Breaking

Showing posts with label School headmaster. Show all posts
Showing posts with label School headmaster. Show all posts

Friday, December 15, 2023

December 15, 2023

தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்



Giving additional workload to head teachers apart from teaching is not acceptable - High Court - தலைமை ஆசிரியர்களுக்கு கற்பித்தலைத் தவிர்த்து கூடுதல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது - உயர்நீதிமன்றம்... தலைமை ஆசிரியர்க ளுக்கும் , ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து , மடிக் கணினிக ளைப்பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை வியாழக்கி ழமை தெரிவித்தது . தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலா ராணி , மதுரை மாவட்டத் தைச்சேர்ந்தஅரசுப்பள்ளித்தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் தாக்கல்செய்தமனுக்கள் :

நாங்கள் பணிபுரிந்த பள்ளிக - ளில் மாணவர்களுக்கு வழங்குவ தற்காக வைக்கப்பட்டிருந்த இல வச மடிக் கணினிகள் திருடுபோ -யின. இந்தத் திருட்டை காரணம் காட்டி, எங்களுக்கு வழங்க வேண் - டிய ஓய்வூதியம், பணப் பலன்களை தர மறுக்கின்றனர் என அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஸ் ராவத் (தஞ்சாவூர்), சிவபிரசாத் (மதுரை) ஆகியோர் நீதிமன்றத்தில் உயர்நீதிமன்றம் நேரில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில், தமிழ கத்தில் 140 அரசுப்பள்ளிகளில் மடிக் கணினிகள் திருடுபோயிருப்பதாக புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என வாதிடப்பட் டது. இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மடிக் கணினிகள் திருட்டைக் கண்டறிய நவீன தொழில்நுட்ப வச திகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் கல்வித் துறை அதிகாரிகளும், காவல் துறை அதி காரிகளும் சரியாகச் செயல்படா மல் உறக்கத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் குளி ரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு, தலைமை ஆசிரியர்க ளுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்பித் தலைத் தவிர்த்து, மடிக் கணினிக ளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கூடு தல் பணிச் சுமை அளிப்பதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளாது என்ற நீதிபதி விசாரணையை ஜன. 4- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tuesday, October 24, 2023

October 24, 2023

அரசு பள்ளியில் அருங்காட்சியகம்; தலைமை ஆசிரியர் அசத்தல் முயற்சி



அரசு பள்ளியில் அருங்காட்சியகம்; தலைமை ஆசிரியர் அசத்தல் முயற்சி

தர்மபுரி அருகே, அரசு பள்ளி தலைமையாசிரியரின் முயற்சியால் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி அடுத்த நத்தஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முசோலினி. இவர், பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக அமைத்துள்ள அருங்காட்சியகம் வரவேற்பை பெற்றுள்ளது.முசோலினி கூறியதாவது:

நான் ஆங்கிலத்துறை ஆசிரியராக தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் பணியாற்றிய போது, எனக்கு சில சிலைகள் கிடைத்தன. அவற்றில், கடகத்துார் கோவில் அருகே கிடைத்த சேதமடைந்த ஒரு சோழர் காலத்து சிலை, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் உள்ளது.நம் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல வேண்டும். அதற்கு பழங்கால பொருட்களை சேகரிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பழங்கால பொருட்களை சேகரித்தேன். முதல் முறையாக, 2005ல் அவ்வையார் பள்ளியில் அருங்காட்சியகம் துவக்கினேன். அங்கு இட பற்றாக்குறை காரணமாக பல பொருட்களை பராமரிக்க முடியவில்லை.இடமாறுதல் பெற்று அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அங்கு அருங்காட்சியகம் அமைத்தேன். கடந்த 2018ல் பதவி உயர்வு பெற்று நத்தஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியராக ஆனேன்.இதையடுத்து, 2019ல் பழங்கால பொருட்களின் மதிப்பை அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்துறை அலுவலர் உட்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெற்று, பள்ளி வளாக மாடியில் அருங்காட்சியகம் அமைத்தேன். இதில், நான் சேகரித்த நான்கு பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி, தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணம் ஓலைச்சுவடி, திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடு களிமண் அச்சு.கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விஜயநகர பேரரசு கால சிலைகள், முகலாய மன்னர் பயன்படுத்திய இரும்பு வாள் உட்பட, பல்வேறு பழங்கால பொருட்கள் உள்ளன.மான் கொம்பு, 50 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய டேப் ரிக்கார்டர், சினிமா எடுக்க பயன்பட்ட ரிக்கார்டர், ஒலி ரிக்கார்டுகள், கிராம போன், 16 எம்எம் சினிமா பிலிம் புரஜக்டர், ரோனியோ மிஷின் என தற்போதைய 2கே கிட்ஸ் பார்க்காத பொருட்களையும் சேகரித்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளேன்.எங்கள் பள்ளி மாணவர்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பார்த்து, பழங்கால பெருமைகளையும், வரலாற்றையும் அறிந்து வருகின்றனர். மற்ற அரசு, தனியார் பள்ளி மாணவர்களும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 22, 2023

September 22, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!



High School Headmaster's Promotion Appeal Case Dismissed - Madras High Court Judgment Copy! - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!

CLICK HERE TO DOWNLOAD உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல் PDF

Monday, July 03, 2023

Tuesday, March 29, 2022

March 29, 2022

சக ஆசிரியையிடம் 16 லட்சம் மோசடி - பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை

சக ஆசிரியையிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த செட்டியூரணி பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.கோவில்பட்டி சுபா நகரை சேர்ந்தவர் சுப்பு சுந்தரவடிவு (50), கோவில்பட்டி வெள்ளையம்மாள் நினைவு துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இதே பள்ளியில் சோமு (53) என்பவரும் ஆசிரியையாக வேலை பார்த்தார். 2014ல் சுப்புசுந்தரவடிவு விருப்ப ஓய்வு பெற்றார்.

இதையும் படிக்க | TNPSC இணையவழி விண்ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை - செய்தி வெளியீடு

இதன் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.16 லட்சத்தை தருமாறும், விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் சோமு கூறினார். அதன்படி ரூ.16 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து சுப்புசுந்தரவடிவு கேட்டபோது 2018ல் சோமு, ரூ.16 லட்சத்திற்கான செக் கொடுத்தார். அதனை வங்கியில் மாற்ற முயன்ற போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து சோமு மீது சுப்புசுந்தரவடிவு கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் விசாரித்து, சோமுவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு மாதத்திற்குள் ரூ.16 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும், இல்லையெனில் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நேற்று தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற ஆசிரியை சோமு, தற்போது தூத்துக்குடி மாவட்டம் செட்டியூரணியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews

Search This Blog