Admission Guidelines
March 09, 2026
Showing posts with label admission approval. Show all posts
Showing posts with label admission approval. Show all posts
Monday, March 09, 2026
Friday, July 11, 2025
Tuesday, March 18, 2025
Sunday, January 19, 2025
Wednesday, March 27, 2024
Monday, March 11, 2024
Monday, April 17, 2023
Tamilnadu government school
April 17, 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்
Admission of students from 1st to 9th class in Tamilnadu government schools has started - தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.
அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.
அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
Saturday, April 15, 2023
private medical colleges
April 15, 2023
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 13 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சாராத 13 பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது, என கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன்படி 3 ஆண்டு பிஎஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், சுவாச சிகிச்சை, அறுவை அரங்கம், மயக்க மருந்து தொழில்நுட்பம் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் ஆகிய 6 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும், 2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர், மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர், ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர், எலும்பியல் தொழில்நுட்பவியலாளர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த சேர்க்கை சம்பந்தமான விவரங்களை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக் கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவல கத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, February 23, 2023
Supreme Court orders
February 23, 2023
மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த வேலூர் பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த வேலூர் பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு சேர்க்கை கோரி வேலூரில் உள்ள மிஷனரி பள்ளியை தாய் நாடியுள்ளார். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர்.
Monday, January 23, 2023
ENGINEERING
January 23, 2023
இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம்
இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம் Engg., Time to get college admission approval
சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.
பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.
இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
