Breaking

Showing posts with label Tamil Nadu Budget 2022. Show all posts
Showing posts with label Tamil Nadu Budget 2022. Show all posts

Thursday, January 26, 2023

January 26, 2023

புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!

புதிய வருமான வரி.. பட்ஜெட்-ல் இதுதான் முக்கிய அறிவிப்பு..!

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.  

காரணம் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், இதில் வெற்றிபெற்றால் பிஜேபி தலைமையிலான 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்படும்.

இதற்கிடையில் கடந்த 3 வருடத்தில் இந்தியாவின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்த நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நிதி நிலை, சேமிப்பு விலைவாசி உயர்வால் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.'

மத்திய பட்ஜெட் 2023

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் தனிநபர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் கட்டாயம் சில தளர்வுகள் வேண்டும் என்பதால் மத்திய அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. பல நெருக்கடி

மத்திய அரசு ரெசிஷன் அச்சம், பணவீக்கம், சர்வதேச சந்தையில் டிமாண்ட் சரிவு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைக்கு மத்தியில் தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

  மாத சம்பளக்காரர்கள்

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மாத சம்பளக்காரர்கள் தற்போது எதிர்பார்ப்பது போது 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ஜீரோ வருமான வரி விதிப்போ அல்லது 80சி பிரிவில் அதிகப்படியான வரி விலக்கு வரம்பு விரிவாக்கம் போன்ற விஷயங்களை அளிக்க முடியாத நிலையில் தான் மத்திய அரசின் நிதி நிலை உள்ளது.

கூடுதலாக வரிப் பலகை

இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்துள்ளது, இதன் மூலம் புதிய வருமான வரி விதிப்பு முறையில் கூடுதலாக வரிப் பலகை சேர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய வருமான வரி விதிப்பு

இந்தப் புதிய வரிப் பலகை பழைய வருமான வரி விதிப்பு முறைக்கும் வர வாய்ப்பு உள்ளதால் இக்குறிப்பிட பிரிவில் இருக்கும் மக்கள் தங்கள் முதலீட்டை சிறப்பாகத் திட்டமிட்டு முதலீடு செய்து வரிப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் ஏ டீம்

மத்திய நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் ஏ டீம் இதை உறுதி செய்யும் பட்சத்தில் இதற்கான அறிவிப்புப் பட்ஜெட் தாக்கலின் போது இடம்பெற்றும், இந்திய பட்ஜெட் அறிக்கை சர்வதேச ரெசிஷன் பாதிப்புகளில் இருந்து நாட்டின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட விலைவாசி உயர்வால் பாதித்துள்ள மக்களை மீட்டுக் கொண்டு வருவது.

பட்ஜெட் அறிக்கை

புதிய வரி பலகையைச் சேர்ப்பது குறித்துப் பல நாட்களாகப் பட்ஜெட் ஏ டீம் ஆலோசனை செய்து அதைப் பட்ஜெட் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையை அளிக்காவிட்டாலும் சிறிய அளவிலான மக்களுக்குக் கட்டாயம் நன்மை பயக்கும்.

வருமான வரி விதிப்பு முறை

தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரிப் பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

Tuesday, September 06, 2022

Saturday, March 19, 2022

March 19, 2022

தமிழக அரசின் பட்ஜெட் மக்களின் மனசாட்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தில் மாநில தலைவர் இளமாறன், துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் அறிக்கை: தமிழக அரசின் வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலும், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என்பது மிகையில்லை. இதில் பள்ளிக் கல்வி துறைக்கு ஏறத்தாழ ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்புக்கு உரியது. அதேபோல் உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் அறிவிப்பு, பெண்கல்வியை ஊக்குவிக்கும்.

இதையும் படிக்க | பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேலும், பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் நிதி ஒதுக்கீடு, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என தமிழக அரசின் பட்ஜெட்டில் வெளியான பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களின் மனசாட்சியாக விளங்கி வருகிறது. மேலும், ஆசிரியர்-அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மானிய கோரிக்கையின்போது 110 விதியின்கீழ் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
March 19, 2022

தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: ஊழியர் சங்கம் கருத்து

“தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தந்துள்ளது” என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழக அரசின் 2022- -23 பட்ஜெட்டில் பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது அரசு ஊழியர்கள் தான். ஆனால் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையும் படிக்க | ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பட்ஜெட்டில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப் படும் என அறிவித்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரானாவின் போது முடக்கப்பட்ட சரண்டர், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் 'அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்' என முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார். அந்த மனநிலையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அவர் விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது, என்றார்.

Friday, March 18, 2022

March 18, 2022

தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...)



இதையும் படிக்க | வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்

தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.

* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு. அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

- நிதி அமைச்சர் பிடிஆர் அரசுப்பள்ளி அல்லாத பள்ளிகளில் 1-10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வரும் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

- நிதி அமைச்சர் பிடிஆர்

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000ரூ ஊக்கத்தொகை வழங்கப்படும் - நிதியமைச்சர்

அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். * நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

* மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு.

* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

* அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் அன்பழகன் பெயரில் திட்டம் அறிவிப்பு, புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.1300 கோடி ஒதுக்கீடு.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு.

* அரசு பள்ளி அல்லாத பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கம் இலவச பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு. * மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு.

* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்

* ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

* புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடியில் புத்தகக் காட்சிகள்.

* அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.205 கோடி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டு பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,300கோடி ஒதுக்கீடு.

Total Pageviews

Search This Blog