Breaking

Showing posts with label 1800 vacancies. Show all posts
Showing posts with label 1800 vacancies. Show all posts

Saturday, October 01, 2022

October 01, 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை! - Scientists warn that the new virus coming back to threaten Costa-2 - will not adhere to any vaccine!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

.The corona virus epidemic that has gripped the world for the last 2 years has been almost universally controlled.

The head of the World Health Organization, Tedros Adhanom Ghebreyesus, made the announcement yesterday. But a new virus that can threaten humans like Corona has been discovered. It has been named 'Costa-2'.

Scientists have warned that the virus, found in Russian bats, will not respond to any existing vaccine. This has created a new panic.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Monday, August 22, 2022

August 22, 2022

கூட்டுறவு வங்கியில் அரசியல் தலையீடு; 1800 காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை - மாநில தலைவர்

''மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் முழுவதும் 1800 காலிப்பணியிடங்களை அரசியல் தலையீட்டால் கடந்த ஆட்சியை போலவே தி.மு.க., ஆட்சியிலும் நிரப்ப முடியவில்லை'', என, மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்க மாநில தலைவர் தமிழரசு குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரத்தில் நடந்த சங்க பொதுக்குழுவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணியாளர்கள் தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை.
பலமுறை அறிவிப்பு வெளியிட்டும் அரசியல் வாதிகள் தலையீட்டால் நிரப்ப முடியவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்த அதே நிலைதான் தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும் உள்ளது.

தமிழகத்தில் உள்ள 128 நகர வங்கிகளை மாவட்ட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து ஆக. 24 முதல் தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்.இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார்

Total Pageviews

Search This Blog