Breaking

Showing posts with label PLEDGES. Show all posts
Showing posts with label PLEDGES. Show all posts

Tuesday, October 17, 2023

October 17, 2023

குழந்தை திருமணம்; அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!



குழந்தை திருமணம்; அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு!

’குழந்தை திருமணம் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளிகளில் இன்று வழிபாட்டுக் கூட்டத்தின்போது, ‘குழந்தை திருமணங்கள் இல்லா’ உறுதிமொழியை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாணவர்கள், ‘’இந்த உறுதி மொழியின்போது, எனது பகுதியிலோ சமூகத்திலோ குழந்தை திருமணம் நடப்பதாக தெரியவந்தால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

எனது சுற்றுப் புறத்தில், சமூகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வேன். எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், கல்விக்காகவும் செயல்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்’’ என உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள் படிவங்களில் கையெழுத்திட்டனர்.

Sunday, October 15, 2023

October 15, 2023

பள்ளிகளில் நாளை குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க உத்தரவு

பள்ளிகளில் நாளை குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க உத்தரவு Schools to take pledge against child marriage tomorrow

சென்னை, அக். 14: தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளில் திங்கள்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திரும ணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள் ளது.

இதையும் படிக்க | குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு - இயக்குநர் உத்தரவு

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: குழந்தைத் திருமணம் இல் லாத தமிழகம் எனும் நிலையை உறுதிபடுத்துவதற்காக மாநில அர சால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க சமூகநலத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான உறுதிமொழிகள் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளிலும் திங்கள்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்க வேண் டும். இதுதொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | குழந்தைத் திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி

Wednesday, October 11, 2023

October 11, 2023

இன்று 11.10.2023 அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: உறுதிமொழி

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்./எம்/இ2/2023, நாள்.04.10.2023

பொருள்:

பள்ளிக் கல்வி - வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி 2023 ஆம் கல்வியாண்டில் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இறைவணக்க (பிரேயர்) நேரத்தில் வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுத்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. -

பார்வை:

செயலாளர், வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா சென்னை அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனு நாள்.07.08.2023.


பார்வையில் காணும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா அமைப்பின் சார்பாக 1996 ஆம் ஆண்டு முதல் வெண்புள்ளிகள் நோயல்ல, பிறருக்கு தொற்றாது, பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை, கருத்தரங்குகள், மனிதசங்கிலிகள், பேரணிகள், மாராத்தான்கள் என் பல்வேறு வடிவங்களில் வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் பொதுமக்களிடமும் பரப்பி வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக 2023 இல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து, எதிர்வரும் 11.10.2023 அன்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் எதிர்வரும் 11.10.2023 அன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: உறுதிமொழி உறுதிமொழி

லூக்கோடெர்மா விட்டிலைகோ வை தமிழில் வெண்புள்ளிகள் என்றே அழைக்க வேண்டும்.

வெண்குஷ்டம் என்று தவறாக அழைப்பதை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதை நானறிவேன்.

வெண்புள்ளிகள் உள்ள மாணவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்க்க மறுப்பதோ பாரபட்சமாக நடத்துவதோ கூடாது. அப்படி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை நானறிவேன்.

வெண்புள்ளிகள் நோயல்ல பிறருக்கு தொற்றாது

பரம்பரை பரம்பரையாக வராது என்ற அறிவியல் உண்மையை வெண்புள்ளிகள் உள்ளவர்களிடமும் என் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறுவேன்

வெண்புள்ளிகள் விழிப்புணர்வு பெற்ற உலகின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்


Sunday, November 13, 2022

November 13, 2022

நாளை ( 14.11.22 ) அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டிய சமூக முன்னேற்ற உறுதிமொழி

சமூக முன்னேற்ற உறுதிமொழி ( 14.11.22 ) அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும்.

அனைத்துத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், அனைத்துக் குழந்தைகளும், 14.11.22 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுத்தல் வேண்டும்.

உறுதி மொழி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆகிய நாங்கள் மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் உடன் நிற்போம் என்றும் அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார பண்பாட்டு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும் சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்த்துகின்றோம்

> அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்

மேலே குறிப்பிட்ட உறுதி மொழியினை அனைத்து தொடக்க,நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 14.11.2022 அன்று காலை பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் அனைத்து குழந்கைகளும் உறுதி மொழியினை ஏற்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.

Thursday, December 09, 2021

December 09, 2021

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட உறுதிமொழி

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர் / ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி

Total Pageviews

Search This Blog