Breaking

Showing posts with label Application Form. Show all posts
Showing posts with label Application Form. Show all posts

Thursday, June 25, 2026

Monday, August 01, 2022

August 01, 2022

சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் (அ) ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும்

சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயர்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பைத் தொடரலாம். அதன்படி, 10ம்வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள், 12ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்த இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பல் நுழைவு வெளியேறுதல் சுதந்திரமும் (Multiple Entry Exit options) இந்த பாடத்திட்டத்தில் அளிக்கப்பட்ட்டது.

அதன்படி, அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவர்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை, நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக (BS in Data Science and Applications) சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் பிஎஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 19 ஆகஸ்ட் 2022 கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.

Monday, July 11, 2022

July 11, 2022

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக் கல்லூரியின் மவுசு... ஒரே நேரத்தில் இத்தனை விண்ணப்பங்களா?

கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி சிபிஎஸ்இ பள்ளி தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பலர் விண்ணப்பித்தனர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Saturday, July 09, 2022

July 09, 2022

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கும் அரசு, அரசு மானியம்பெறும், அரசு மானியம்பெறாத கல்விப்பயிற்சி கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்க சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.பி.எட். (உடற்கல்வி) படிக்க விரும்பும் மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. அல்லது 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.

கல்வித்துறை, பல்கலைக்கழகம் அல்லது இளைஞா் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடுசெய்திருந்த தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவா்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை செலுத்தும் முறை, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவிவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் பெற 080-22483140, 22483145 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மாவட்ட கல்விப்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது

Monday, July 04, 2022

July 04, 2022

தற்காலிக ஆசிரியர் பணி - Temporary Teachers Post - Application Form - PDF

13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.

தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

Temporary Teachers Post - Application Form -

CLICK HERE TO DOWNLOAD

Saturday, July 02, 2022

July 02, 2022

நகராட்சி சார்பில் பாடல் மற்றும் சுவர் ஓவியப்போட்டி; முதல் பரிசு ரூ.20 ஆயிரம்

திருவேற்காடு நகராட்சி சார்பில் பாடல் மற்றும் சுவர் ஓவியப்போட்டி நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவேற்காடு நகராட்சி சார்பில் மாபெரும் பாட்டு மற்றும் சுவர் ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சிகளின் சார்பில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ‘என் குப்பை எனது பொறுப்பு’ - (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்காக மரம் வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்போம் ஆகிய தலைப்புகளில் பாடல்கள் இருக்க வேண்டும். செங்கல்பட்டு மண்டலத்துக்குட்பட்ட நகராட்சியைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். சர்ச்சைக்குரிய கருத்துப்பதிவுகள் தவிர்க்க வேண்டும். பாடல்கள் இசையுடன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். பாடலை வருகிற ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட வலைத்தள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதேபோல் சுவர் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு ஓவியம் வரைவதற்கான இடம் மற்றும் முன் அனுமதி பெறவேண்டும். மேலும், சுவர் ஓவியம் வரைவதற்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செயய்யவேண்டும். அதன் ஒரு நகலினை நகராட்சி ஆணையருக்கு ஜூலை 6ம் தேதிக்குள் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். நடுவர்களின் இறுதி திர்ப்பே முடிவானது. பாடல் மற்றும் சுவர் ஓவியம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம், 2ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 5 பேருக்கு ரூ.1000 வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 9ம் தேதி பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி நிர்வாக மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog