Breaking

Showing posts with label Tamil Nadu government scheme. Show all posts
Showing posts with label Tamil Nadu government scheme. Show all posts

Tuesday, August 23, 2022

August 23, 2022

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டம்:அஞ்சலகங்களில் ஆக.26 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் அளிக்க இம் மாதம் 26 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கோ.சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்க பணமாக்கத் திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கிராம் 24 காரட் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.5197 ஆகும். இந்தப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இம் மாதம் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தனிநபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும், முதலீட்டு தொகைக்கு 2.50 சதவிகித வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் அன்றுள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம்.

பத்திரம் வாங்கும்போது வாடிக்கையாளா்கள் ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் கட்டாயமாகும். பத்திரம் தங்க கிராமின் மடங்காக உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதிகளில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 22, 2022

July 22, 2022

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு திட்டம்

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | G.Os of Finance Department - PDF - Letter No.11741/Finance (HI-2) /2022 Dt: July 16, 2022 - New Health Insurance Scheme 2022 for Pensioners - Contributory Pension Scheme Retirees and their Spouse – Necessary Instructions - Issued - Regarding

தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 3.31 கோடியில் இருந்து ரூ. 4 கோடியாக உயர்த்தப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது.

Total Pageviews

Search This Blog