Breaking

Showing posts with label School. Show all posts
Showing posts with label School. Show all posts

Sunday, February 26, 2023

February 26, 2023

வகுப்பறை, பள்ளி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வை படிவங்கள்

வகுப்பறை, பள்ளி, எண்ணும் எழுத்தும் வகுப்பறை பார்வை படிவங்கள் Classroom, school, numeracy and literacy classroom vision forms

கீழே போடப்பட்டுள்ள படிவங்களில் குறிப்பிட்டுள்ளவாறு பள்ளி பார்வை மற்றும் ஆய்வு இருக்கும். எனவே அனைத்துப் பள்ளிகளிலும் இப்படிவங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வகுப்பறை பார்வை படிவங்கள் ஆசிரியர் எண்ணிக்கைக்கேற்ப எடுத்து வைத்துக் கொள்ளவும். வட்டாரக் கல்வி அலுவலர்களின் பார்வையின் போது கொடுக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Class Visit Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Ennum Ezhuthum Visit Report Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

BEO School Visit Form - CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Tuesday, February 07, 2023

February 07, 2023

சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு!

சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு! விழுப்புரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம்

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப.. அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். இரயில் நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைக்கவும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் தொடர்பாக கீழ்கானும் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புடன் செயல்பட கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி எச்சரித்துள்ளார்.

1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit card / Debit card Number OTP/CVV எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2. Online மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி LINK, விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

3. இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.

4. புகழ் பெற்ற நிறுவனங்கள் பெயர்களை பயன்படுத்தி (Naptol, Meesho) உங்களுக்கு பரிசு பொருள் விழுந்துள்தாக குறுஞ்செய்தி (அ) தபால்களை நம்பி ஏமாறாதீர்

. 5. OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம். 6. சமூக வளைத்ங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது மேலும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பணஉதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பணஉதவி செய்ய வேண்டாம்.

7. Unknown Link, Message, Call போன்றவற்றிற்க்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.

8. Any Desk, Quick support போன்ற Remote Access App களை பதிவறக்கம் செய்ய வேண்டாம்.

9. இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி உங்கள் தொடர்புடைய பணபரிவர்த்தணையை தவிற்க்கவும். வங்கி கணக்குடன்

10.அறிமுகம் இல்லாத நபர்களின் Whatsapp, Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர்கள்.

11.SWIGGY, ZOMOTO போன்ற நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை Cancel செய்ய தங்கள் மொபைலுக்கு வரும் OTP கேட்டால் தரவேண்டாம்.

12.உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் Whatsapp மற்றும் சமூக வளைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து Gift பொருள்கள் அனுப்புவதாக கூறினால் நம்பவேண்டாம். 13. FedEx போன்ற கூரியர் நிறுவனத்திலிருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

தகைசால் பள்ளிகளின் சிறப்பம்சம் என்ன

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர். அந்த வகையில் 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது.

ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும் , இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படும். அந்தவகையில் முதற்கட்டமாக திருவள்ளூர், சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு , இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் , விழுப்புரம் ,தருமபுரி ,சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் , திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.

👉ஸ்மார்ட் வகுப்பறைகள்

👉விளையாட்டுப் பயிற்சிகள்

👉வாசிப்பு இயக்கம்

👉கலை , இசை , நாடகப் பயிற்சிகள்

👉உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்

👉கலையரங்கம்

👉ஆசிரியர்களுக்குப் பயிற்சி

👉படைப்பாற்றலை வளர்த்தல்

Tuesday, August 30, 2022

August 30, 2022

பள்ளிகளுக்கான நிலுவைத் தொகையை அந்தந்த கல்வியாண்டிலேயே வழங்க வலியுறுத்தல்

பள்ளிகளுக்கான நிலுவைத் தொகையை அந்தந்த கல்வியாண்டிலேயே வழங்க வேண்டும்: மழலையா் பள்ளிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அந்தந்த கல்வியாண்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் வேலூா் மாவட்ட தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் முரளி, செயலா் சிவபெருமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் இந்தத் தொகையை அதே கல்வியாண்டில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு சுகாதாரச் சான்றிதழை இணையதளம் வழியாக பெற அரசு வழிவகை செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பள்ளிகளின் புதுப்பித்தல், கருத்துருக்கள் ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.

மாணவா்களை மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியிலும் சோ்க்கை செய்ய அனுமதிக்கக் கூடாது. பாலா் வகுப்பு, எல்கேஜி, யுகேஜி மாணவா்களுக்கு ஆதாா் எண் இணைக்கத் தடை விதிக்க வேண்டும்.

ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை மூலம் அனுமதி பெற்று பல ஆண்டுகளாக இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் டிடிசிபி-இல் இருந்து அரசு விலக்களிக்க வேண்டும். இனி புதிய பள்ளிகளுக்கு மட்டுமே டிடிசிபி அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, July 09, 2022

July 09, 2022

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி, உடற்கல்வி, மழலையா் கல்வி பட்டயப் படிப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கும் அரசு, அரசு மானியம்பெறும், அரசு மானியம்பெறாத கல்விப்பயிற்சி கல்லூரிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் ஆரம்பக்கல்வி (டி.எல்.இ.டி.), உடற்கல்வி (டி.பி.இ.டி.), மழலையா் கல்வி (டி.பி.எஸ்.இ.) பட்டயப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்க சோ்க்கை பெறுவதற்கு தகுதியான மாணவா்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டி.பி.எட். (உடற்கல்வி) படிக்க விரும்பும் மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. அல்லது 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.

கல்வித்துறை, பல்கலைக்கழகம் அல்லது இளைஞா் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடுசெய்திருந்த தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்கும் மாணவா்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானதாகும்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை செலுத்தும் முறை, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்டவிவரங்களை அறிந்துகொள்ள இணையதளத்தை அணுகலாம். மேலும் விவரங்கள் பெற 080-22483140, 22483145 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மாவட்ட கல்விப்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது

Friday, July 01, 2022

July 01, 2022

அரசுப் பள்ளி வகுப்பறையை சொந்த செலவில் சீரமைத்த ஆசிரியா்

திருக்குவளை அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் தாம் பணியாற்றும் பள்ளியில் வகுப்பறையை ரூ. 50 ஆயிரம் செலவு செய்து சீரமைத்து கொடுத்துள்ளாா்.

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவா் அருள்ஜோதி. பசுமை சாா்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு, அண்மையில் தமிழக அரசு சாா்பில் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தது. இந்நிலையில், இவா் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் ரூ. 50 ஆயிரத்தில் தாம் பணியாற்றும் பள்ளியில், தரைதளம் சேதமடைந்திருந்த வகுப்பறையை டைல்ஸ் பதித்தும், புதிய ஜன்னல்கள் வைத்தும், வகுப்பறை முழுவதும் வண்ணப்பூச்சு செய்து கொடுத்துள்ளாா். சீரமைப்பு செய்த வகுப்பறையை பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். இதில் ஆசிரியா்கள் லோகநாதன், செல்வரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து, ஆசிரியா் அருள்ஜோதி கூறியது: வளா்ந்து வரும் கிராமப்புற அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த நகா்ப்புற கொடையாளா்கள் மற்றும் தொழிலதிபா்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் நகா்புற பள்ளிகளுக்கு நிகராக கிராமப்புற அரசுப் பள்ளிகளும் உட்புற கட்டமைப்பிலும், தரத்திலும் உயா்ந்து விளங்கும் என்றாா்.

Friday, March 18, 2022

March 18, 2022

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் (HiTech Lab) தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Thursday, March 17, 2022

March 17, 2022

பள்ளி பார்வை - சரிபார்ப்பு பட்டியல்!

பள்ளி பார்வை - சரிபார்ப்பு பட்டியல்!

அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர்கள் சரியாக வைத்திருக்க வேண்டியவை-- சரிபார்ப்பு பட்டியல் :

Tuesday, March 08, 2022

March 08, 2022

தமிழகத்தில் 31,214 பள்ளிகளுக்கு 2ம் கட்டமாக ரூ.3,895.15 லட்சம் மானிய தொகை விடுவிப்பு: மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

தமிழகத்தில் 31,214 பள்ளிகளுக்கு 2ம் கட்டமாக ரூ.3,895.15 லட்சம் மானிய தொகை விடுவிப்பு: மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.!

மாநிலம் முழுவதும் உள்ள 31,214 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு 2வது கட்ட மானிய தொகையான ரூ.3,895.15 லட்சம் நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு தொடக்க நிலை, நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும், மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும், பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒன்றிய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2021-22ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக 2019-20ம் ஆண்டில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 31,214 அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளிகளுக்கு ரூ.7,790.3 லட்சம் பள்ளி மானியமாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே , அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவீதம் முதல் தவணையாக கடந்த 22.10.2021 அன்று அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளிகளுக்கும் ₹3895.15 லட்சம் மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக 50 சதவீதம் மீதமுள்ள தொகையான ரூ.3895.15 லட்சம் மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை களைய இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுவிக்கப்படும் நிதியில் 25 சதவீதத்தை அந்தந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர குறைதீர் கற்றல் நடைபெறும் பயன்படுத்த தேவையான எழுதுபொருட்கள் வழங்கிட வேண்டும். பள்ளிகளுக்கு உடனடியாக நிதியினை விடுவிக்கவும் மேற்காண் வழிகாட்டுதலுடன் ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமைக்கு எமிஸ் இணையதள பதிவுகளை மேற்கொள்ள அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி, மாநகராட்சி, நலத்துறைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் தினமும் பிற்பகல் 2.00 மணிக்குள் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செலவினம் மேற்கொள்வதை உறுதி செய்து செலவின விவரத்தை பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மானியத் தொகை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் பெற்று, மாவட்ட அளவில் தொகுத்து மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு வரும் 4ம் தேதிக்குள் தவறாது அனுப்பி வைக்க அனைத்து மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Monday, March 07, 2022

March 07, 2022

கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

1-8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 4- ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

Thursday, March 03, 2022

March 03, 2022

புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி பள்ளிப் பொது தேர்வில் மாற்றம்

புதிய கல்வி கொள்கைப்படி திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிக்க | தேசிய சட்டப்பல்கலை மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில் 69 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இதற்காக மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் கூடுத லாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல் மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும். இந்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி கூடுதலாக தொழிற்கல்வி பாடத்துக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 10ம் வகுப்புக்கு மே 21; பிளஸ் 2க்கு மே 28ம் தேதி திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

புதிய கல்வி கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்கள் மத்திய அரசின் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளில் இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுள்ளன.

'தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம்' என அரசு அறிவித்தாலும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கி உள்ளன.

Wednesday, March 02, 2022

March 02, 2022

2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இதையும் படிக்க | இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை

பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்பட்டது. புன்னகையுடன் இன்றைய நாளைத் தொடங்கினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. பல மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் உள்ள மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டதை ஒரு பண்டிகை போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

முதல் சில வாரங்களுக்கு மாணவர்கள் சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Saturday, February 26, 2022

February 26, 2022

அரசு பள்ளிகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள்

மாணவ, மாணவிகள் கணிதம் மற்றும் அறிவியலில் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கத்தில் பூண்டி ஒன்றியத்தில் உள்ள 16 அரசு பள்ளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவன பங்களிப்புடன் தொழில்நுட்ப உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.

இதையும் படிக்க | தேர்வர்கள் OTR உடன் ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம்

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், குழந்தைகள் கல்விக்கான சில்ரன் பீலிவ் நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கத்தில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கவும் முன்வந்தது. அதன் அடிப்படையில் பூண்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்து ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து, 16 அரசு பள்ளிகளுக்கு மடிக்கணினி மற்றும் புரெஜெக்டர்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் எளிதாக கற்பிக்க உதவும் நோக்கத்தில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி தருதிறது. அந்த வகையில் உபகரணங்களை நல்லமுறையில் பயன்படுத்தி மாணவ, மாணவிகள் வாசிப்பு திறனையும், அறிவியல், கணித திறனையும் சமூகஅறிவியல் குறித்த விளக்கங்களையும் வளர்க்க தொழில்நுட்ப உபகரணங்களை சிறந்த முறையில் பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய சில்ரன் பிலீவ் திட்டமேலாளர் லாவண்யா கேசவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், ஒருங்கிணைந்த கல்வியின் கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன், மாவட்டஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, பூண்டி வட்டார கல்வி அலுவலர் பொற்கொடி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Wednesday, February 23, 2022

February 23, 2022

பள்ளி பரிமாற்ற திட்டம் ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தல்

பள்ளி பரிமாற்ற திட்டம் ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தல்

பள்ளி பரிமாற்ற திட்டத்தை, வரும் 25ம் தேதிக்குள் 'ஆன்லைனில்' நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள், வேறு பள்ளிகள் இருக்கும் இடத்துக்கு சென்று, அங்குள்ள இயற்கை மற்றும் கல்வி சூழல்களை அறிந்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | TNPSC EXAM - NEW INSTRUCTION - PRESS RELEASE

நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த திட்டம் ஆன்லைன் வழியில் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியையும் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய இடங்களையும் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து, அதை மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில், காணொலியாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை, வரும் 25ம் தேதிக்குள் ஆன்லைனில் நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

Tuesday, February 22, 2022

February 22, 2022

School Partnership Programme - Schedule

School Partnership Programme - Schedule

 
 School Partnership Programme Training இல் சொல்லப்பட்ட தகவல்கள்:-

பள்ளி பரிமாற்ற programme தேதியை February 21 to 25 க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பள்ளி பரிமாற்ற புரோகிராம்‌ காலமானது 9 மணியில் இருந்து 3. 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால அட்டவணை:-

9.30 to 10.00 - அறிமுகம்.

10.00 to 11.00 - பள்ளியின் சிறந்த செயல்பாடுகள்.

11.00 to 11.15 - இடைவேளை

11.15 to 12.30 - பள்ளியை சுற்றியுள்ள வளங்கள், இயற்கை சூழல்கள், அலுவலகங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை சுற்றிப்பார்த்தல்,

12.30 to 1.15 - உணவு இடைவேளை,

1.15 to 2.00 - பொது முடக்க காலத்தில் மாணவர்களின் அனுபவங்கள் - zoom meet, Google meet இல் பகிர்ந்து கொள்ளுதல். 

2.00 to 2.45 - Virtual tour,

Google இல் art and culture என்று கொடுத்து பார்க்கலாம். 

2.45 to 3.00 - இடைவேளை,

3.00 to 3.30 - Zoom meet இல் இருதரப்பு பள்ளி மாணவர்களும் கலந்துரையாடுதல்.

3.30 to 3.45 - பின்னூட்டம் - மாணவர்களுடையது.


1. நிகழ்ச்சியை ஒரு 10 போட்டோவாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
போட்டோ A4 Sheet photo sheet இல் print செய்யப்பட்டிருக்க வேண்டும். 

2. Documentation தயார் செய்ய வேண்டும்.

வீடியோ தயார் செய்துகொள்ள வேண்டும். 

ஆசிரியர் Case study கொடுக்க வேண்டும். - நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்றவாறு இருக்க வேண்டும். 

ஒரு பள்ளிக்கு 1000 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் என்ற வீதம் கலந்து கொள்ள வேண்டும். 

ஆசிரியர்கள் மட்டும் செல்ல வேண்டும். 

ஒரு ஆசிரியர் தன்னுடைய பள்ளியிலும்‌ மற்றொரு ஆசிரியர் ‌பரிமாற்ற பள்ளிக்கும் செல்ல வேண்டும். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Monday, February 21, 2022

February 21, 2022

வாக்குகள் எண்ணும் பணி: நாளை (பிப்ரவரி 22) பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதில்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி:

இதையும் படிக்க | மத்திய கல்வி அமைச்சக கருத்தரங்கில் பிரதமர் மோடியின் உரை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 22ஆம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா.


இதையும் படிக்க | 2000 இந்திய மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
February 21, 2022

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரிய பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடும் முறையில் உள்ள பிரச்சினைகள்

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரிய பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடும் முறையில் உள்ள பிரச்சினைகள்:

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் (மாணவர் எண்ணிக்கை 150 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளில்) 6 முதல் 10 வகுப்புகளுக்கு மொத்தம் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு மீதமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உபரி ஆசிரியர்களாக கருதப்பட்டு பட்டியல் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வருகிறது.

ஐந்து வகுப்புகளுக்கு வாரம் 200 பாடப்பிரிவேளைகள் (5×40=200) உள்ள நிலையில், ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து 140 பாடப்பிரிவேளைகளை (5×28=140) மட்டுமே கையாள முடியும் என்பதுதான் அரசு விதி.

ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டால் ஒவ்வொரு ஆசிரியரும் மொத்தமுள்ள 40 பாடவேளைகளும்(Periods) பணி செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளைப் போல உயர்நிலைப் பள்ளிகளை நடத்த இயலாது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிக்க | அஞ்சல்துறை தபால் பிரிக்கும் பணி: 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்- சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மேலும்,ஆசிரியர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்தாலோ, அரசால் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு சென்று விட்டாலோ, அந்த நாளில் அப்பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும்.? 35 பேர் இருந்தால்தான் ஒரு வகுப்பறை (குறைந்தபட்சம் 18 ஆவது இருக்க வேண்டும்) என கணக்கீடு செய்து ஆசிரியர் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் முறையினை, கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தினால், ஒவ்வொரு வகுப்பிலும் 18 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் அந்த மாணவர்களை, அந்த குறிப்பிட்ட வகுப்பை என்ன செய்வது?. கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இதையும் படிக்க | D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ்

தற்போது அந்த நல்ல நோக்கமே கேள்விக்குறியாகி உள்ளது.

இதுபோன்ற சூழல் அப்பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நன்மை பயக்காது என்பது யதார்த்தம்.

ஆகவே,மேல்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதைப்போல, உயர்நிலைப்பள்ளிகளிலும் பாடவேளை அடிப்படையில் (மாணவர் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல்) கணக்கீடு செய்து 28 பாட வேளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதியின் அடிப்படையில் ஆசிரியப் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் மேம்பட, குறைந்தபட்சம் ஏழு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(196 பாடவேளைகள்) அல்லது அதிக பட்சம் எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (224 பாடவேளைகள் ) ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான்,எந்த நோக்கத்திற்காக இந்தப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டனவோ,அந்த நோக்கம் நிறைவேறும்.

Thursday, February 17, 2022

February 17, 2022

தேர்தல்-2022-வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அரசு/நகராட்சி/அரசு உதவியெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படும் பள்ளிகள் மற்றும் 50% தேர்தல் பணியில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 18.02.2022 அன்று விடுமுறை அளித்தல் - தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Total Pageviews

Search This Blog