Thursday, August 14, 2025
Wednesday, April 02, 2025
Tuesday, January 21, 2025
Wednesday, March 27, 2024
Wednesday, March 20, 2024
Monday, March 11, 2024
Monday, March 04, 2024
Saturday, March 02, 2024
Thursday, February 22, 2024
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
Anbil Mages instructs officials, teachers to increase student enrollment in government schools அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்
2024-2025 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச்செய்யும் மிகப்பெரிய ஆயுதம்”என்ற மறைந்த முதல்வர் கருணாநிதியின் கூற்றை மெய்ப்பித்திடும் வகையில் தமிழக முதல்வர் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் கல்வி வளர்ச்சியில் நம் தமிழகம் முன்னிலை பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, தொடங்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெற்றிநடை போட்டு வருவதைக் காணலாம். கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழக முதல்வர் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தியுள்ளார். எந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளதோ அதை மனதிற்கொண்டு, அந்நோக்கத்தைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை செலவாகக் கருதாமல் கல்விக்கான முதலீடாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனை பள்ளிக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
மாணவர் நலமே மாநில வளம் என்னும் உயரிய எண்ணத்தோடு செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறைக்கு 2021-22 –ஆம் நிதியாண்டுக்கு ரூபாய். 32,599.54 கோடியும்; 2022-23-ஆம் நிதியாண்டுக்கு ரூ.36,895.89 கோடியும்; 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ.40,299.32 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளார். நடப்பு ஆண்டில் ரூபாய். 44,042 கோடி ஒதுக்கியுள்ளார். ஆக மொத்தம் ரூபாய். 1,53,796 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வித்துறைக்கென இதுவரை 57-திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயரும் வகையில் மிக பெரிய வளர்ச்சியை கல்வித்துறை பெற்றுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளது.இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தால் கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தேக்க நிலை முற்றிலும் குறைந்துள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. “நான் முதல்வன்” திட்டத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில், பலர் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.
கலைத்திருவிழாவின் மூலம், மாணவர்களிடத்தில் பொதிந்துள்ள பல்வகை ஆற்றலை வெளிக்கொணர்கின்ற சூழல் உருவாகியுள்ளது. “நம்பள்ளி நம்பெருமை” திட்டத்தினால் அரசுப் பள்ளிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” இந்திய ஒன்றியத்திலேயே, முதன்முதலாக நம் தமிழகத்தில் தான் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பள்ளிக்கு வருகை கூடியுள்ளதோடு கற்கும் ஆர்வமும் கூடியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
இதன் மூலம் “வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்“ என்ற மகாகவியின் கனவு நிறைவேறியிருக்கிறது. “மணற்கேணித் திட்டம்” – நன்கு திட்டமிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய கற்றல் பயணத்துக்கு வழிவகுத்து கற்றனைத்தூறும் அறிவைச் சுரந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் மனதுக்கு மகிழ்வூட்டும் கல்விச் சுற்றுலா, ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்கள், தமிழ்மொழியின் ஆற்றலை பெருமையை மாணவர்கள் விரும்பி அறிந்திட தமிழ்க்கூடல், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி, வாசிப்பு இயக்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.“விழுதுகள்” திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மேனாள் மாணவர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பட அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கென ரூபாய். 7,500 கோடி மதிப்பீட்டில் “பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” என்ற மாபெரும் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்திட அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று இதுவரை, 2487 கோடி மதிப்பிலான 3601 வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிதியாண்டில் மேலும் ரூபாய். ரூ.1,000 கோடி பள்ளிக் கட்டமைப்புக்கென ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 38 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் உயர்தர கற்றல், கற்பித்தல் சூழலை உருவாக்கவும், அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech labs) மற்றும் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது, இதனால் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் பணிகள் நடைபெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Monday, April 17, 2023
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.
அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
Saturday, April 15, 2023
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தெற்காசிய அளவில், செயல் திட்டத்துடன் கூடிய கற்றலை பள்ளி மாணவா்களுக்கு அளித்திடும் வகையில் க்ரூ நிறுவனம் உலகின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழக பள்ளிகள் மற்றும் மாணவா்களை இணைத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதல் 20 இடங்களுக்குள் தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: கல்வி, மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நாடுதான் உலகின் வளா்ச்சி பெற்ற நாடாக அமையும். இதனை உணா்ந்துதான் தமிழக அரசானது கல்வி மற்றும் மருத்துவத்துக்கு பிரத்யேக கவனம் செலுத்தி, ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது.
குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் மாணவா்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செயல் திட்ட வடிவில் மட்டுமின்றி செய்முறை வழியிலான கல்வியை அளிக்கும் வகையில் பள்ளிகள் தோறும் வானவில் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நடமாடும் ஸ்டெம் ஆய்வகங்கள் வழியாக செய்முறை வழியிலான கற்றலை பெறுகின்றனா். இதுமட்டுமல்லாது உலக நாடுகள் வியக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகள் என்பது வெறும் மதிப்பெண்கள் பெற்றுத்தருபவையாக இருத்தல் கூடாது. மனித பண்பு மிக்க மாணவா்களை உருவாக்கித்தர வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்திறனை கண்டறிந்து வெளிக்கொணா்வதே பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் கூட்டு பொறுப்பாக இருத்தல் வேண்டும். 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கல்வித் திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. விரைவில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம் என்றாா் அமைச்சா்.
க்ரூ கல்வி திட்டத்தின் நிறுவனா் அனில் சீனிவாசன் பேசுகையில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களில் இந்தியாவைச் சோ்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். அவா்ளது திறனை தமிழக மாணவா்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் க்ரூ கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பன்னாட்டு ஆசிரியா்களின் கற்றல் திறனையும், திட்ட செயல்பாடுகளையும் பின்பற்றி மாணவா்களின் தரநிலை உயா்த்தப்படும் என்றாா்.
முன்னதாக, விழாவுக்கு, பள்ளியின் செயலா் கோ.மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ்.அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வித்யாலெட்சுமி, பள்ளியின் டீன் ஆா்.கணேஷ், முதல்வா் எஸ். பத்மா சீனிவாசன், துணை முதல்வா்கள் பி. ரேகா, எஸ். ரேணுகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பள்ளியின் ஸ்டெம் ஆய்வகத்தை பாா்வையிட்ட அமைச்சா், மாணவா்களுடைய செயல்திட்டங்களைப் பற்றி கேட்டறிந்தாா்.
விழாவில், ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவிகள், சந்தானம் வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என 800-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி சந்தனம் வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், (இடமிருந்து), பள்ளியின் இயக்குநா் எஸ். அபா்ணா, தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், க்ரு கல்வித் திட்டத்தின் நிறுவனா் அனில்சீனி
Tuesday, April 11, 2023
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம் - Admissions to Government Schools - Scheduled to begin next week
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளும் சேர்க்கைப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, வரும் கல்வியாண்டுக்கான(2023-24) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது,
‘‘அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கைக்கு அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்’’ என்றனர்.
Thursday, October 20, 2022
தமிழகத்தில் இலவச சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீண் செலவு: சிஏஜி தகவல்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது தேவையை அறிந்துகொள்ளாமல் வழங்கப்படும் சீருடைகளால் தமிழக அரசுக்கு ரூ.4.13 கோடி தேவையற்ற செலவினம் ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-மார்ச் வரையிலான நிதியாண்டிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 4 சீருடைகள் இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த சீருடைகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 47.89 லட்சம். இவர்களில் 38.41 லட்சம் பேர் (80 விழுக்காடு) மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே இலவச சீருடைக்கு தகுதி பெற்றுள்ளனர். 2018-21 ஆண்டு இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு சராசரியாக ரூ.409.63 கோடி செலவினம் ஏற்படுகிறது.
2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 மாவட்டங்களில் உள்ள 1425 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடைப் பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது தேவையை அறிந்துகொள்ளாமல் வழங்கப்படும் சீருடைகளால் தமிழக அரசுக்கு ரூ.4.13 கோடி தேவையற்ற செலவினம் ஏற்பட்டுள்ளது. மேலும், சீருடையை ஓரளவு மட்டுமே பயண்படுத்திய மாணவர்களுக்கு ரூ.2.25 கோடி மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு திட்ட வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யலாம் மற்றும் இலவச சீருடைகளுக்கு குறிப்பிட்ட சீருடை கேட்புக் கோரிக்கைகள் வழங்கும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடைகளை வழங்கலாம். வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் மட்டுமே இலவச சீருடை அணிய அனுமதிக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்கலாம் என்று தணிக்கைத்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 14, 2022
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்திறன் மதிப்பீடு: அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய, அனைத்து ஆசிரியர்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வோர் ஆசிரியரும் தங்கள் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து, மாணவர் கற்றல் அடைவு நிலையைமேம்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த செயல்திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து, அதை முழுமையாகப் பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்ய,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதித்தர வேண்டும்.
சுயமதிப்பீட்டுக்கான வழிகாட்டுதல்களை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை ஆரம்ப நிலை முதல் மேல்நிலை வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும். இதற்கான மாதிரிப் படிவங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆசிரியர் செயல்திறன் மதிப்பீட்டு பணிக்காக ரூ.30.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, பள்ளிகளில் உள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, September 06, 2022
'அரசு பள்ளிகளில் தரமான இலவச கல்வி வேண்டும்!'
"ஏழை, பணக்காரர் என அனைத்து மாணவர் களுக்கும், தரமான இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்." என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னையில் நடந்த, 'புதுமைப் பெண்' திட் டம் மற்றும் மாதிரி பள்ளிகள் துவக்க விழாவில் கெஜ்ரிவால் பேசியதாவது:
கல்லுாரி செல்லும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், 'புதுமைப் பெண்' திட் டம் புரட்சிகரமானது. மாணவியர் பொருளாதார பற்றாக்குறையால், உயர் கல்வியை இடையி லேயே நிறுத்துவது, இந்த திட்டத்தால் குறையும். இந்தியாவில், 27 கோடி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
அவர்களில், 66 சதவீதமான, 18 கோடி பேர். அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர். ஆனால், தமிழகம், டில்லி உட்பட சில மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில், பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது.
தனியார் பள்ளிகளை போன்ற தரமான கல் வியை, அரசு பள்ளிகளில் வழங்கும் வரை, வளர்ந்த நாடாகும் கனவு நனவாகாது. போது, அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் தற் இணைந்து, கல்வி திட்டங்களை செயல்படுத்து கின்றன. இதேநிலை நீடித்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Thursday, August 25, 2022
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 72 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் அரசு கையாண்ட முறையால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் இருந்த அச்சம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறேன் என்ற போர்வையில், தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதல் உயர் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களிடம் இருந்து கறாராக கட்டணம் வசூலித்தனர்.
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டதால், வருவாய் குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டதும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவ மாணவியர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து,பாதியில் படிப்பை நிறுத்தியவர்களின் கணக்கெடுப்பை பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. அதில் இனம் காணப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள், மற்றும் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்தனர்.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் படித்து கட்டண பாக்கி செலுத்த முடியாத நிலையில் இருந்தவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கேற்ப பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்று இல்லாவிட்டாலும் சேர்க்கை வழங்க அரசு உத்தரவிட்டது. அதனால் அதிக அளவில் மாணவர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிப்படியாக சேர்ந்தனர். கடந்த ஆண்டு வரை சுமார் 52 லட்சம் படித்து வந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து சுமார் 72 லட்சமாக தற்போது படித்து வருகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பாடங்களை நல்ல முறையில் நடத்தி முடிக்க வசதியாக ஆசிரியர்களின் பணிகளை குறைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக 11 பதிவேடுகளை நீக்கவும், 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக இணைய வழியில் மட்டும் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tuesday, August 16, 2022
அரசு பள்ளிகளில் அட்மிஷன்: அவகாசம் நீட்டிப்பு
The school education department has given permission to conduct admissions in government schools till next month.
In order to increase enrollment in government schools, the Department of School Education has taken various initiatives. Due to this, a section of students from private schools are joining government schools.
However, in the current academic year, the school education department has given permission to conduct the admission of students in all classes in government schools till next month. The Principal Education Officers have been advised to admit the students till the commencement of the quarterly examination in September.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பரில் காலாண்டு தேர்வு துவங்குவதற்கு முன்பு வரை, மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





