Breaking

Showing posts with label Tamil Nadu Govt. Show all posts
Showing posts with label Tamil Nadu Govt. Show all posts

Sunday, February 11, 2024

February 11, 2024

100% Drinking Water Connection to Govt Schools, Anganwadis: Tamil Nadu Govt Appreciated by Central Govt

அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு 100% குடிநீர் இணைப்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு 100% Drinking Water Connection to Govt Schools, Anganwadis: Tamil Nadu Govt Appreciated by Central Govt

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கி இருப்பது இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக மத்திய அரசு குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரதம் திட்டம் ( கிராமப் புறம் ) ஆகியவற்றின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், வரும் ஆண்டில் இத்திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, மத்திய அரசின் குடிநீர் வழங்கல் துறை செயலர் வினித் மகாஜன் ஆகியோர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் குறித்தும், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், நடைபெற்று வரும் 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப் படும் 56 திட்டங்கள் குறித்தும் விரிவாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பிறகு கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும், ஆலோசிக்கப் பட்டது.

ஊரகப் பகுதிகளில் தூய்மை பாரதம் திட்டத்தின் செயல்பாடுகள், திடக் கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்தும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் தனி நபர் வீடுகளில் 100 சதவீதம் கழிப்பறைகள் கட்டுவது மற்றும் பயன்படுத்துவதற்கு மாநில அரசால் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் தேசியஅளவில் 73.98 சதவீத வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 1 கோடிக்கு மேல் அதாவது 80.43 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி தேசியஅளவில் மாநிலத்தின் சிறப்பான செயல்பாடு பாராட்டப்பட்டது. மேலும் மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன் வாடிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது எனவும் பாராட்டப்பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, August 03, 2022

August 03, 2022

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்.: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டம்.: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்த திறனறித் தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகை. மேலும் 1,500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Monday, July 04, 2022

July 04, 2022

சீருடைப் பணியாளர் நியமனம்: இடஒதுக்கீடு கோர முடியாது - தமிழக அரசு

இரண்டாம் நிலை காவலர்கள் காலிப்பணியிடங்களில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலி இடங்களில் முன்னாள் துணை ராவணத்தினர் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முப்படைகளிலும் இனி 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. பணிக்கொடை, ஓய்வூதிய பயன்கள் இல்லாமல், வெறும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்த புதிய திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. இதனையடுத்து, அக்னிபத் திட்டம்' மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய மாநில அரசுகள் தெரிவித்தன.

தகுதி நிபந்தனைகளை நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு, இந்திய கடலோரக் காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து 16 பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% காலி இடங்கள் ஒதுக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்தது.

அதேபோன்று, மத்திய ஆயுதக் காவல்படை (துணை ராணுவப்படை), அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய ஆயுதக் காவல்படை பிரிவில் ஏற்கனவே முன்னாள் ராணுவப் படை பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருவதால், இந்த புதிய அறிவிப்பு அதற்கு மேல் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்னிவீரர்களுக்கு மாநில காவல்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், அசாம் போன்றவை அறிவித்தன.

இந்நிலையில், சீருடைப் பணியாளர் தேர்வுகளில் துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, 3552 காலி இடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த மொத்த காலிப்பணியிடங்களில், அரசு விதிமுறைகளின் படி முன்னாள் ராணுவத்தினர் 5% சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் தேர்வுசெய்யப் படுவார்கள் என்றும், அதில் முன்னாள் துணை இராணுவத்தினருக்கு சிறப்பு ஒதுக்கீடு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய ஆண்டுகளில், துணை இராணுவத்தினர் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்பட்டதாகவும், தற்போதைய முடிவால் நூற்றுக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் துணை ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Total Pageviews

Search This Blog