Breaking

Showing posts with label Daily Prayer Activities. Show all posts
Showing posts with label Daily Prayer Activities. Show all posts

Thursday, April 21, 2022

April 21, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.04.22


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: கள் உண்ணாமை

குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்:
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்

பழமொழி :
Better wear out than rust out.

துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது நல்லது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.நன்மை எ‌ன்றாலு‌ம் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன். 

2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன் 

பொன்மொழி :

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்._____அப்துல் கலாம்

பொது அறிவு :

1.ஐந்தாண்டு திட்டத்தை முதன்முதலில் தொடங்கிய நாடு எது? 

சோவியத் ரஷ்யா.

 2. இந்தியாவில் அதிக வனப்பகுதி உள்ள மாநிலம் எது?

 மத்திய பிரதேசம்.  

English words & meanings :

litigate - to take legal action in a court of law.
வழக்காடு: 

listless - tired and without energy, சோர்வுற்ற மற்றும் ஆற்றல் இழந்த
ஆரோக்ய வாழ்வு :
  
ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது. 100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது.ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.
கணினி யுகம் :

Ctrl +; - Display date. 

Ctrl + 1 - Format box
நீதிக்கதை

அன்பை அடைக்க கதவு உண்டோ?

ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 

அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். 

அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன். 

மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள்

21.04.22

🔶கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🔶தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

🔶பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. அவர்களின் விருப்பங்களை அறிந்து வழிகாட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

🔶இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நெருக்கடி: வரலாறு காணாத மின்வெட்டு; நிலக்கரி வாங்க பணமில்லை.

🔶ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

🔶சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; ஒடிசா மற்றும் சர்வீசஸ் அணிகள் அபார வெற்றி.

Today's Headlines

🔶It is mandatory for people to wear a mask when going to public places to protect themselves from corona infection.  The government is not exempted people from that.  The Minister of Medicine and Public Welfare has said that the only exemption is the penalty for not wearing the mask.

🔶 There are 1.10 lakh vacancies in Polytechnic Colleges in Tamil Nadu.  Minister Ponmudi said. He also said that the interest of students to join polytechnic colleges has decreased.

 🔶Parents should not impose their dreams on children.  Chief minister Stalin advised them to know and guide their preferences.

🔶 Crisis in Pakistan following Sri Lanka: Unprecedented power outage;  no money to buy coal.

 🔶India won 3 bronze medals in a single day at the Asian Wrestling Championships.

🔶 Santosh Cup Football Series;  Odisha and Services won by a huge margin.

Tuesday, April 19, 2022

April 19, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.04.22


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை

குறள்: 896

எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

பொருள்:
நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது

பழமொழி :
Break his head and bring a plaster.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதா?

இரண்டொழுக்க பண்புகள் :

1.நன்மை எ‌ன்றாலு‌ம் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன். 

2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன் 

பொன்மொழி :

உடல் தூய்மையை விட மனத்தூய்மையே அவசியமானது. இதயத்தை நல்ல எண்ணத்தால் நிரப்பு._____ஏசு கிறிஸ்து

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் வியாபார நகரம் எது?

 விருதுநகர். 

2. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?

 சென்னை.

English words & meanings :

jackpot - a large cash prize in a game, விளையாட்டில் கிடைக்கும் அதிக பண பரிசு, 

janitor - a doorkeeper or gatekeeper of a building, வாயில் காப்போர்
ஆரோக்ய வாழ்வு :

 கொத்தவரங்காய் ஓர் உன்னத உணவும்,மருந்தும் ஆகும். இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் மிகுதியாக உள்ளது. போலிக் அமிலத்தை உடையது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு, போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்து தேவைப்படுகிறது. ரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கிறது. ரத்த சோகையை சரிசெய்கிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கணினி யுகம் :

Ctrl + 0 - Hide column. 

 Shift + Ctrl + 0 - Unhide the column 

ஏப்ரல் 19

பியேர் கியூரி அவர்களின் நினைவுநாள்





பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது
நீதிக்கதை

நாளை என்பது நம் கையில் இல்லை

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில், ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்ற போது, புழு பறவையிடம், என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால், உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது, ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. கொஞ்ச தூரம் பறந்து சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம், என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை, எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது, ஐம்பது புழுக்களுக்காக, உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது, உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன். பிறகு என் வழியில் நான் செல்கிறேன், என்று சொல்லி, புழுவை விழுங்கி விட்டது.

கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம், வேடனே! நான் சாதாரண குஞ்சுப்பறவை. என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்! என்னுடன் வா! என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால், உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது. அட பறவையே! நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக, இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா? ஹூம்... இன்றைய உணவையே நான் பார்க்கிறேன், நாளைக்குரியதை, அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான், என்றவன், பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

இன்றைய செய்திகள்

19.04.22

🔶26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை உயர்வு: தமிழக அரசு தகவல்.

🔶ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

🔶1,089 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

🔶அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு அடுக்குகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. 5 சதவீத வரியின்கீழ் வரும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு 3 சதவீதமாக வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔶பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 35% வரை உயர்வு: கடும் நெருக்கடியில் இலங்கை மக்கள்.

🔶அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா தாமதிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு.

🔶தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: அரியானா அணி சாம்பியன்.

🔶பிரீமியர் லீக் கால்பந்து: ரொனால்டோ ஹாட்ரிக் கோல் - மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி.

Today's Headlines

▶ Groundwater level rises from 0.24 to 4.59 meters in 26 districts: Government of Tamil Nadu.

 ▶The Teacher Selection Board has given a deadline of April 26 to apply for the Teacher Qualification Examination.

 ▶Chief Minister MK Stalin issued appointment orders for veterinary assistant posts for 1,089 veterinary graduates.

▶ It is said that at the GST Council meeting next month, new changes will be made in the tax brackets.  The tax is expected to be reduced to 3 per cent for some essential items that come under the 5 per cent tax.

 ▶Petrol, diesel prices rise by 35% in one day: Sri Lankans in dire crisis

 ▶Nuclear deal: Iran accuses the US of delaying

 ▶National Senior Men's Hockey Tournament: Haryana Team Champion.

 ▶Premier League football: Ronaldo hat-trick goal - Manchester United win.
 
 Prepared by

Cover women ICT_போதிமரம்

Monday, April 18, 2022

Friday, March 11, 2022

March 11, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.03.22


 திருக்குறள் :

அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:180

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

விளக்கம்:

பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அவ்வாறு அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே வாழ்வில் வெற்றியைக் கொடுக்கும்‌.

பழமொழி :
Writing the word sugar will not be sweet.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 

2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்

பொன்மொழி :

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”___ இறையன்பு இஆப

பொது அறிவு :

1.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? 

டேக்கோமீட்டர். 

2. உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு எது? 

நார்வே.

English words & meanings :

Hit the books - to study very hard, கடினமாக படித்தல் 

hit the nail - says exactly or correctly, மிக சரியாக கூறுவது
ஆரோக்ய வாழ்வு :

சின்ன வெங்காயம் மென்னு தின்று வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும். தும்மல், நீர்க்கடுப்பு, குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து இதயம் பலமாகும். மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது.


கணினி யுகம் :

Ctrl + S - Save current document file. Ctrl + X - Cut selected item
நீதிக்கதை

அம்மா சொல் கேள்!

ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 

ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 

சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 

உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 

நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

11.03.22

✅தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

✅தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான சுகாதார சேவைகள் உரிமை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

✅பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பள்ளிபாடங்களின் காணொலிகள், வினா வங்கித் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு கல்விச் செயலியை பள்ளிக்கல்வித் துறை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

✅இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

✅நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40வாயு இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

✅நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர மாட்டேன்; ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த தயார்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க அறிவிப்பு.

✅காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கானாவுடன் மோதல்.

Today's Headlines

✅In all over Tamil Nadu, there will be meetings for SMC on March 20th. 52 lakh parents are expected to attend it.

✅To give equal medical attention to everyone soon there will be passing of the law on Rights to Health says Tamilnadu Health Minister.

✅During Disaster times soon TN government will release a Special Educational App so students can learn easily hence it contains all educational content such as videos and question banks.

✅To celebrate India's 75th Freedom day government is going to release 75 satellites all created by the students says Tamil Nadu Science and Technology club's vice president Mr. Mayilsamy Annadurai.

✅Chandrayan 2 discovered Argon - 40 gas on the surface of the Moon says ISRO.

✅I won't become a member of the NATO ready to talk with the Russian President declares Ukraine president publically.

✅In Commonwealth games, the Indian Hockey team play with Gana


Tuesday, March 08, 2022

March 08, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.03.22


திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வாழ்க்கைத் துணை நலம்

குறள் எண் : 56

குறள்:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பொருள்:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

பழமொழி :
Sadness and gladness succeed each other.


அல்லல் ஒரு காலம்.செல்வம் ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனித்துவமே மகத்துவம் எனவே எப்போதும் என் தனித் தன்மையை இழக்க மாட்டேன் 

2. எனது ஒலி உரக்க ஒலிக்க செய்வேன் பிறரின் எதிரொலியாக இருக்க மாட்டேன்

பொன்மொழி :

அமைதியாக இருப்பவனை முட்டாள் என்று நினைத்துவிடாதே. பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி....கௌதம புத்தர்

பொது அறிவு :

1. சேரன் தீவு என்றழைக்கப்படும் நாடு எது?

 இலங்கை. 

2. உலகிலேயே இளம் வயதில் யோகா மாஸ்டரான இந்திய வம்சவெளி சிறுவன் யார்?

 ரேயான்ஷ் சுரானி (துபாய்)

English words & meanings :

Costs an arm and leg - very costly, அதிக செலவு ஏற்படுத்த கூடிய. 

Cut some slack - give the workers some break, தொடர்ந்து பணி செய்பவர்களுக்கு சிறு இடைவெளி
ஆரோக்ய வாழ்வு :

வாழை இலையில் 'Germs killer'கிருமி நாசினி இருக்கிறது. இது உலகில் அழிக்கவே முடியாது எனும் கேன்சர் செல்களையும் அழிக்கும் திறன் வாழை இலைக்கு இருக்கிறது. வாழை இலையை துவையல் செய்து சாப்பிடலாம்.
கணினி யுகம் :


மார்ச் 08

அனைத்துலக பெண்கள் நாள்




அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

நீதிக்கதை

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 

கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 

நீதி :
எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

இன்றைய செய்திகள்

08.03.22

◆தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

◆நாட்டின் முதல் மற்றும் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

◆உக்ரைனில் இருந்து 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்: வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.

◆பிஎச்டி, எம்.பில். பயிலும் மாற்றுத் திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

◆உக்ரைனில் சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு.

◆உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்.

◆மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து.

Today's Headlines

 ◆ The Department of School Education has informed that the year-end examination will be held at the school level for the 1st to 5th class in Tamil Nadu.

 ◆ Chief Minister Stalin inaugurated the country's first and largest floating solar power plant at Thoothukudi.

 ◆ 771 students from Ukraine have come to Tamil Nadu: Overseas Tamil Welfare Minister Senji Mastan informed.

 ◆ PhD, M.Phil.  The UGC said students with disabilities can apply for scholarships until March 31.

 ◆ Ceasefire in 4 cities in Ukraine, including Sumi: Russia announces.

 ◆ World Cup sniper competition: Third gold for India.

 ◆ Women's World Cup Cricket: New Zealand beat Bangladesh.



Saturday, March 05, 2022

March 05, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.03.22


திருக்குறள் :

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 

பழமொழி :
Beauty is not a legacy.

சேற்றில் முளைக்கும் செந்தாமரை.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவதுதான் வாழ்க்கையின் ரகசியம்.!”....... தென்கச்சி கோ சுவாமிநாதன்

பொது அறிவு :

1. உலகிலேயே அதிகம் மாசுபட்ட நதி எது? 

ராவி நதி (பாகிஸ்தான்).

2. கடலில் உள்ள எந்த உயிரினத்தின் பாதுகாப்பகம் அமைக்க 5 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது? 

கடல்பசு.

English words & meanings :

Thunderous - very loud, இடி போன்ற சத்தம், 

Arduous - very difficult, அதிக கடினமான
ஆரோக்ய வாழ்வு :

பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும்.
பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.




கணினி யுகம் :

Center align - Ctrl E. 

Cut - Ctrl X

நீதிக்கதை

உதவியின் சிறப்பு

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 

கதை :
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.

அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 

ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 

நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

05.03.22

★தமிழகத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

★வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் புதர்காடுகள் எரிந்து சாம்பலாகின.

★2024 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்   
பெங்களுருவில் நாளை நடைபெறுகிறது.

★மீட்புப் பணியில் இந்திய விமானப்படை: உக்ரைனில் இருந்து 630 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

★கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்கள்   உட்பட வெளிநாட்டவரை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

★உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.

★சென்னையில் 3 நாட்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

Today's Headlines

 ★ The Chennai High Court has ruled that child driving is on the rise in Tamil Nadu and has directed that appropriate measures be taken to prevent children under the age of 18 from driving.

 ★ The Chennai High Court has directed the Government of Tamil Nadu to standardize the work of 45 computer operators who are temporary employees in the regional transport offices.

 ★ Hundreds of acres of bushes were burnt to ashes in a wildfire at the Anaimalai Tiger Reserve.

 ★ Consultative meeting to review the plan to provide drinking water connection to all households in the southern states of Tamil Nadu, Kerala, Andhra Pradesh, and Karnataka by 2024.
 It takes place tomorrow in Bangalore.

 ★ Indian Air Force in rescue operation: 630 Indians return home from Ukraine.

 Russian President Vladimir Putin has said that the Ukrainian government is holding foreigners hostage, including Indian students, at the Kharkiv railway station.

 ★ World Cup Sniper: Indian women's team wins gold in air pistol event.

 ★ The state-level volleyball tournament is going on for 3 days in Chennai.


Saturday, January 08, 2022

January 08, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.01.22


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: கூழியல்

அதிகாரம்: பொருள் செயல் வகை

குறள் எண்: 758

குறள்:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.

பொருள்:
தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று பாதுகாப்பானது.

பழமொழி :
Good or bad, it doesn't come from others.


தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

மரங்களில் பழங்கள்
இருந்தால் தான் பறவைகள்
தேடி வரும் அது போல தான்
பல உறவுகளும் உன்
வாழ்க்கையில் உயர்வு
இருந்தால் தான் உன்னை
தேடி வருவார்கள்.___ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :

1. நாகாலாந்தில் எத்தனை புதிய மாவட்டங்கள் உருவாகிறது? 

3 மாவட்டங்கள். 

2. இந்திய ரானுவத்தில் தகவல் பகிர்வுக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மொபைல் செயலி எது? 

அசிக்மா செயலி.

English words & meanings :

Pool - a small body of water, சிறு நீர் தேங்கியிருக்கும் பகுதி, 

Pool - sharing resources like car, வளங்களை பகிர்ந்து கொள்ளுதல்
ஆரோக்ய வாழ்வு :

தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கட்டிகளை நிரந்தரமாக நீக்கும் ;அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்; சளியை முற்றிலும் குணமாக்கும்; எலும்பையும் பற்களையும் பலப்படுத்தும்.
கணினி யுகம் :

Ctrl + Alt + X - Clear target segment. 

Alt + - - Current segment Leverage
ஜனவரி 08
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்






ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018)[3] ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.[4][5] இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.

நீதிக்கதை

யார் வள்ளல்?

முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன். 

அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.

திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.

அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.

நீதி :
தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.01.22

◆தமிழகத்தின் 24,345 தொடக்கப் பள்ளிகளிலும் 'ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் திறன்மிகு வகுப்பறைகள் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் கல்விப் புரட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

◆திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

◆நாகாலாந்து மலைத்தொடர்களில் அரியவகை படைச் சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லை என நினைக்கப்பட்ட இந்த வகை சிறுத்தை இனம், காட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவின் மூலம் இந்திய மலைத்தொடர்களில் இருப்பது உறுதியாகியுள்ளது என வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

◆நடப்பாண்டு மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டையும் உறுதி செய்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

◆உலக அளவில் கரோனா தொற்று கடந்த வாரத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

◆சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா நாடியா கிச்னோக் ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.


Today's Headlines

  Effective classrooms are known as 'Smart Classes' will be started in 24,345 primary schools in Tamil Nadu.  Chief Minister MK Stalin has said that this is a great educational revolution in the history of public schools.

 The Chief Minister said in the assembly that 4 new pocso courts will be set up in Dindigul, Theni, Dharmapuri, and Tiruvallur districts.

 Rare leopard found in Nagaland. Wildlife enthusiasts are happy that this species of leopard, which is thought to be non-existent in India, has been confirmed to be in the Indian mountains by CCTV cameras installed in the ghats.

  

Wednesday, January 05, 2022

January 05, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.01.22


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடுகுறள் எண் : 740

குறள்:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

பொருள்:
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்

பழமொழி :
Beauty is a short-lived reign.


அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்____கலாம் அவர்கள்


பொது அறிவு :

1. இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 திருவனந்தபுரம். 

2. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடு எது? 

சீனா.

English words & meanings :

Accept - receiving something. ஏற்றுக்கொள்வது. 

Except - not including something or some body. ஒருவர் அல்லது ஒரு பொருள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது.
ஆரோக்ய வாழ்வு :

தேனின் நன்மைகள்,




1) எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 

2) ஆரஞ்சு பழச் சுளைகளை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்
கணினி யுகம் :

Alt + Shift + N - Add Note. 

Ctrl + Alt + T - Add term


நீதிக்கதை

 தீயவர்களின் நட்பு

ஒரு கிணற்றில் வயதானத் தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தது. மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயதான தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப்புற்று அதன் கண்ணில்ப்பட்டது.

நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன? என்கிற எண்ணம் வந்தது. மெதுவாகப் பாம்புப்புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது. உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?என்று கேட்டது அந்த பாம்பு.

அதற்கு அந்த வயதானத் தவளை, என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றது. 

என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்? நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றது தவளை. பாம்பும் யோசித்தது. நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இப்படி தானாக வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.

கிணற்றுக்குள் சென்ற பாம்பும், அந்த வயதானத் தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் அழித்தது. கிணற்றுக்குள் இருந்த வயதான தவளையும் மகிழ்ச்சியுற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை.

பாம்பு வயதான தவளையைப் பார்த்து, உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டதால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டது. வயதானத் தவளையோ, நண்பரே! நீங்கள் எனக்கு உதவிதற்கு மிக்க நன்றி. எனக்கு இனிமேல் உங்களின் உதவி தேவையில்லை என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன் என்று அச்சுறுத்தியது.

வயதானத் தவளையும் பயந்து, தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அந்த வயதான தவளையின் மகனையும் சாப்பிட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற வயதானத் தவளையின் மனைவி, நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாம் இருவர் மட்டும்தான் மீதம் இருக்கிறோம். நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாம் இருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம் என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் ஏதாவது கொடு என்று கேட்டது. உடனே வயதானத் தவளை, நண்பரே! நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன் என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நிமிடங்கள் கழிந்த பின்பு, நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நான் வேகமாகச் சென்று தவளைகளை அழைத்து வருகிறேன் என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது. தன் பசிக்கு உணவு கொண்டு வரச்சென்ற வயதானத் தவளையும், அதனுடைய மனைவியும் திரும்ப வரவேயில்லை. பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, பல்லியாரே, அந்தக் வயதானத் தவளைக்கு நீங்களும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச்சொல் என்று தகவல் சொல்லி அனுப்பியது.

பல்லியும் அந்த வயதானத் தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது. அதற்கு அந்த வயதானத் தவளை பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன் என்று சொல்லி அனுப்பியது.

நீதி :
நட்பு நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

05.01.22

◆தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

◆பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடம் கரும்பு நேரடி கொள்முதல்: அரசின் வழிமுறைகள் வெளியீடு.

◆லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் புதிய பாலத்தைக் கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

◆நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளது.

◆பிரான்ஸில் புதியவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு: 46 உருமாற்றங்களுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.

◆புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகள் வெற்றி.

◆தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் அபாரம்.

Today's Headlines

  The Director of State Examinations has announced that students who have learning subjects through the Tamil language will be exempted from the Plus 2 examination fee.                                  

     Direct purchase of sugarcane from farmers for Pongal gift package:  Government guidelines regarding this is published.

  The construction of a new bridge by the Chinese army in the Pangong Lake area of ​​Ladakh has been confirmed by satellite photography.

 Nationwide cyber crimes against children increased by 261 percent in 2020.

  A new type of coronavirus discovered in France: Scientists report that there are 46 mutations.

  Pro Kabaddi League: Bengal Warriors and Patna teams won.

  Test against South Africa: Shardul Thakur from the Indian team outshines the play by taking 5 wickets.

Tuesday, January 04, 2022

January 04, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.01.22


திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண்: 737

குறள்:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

பொருள்:
ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்

பழமொழி :
A clean hand wants no washing


பொன் குடத்துக்கு பொட்டு வேண்டுமா?


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒலியாக இருக்க வேண்டும் எதிரொலியாக அல்ல எனவே எனது தனித்தன்மை எப்போதும் இழக்க மாட்டேன்.


2. ஆயத்தமே ஆயுதம் எனவே எப்போதும் எந்த காரியம் செய்யும் முன்பும் ஆயத்தமாகி செல்வேன்

பொன்மொழி :

வாழ்க்கையில் சேமிப்பை
ஒரு போதும் அலட்சியம்
செய்யாதீர்கள் சேமிப்பை
அலட்சியம் செய்பவர்கள்
தன் வாழ் நாளில் ஒரு
போதும் செழிப்பை
அடைய முடியாது.___ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :

1. இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த உதவி எண் எது? 

139. 

2. குருதிக் கொடை தருபவர்களுக்கு அக்குருதி மீண்டும் சுரக்க எத்தனை நாட்கள் ஆகும்?

 21 நாட்கள்.

English words & meanings :

complement - a thing that goes together well with something else. வேறொன்றுடன் நன்றாக பொருந்தும் பொருள். 

Compliment - a statement or action that shows admiration. பாராட்டு
ஆரோக்ய வாழ்வு :


ஆரோக்கிய வாழ்வு

*தேனின் நன்மைகள்*

1)மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் ஊறும்.


2) தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் , வாய்ப்புண் குணமாகும்.
கணினி யுகம் :

F 12 - Activate Editor. 

Ctrl + ' - Acute accent

ஜனவரி 04

லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்




லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.



உலக பிரெயில் நாள்






புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.
பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.
நீதிக்கதை

சிறந்தவர் யார் ?

ஒரு நாட்டின் மன்னன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க ஆலோசகரை நியமித்துக் கொள்ள விரும்பினான். அது பற்றி அவன் தன் அமைச்சரிடம் ஆலோசிக்க வந்தான். அரசே! நம் நாட்டில் அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்துறை, எனப் பலதுறைகளில் நன்கு படித்தவர்கள் இருக்கின்றனர். இப்பதவிக்கு அறிவிப்பு செய்தால் அவர்களில் பலர் தங்களைக் காண வருவர். அவர்களுக்குத் தேர்வு நடத்தி நன்கு படித்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.

நாடெங்கிலும் பறை சாற்றுவித்து அந்தரங்க ஆலோசகர் பதவிக்கு தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் தேர்வுக்கு வரலாம் என அறிவித்தார். மன்னர் குறிப்பிட்ட நாளில் பல இளைஞர்கள் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு நடந்த தேர்வில் இரு இளைஞர்கள் முன்னதாக வந்தனர். ஆனால், இருவரும் எல்லா விஷயத்திலும் சமமாக இருந்ததால் அவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்ய அமைச்சரை அணுகினார் மன்னர்.

இப்பதவிக்கு வெறும் புத்தகப்படிப்பு இருந்தால் மட்டும் போதாது. சிக்கலான பிரச்னைகளைச் சமாளித்து நல்ல முடிவு காணத் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கு மட்டும் பரீட்சை வைத்து அதில் தேர்ந்தவனைப் பதவிக்கு நியமியுங்கள் என்றார். மறுநாள் அமைச்சர் இருவரையும் அழைத்து, இன்று காலை என் நண்பரின் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவரது நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விவரிக்கலானார்.

என் நண்பர் இன்று காலை என்னிடம் கூறியதை அப்படியே கூறுகிறேன். என் நண்பர் வயதானவர். இதய நோயாளி. ஒரு நாள் இரவு அவர் பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டார். அந்தக் கனவில் அவர் ஒரு அடர்ந்த காட்டிற்குள் வழி தவறிப் போய் விட்டார். அவர் ஒரு இடத்தில் நான்கு பாதைகள் சேர்வதைக் கண்டார். மங்கலான இரவில் நட்சத்திர ஒளியில் அவர் அவற்றில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்றார். அங்கு சில சிங்கங்கள் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.

நண்பர் பயந்து வந்தவழியே ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார். இரண்டாவது பாதையில் பயமில்லாது நடந்து சென்றார். கொஞ்ச தூரத்தில் ஏதோ வெளிச்சம் இருந்தது கண்டு அங்கு சென்றார். அங்கு பல பாம்புப் புற்றுகள் இருப்பதையும் அவற்றின் மேல் பல பாம்புகள் படமெடுத்து ஆடுவதையும் கண்டார். அவற்றில் ஒன்று ஐந்து தலைநாகம். அவரைக் கண்ட ஐந்து தலைப்பாம்பு சீறவே, அவர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மீண்டும் நான்கு பாதைகள் சேரும் இடத்தை அடைந்தார்.

பிறகு அவர் மூன்றாவது பாதையில் நடந்து செல்லலானார். கொஞ்ச தூரம் சென்றதும் அது ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிந்தது. அங்கு பல மனித எலும்பு கூடுகள் இருப்பதைக் கண்டு மலைத்து நின்றார். அப்போது அந்த மலையில் ஒரு குகையிலிருந்து பயங்கர ராட்சஸன் ஒருவன் உறுமிக் கொண்டிருப்பதை கண்ட என் நண்பர் பயந்து வந்த வழியே திரும்பி ஓடி மறுபடியும் நான்கு பாதைகள் கூடும் இடத்தை அடைந்தார்.

இம்முறை அவர் நான்காவது பாதையில் சென்றார். அவர் கொஞ்ச தூரம் சென்றதும் தன் பின்னால் ராட்சஸன் வருவது கண்டு பயந்து வேகமாக ஓடினார். அவர் ஒரு பாறையின் விளிம்பை அடைந்து விட்டார். அங்கிருந்து போக வழியில்லை. பாறையின் கீழ்வெகு ஆழத்தில் தான் நிலப்பரப்பு தெரிந்தது. அவர் ராட்சஸனுக்கு பயந்து நின்ற போது கால்கள் நடுங்க பாறையிலிருந்து தவறி கீழே படுபாதாளப் பள்ளத்தில் விழுந்து விட்டார்.

அமைச்சர் தம் நண்பர் கண்ட இந்தக் கனவைக் கூறி, பார்த்தீர்களா எவ்வளவு பயங்கரமான கனவு என்று! இதய நோயாளியான என் நண்பர் இந்தக் கனவைக் கண்டு முடித்ததும் கண் விழித்தார். மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நின்றது. அவர் இறந்து போய்விட்டார் என்றார். அப்போது இருவரில் ஒருவர் பயந்து போய் மெதுவாய் தாழ்ந்த குரலில், கனவில் காணும் காட்சிகள் கூட மனிதனின் உடல் நலனை பாதிக்கின்றன. தங்களது நண்பர் நான்கு முறைகளில் பயந்து ஓடி இருக்கிறார். அந்தப் பயம் அவரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. கண் விழித்ததும் இதய நோயாளியான அவர் பயத்தால் இதயம் தாக்கப்பட்டு உயிரை இழந்திருக்க வேண்டும். உங்களது நண்பரின் பிரிவால் உங்களுக்குப் பெரும் துயரமே ஏற்பட்டுள்ளது என்றான். அதைக் கேட்ட பின் அமைச்சர் மற்றவரை பார்க்கவே அவர் சிரித்தவாறே, ஆகா! என்ன அருமையான கட்டுக்கதை என்றான். 

அமைச்சரும், கட்டுக்கதையா? ஏன் அப்படிக் கூறுகிறாய்? என்று சற்று கோபப்பட்டவர் போலக் கேட்டார். தங்கள் நண்பர் இந்த பயங்கரக் கனவைக் கண்டதும் உடனே கண் விழித்தார் என்றும் மறுவினாடியே அவரது இதயத்துடிப்பு நிற்கவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினீர்கள். நீங்களோ உங்கள் நண்பரே இந்தக் கனவை உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்கள் அது எப்படி முடியும்? அவர் தான் கனவைக் கண்டு கண் விழித்ததும் இறந்து போய்விட்டாரே. அதனால் அவர் எப்படி இந்தக் கனவைத் தாமே உங்களிடம் சொல்லி இருக்க முடியும். முடியவே முடியாது. அதனால்தான் இது கட்டுக்கதை என்றேன் என்றான். அமைச்சர் இரண்டாவது நபரை பாராட்டி அவனையே மன்னனின் அந்தரங்க ஆலோசகனாகத் தேர்ந்தெடுத்தார்.

நீதி :
புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள்

04.01.22

◆10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

◆கரோனாவைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணியாதவர்களுக்குத் தயக்கமின்றி அபராதம் விதிக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

◆முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் நேற்று தொடங்கியது.

◆15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது. 

◆மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலி்ந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10%இடஒதுக்கீட்டுக்கு குடும்பத்தின் ஆண்டு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயித்தது நியாயமானதுதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை - ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு.

◆ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது சென்னை.


◆இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.

◆இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான  தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.


Today's Headlines

  School Education Minister Anbil Magesh has said that there will be a direct Public examination for 10th and 12th class students.

 Health Secretary Radhakrishnan has directed district collectors and corporation commissioners to impose fines on those who do not wear masks to control corona.

  Counseling for postgraduate engineering courses started online yesterday.

 Vaccination work has started for 15- to 18-year-olds  across the country yesterday.

  The Central Government has said in the Supreme Court that it is reasonable to set a maximum annual family income limit of Rs 8 lakh for the 10% reservation for the economically disadvantaged forward caste in medical studies.

  Those who have not been vaccinated with booster dose are barred from traveling abroad - UAE order.

 ISL  Football: Chennai defeated Jamshedpur.

 -2nd Test between India and South Africa: Started yesterday in Johannesburg.

  South African team announces one-day cricket match against India.




Monday, December 20, 2021

Friday, September 17, 2021

September 17, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.21


 திருக்குறள் :

அதிகாரம்:ஒப்புரவு அறிதல்

திருக்குறள்: 214

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

முன்பின் அறியாத இடத்திற்கு செல்வதற்கு பலர் சொல்கிறபடி கேட்டுச் சென்றால் வழி தடுமாறிப் போவோம்.------ராமகிருஷ்ண பரமஹம்சர்

பொது அறிவு :

1.மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது? 

சென்னை மாவட்டம்.

2.பரப்பளவு அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது? 

விழுப்புரம்.


English words & meanings :

Wind - the natural movement of air

Wind - move in a series of twists and turns

ஆரோக்ய வாழ்வு :

பாதவெடிப்பு நீங்க சில டிப்ஸ்

1)வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.


2)தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.


3)வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.


4)கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.


5)மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.

கணினி யுகம் :

Ctrl + M - Indent the paragraph. 

Ctrl + T - Hanging indent

செப்டம்பர் 18 :

ரொனால்டோ அவர்களின் பிந்தநாள் 





ரொனால்டோ லூயிஸ் நசாரியோ டே லிமா (பிறப்பு: 22 செப்டம்பர் 1976), பொதுவாக ரொனால்டோ (Ronaldo) என அழைக்கப்படுகிறார், இவர் பிரேசிலைச் சேர்ந்த முழுநேரக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். ரொனால்டோ 1996, 1997 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்தந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான FIFA விருதை வென்றார்.


நீதிக்கதை

பஞ்சவர்ண கிளி

நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 

அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 

அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த  பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 

நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

18.09.21

◆சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

◆100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி நீலகிரி சாதனை: அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் சாத்தியமானதாக மாவட்ட ஆட்சியர் பெருமிதம்.

◆கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை.

◆மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

◆2 நாளில் ரூ.1100 கோடியைத் தாண்டியது ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை.

◆மகளிர் நலத்துறை அமைச்சகத்தில்கூட பெண் ஊழியர்கள் பணியாற்ற தடை: தலிபான்கள் அறிவிப்பு.

◆தேசிய மாணவர் படையை(என்சிசி) மறுசீரமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கிய உயர் மட்டக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

◆ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் வெற்றி பெற்றது.

Today's Headlines

📃 In Chennai,  wearing helmets in two-wheelers has increased from 72 percent to 86 percent, said Commissioner of Police Shankar Jive.

  📃 Nilgiris recorded  100 percent first dose vaccination: The District Collector is proudly announced that it is possible because of the cooperation of government officials.

📃  17 thousand cubic feet of water coming to Tamil Nadu from Karnataka dams on the 2nd day.

 📃A study by ICMR found that corona infections have a psychological impact on health workers, including doctors and nurses.

 📃 Ola electric scooter sales cross Rs 1100 crore in 2 days

 📃 Ban on female staff even in the Ministry of Women's Welfare announced by Taliban.

📃  Former India captain Mahendra Singh Dhoni and Anand Mahindra have been included in a high-level committee set up by the Union Defense Ministry to restructure the National Student Corps (NCC).

📃 Indian team won the first in Asian Volleyball Championship.

Total Pageviews

Search This Blog