந்துகொள்ள அனுமதிப்படுவார்கள். தொடக்க கல்வி 2021-22ம் கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்கள் 21.6.22 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கொண்டு தான் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து மீண்டும் அனுப்ப வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் எந்த பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ அந்த பதவியில் முதல் முதலில் பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 25, 2022

June 25, 2022

ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு.

தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.


இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022

 பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் -  08.07.2022







Wednesday, April 27, 2022

April 27, 2022

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

Monday, April 18, 2022

April 18, 2022

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்.18.04.2022

மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் சார்ந்து - திருத்திய கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் சார்பான அறிவுரைகள் , கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் எவ்வாறு பதிவேற்றம் செய்தல் மற்றும் கலந்தாய்விற்கான காலஅட்டவணைகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் EMIS- ல் இணையதளத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய இயலாதநிலையில் கீழ்க்கண்ட திருத்திய காலஅட்டவணையின்படி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து கல்வி அலுவலர்களும் கேட்டுக் முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.

Mutual & Union Transfer - Revised Counselling Schedule

Sunday, April 10, 2022

April 10, 2022

மனமொத்த மாறுதல்: ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

'மனமொத்த மாறுதல்பெற விரும்பும் ஆசிரியர்கள், நாளை மறுதினம் முதல் 18ம் தேதி வரை, மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம், மனமொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அலகு விட்டு அலகு மாறுதல் வழியாக, பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் கோருபவர்களுக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது.இதன் அடிப்படையில் மாறுதல் பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை, இ.எம்.ஐ.எஸ்., இணையதளத்தில், நாளை மறுதினத்தில் இருந்து, 18ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியல், 19ம் தேதி வெளியிடப்படும். அதில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால், 20 மற்றும் 21ம் தேதி பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் 22ம் தேதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.

வரும் 25ம் தேதியில், மனமொத்த மாறுதல் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடக்கும். 26ம் தேதி அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog