Breaking

Showing posts with label minority students. Show all posts
Showing posts with label minority students. Show all posts

Monday, October 02, 2023

October 02, 2023

"சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது" - தலைமை நீதிபதி அமர்வு

"Minority Educational Institutions: Seat Reservation Policy Not Applicable" - Chief Justice Bench - "சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது" - தலைமை நீதிபதி அமர்வு

"சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது"

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது - சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த உயர்கல்வித்துறை உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க தேசிய ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது; "50% இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும் மீத இடங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி அடிப்படையில் போட்டியிடலாம் - தலைமை நீதிபதி அமர்வு

Monday, October 31, 2022

October 31, 2022

Minority Scholarship Extended Upto 15.11.2022



Minority Scholarship Extended Upto 15.11.2022

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..

Sunday, August 21, 2022

August 21, 2022

சிறுபான்மையின மாணவியருக்கு புதிய ஊக்கத்தொகை திட்டம்

கிராமப்புறப் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்க, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவியர், இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்க, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊக்கத் தொகையாக, ஆண்டுக்கு 500 ரூபாய்; ஆறாம் வகுப்பு மாணவியருக்கு, 1,000 ரூபாய் வழங்க, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதை பரிசீலனை செய்த அரசு, 'கிராமப்புற பள்ளிகளில் சிறுபான்மையின சமுதாய பெண் குழந்தைகள் கல்வி கற்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்' என்ற பெயரில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளுடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராமப்புறப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வழியாக வழங்கப்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், இந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்

ஊக்கத்தொகை பெற, சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மாணவியரின் பெற்றோர் வருமான வரம்பு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog