Corporation schools
June 10, 2024
Showing posts with label Corporation schools. Show all posts
Showing posts with label Corporation schools. Show all posts
Monday, June 10, 2024
Monday, February 19, 2024
Friday, February 02, 2024
School News
February 02, 2024
மாநகராட்சியின் கீழ் வந்த 64 அரசு ஆரம்ப பள்ளிகள்
How many corporation schools are there in Chennai?
About the Department
GCC has 281 Primary /Middle/High/Higher Secondary Schools across Chennai.
What is the difference between private and government school?
While private schools offer better facilities and resources, they are also more expensive than government schools. Government schools, on the other hand, are free up to the age of 14, but the quality of education can vary widely.
How many primary schools are there in Tamil Nadu?
(a): The number of primary schools in the State of Tamil Nadu is 35062, as per UDISE+ 2021-22. (b)& (c): As per UDISE+ 2021-22, the total number of primary teacher in rural areas of Tamil Nadu is 83052, out of which, the number of qualified teachers is 79457.
How can I start my own primary school?
10 STEPS TO START A PRIMARY SCHOOL
Prepare a blue print. The very first step to start a primary school is to plan everything in advance. ...
Develop a budget. ...
Form a trust or society. ...
Finding a suitable land. ...
Start early. ...
Approach MCD for recognition. ...
Recruiting qualified staff. ...
Promotional strategies.
மாநகராட்சியின் கீழ் வந்த 64 அரசு ஆரம்ப பள்ளிகள்
தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 64 பள்ளிகள் தற்போது மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. கோவை மாநகராட்சி, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், 41 ஆரம்பப் பள்ளிகள், 23 நடுநிலைப்பள்ளிகள் என, 64 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியின் ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாறுதல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை, தொடக்க கல்வி இயக்ககம் மேற்கொண்டு வந்தது. அதே சமயம், பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு, மேம்பாடு, பள்ளி காவலர், துாய்மை பணிகளுக்கு ஒப்பந்த பணியாளரை நியமித்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சியில் இருந்து நிதி வழங்கப்படுகிறது.
இப்பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டமும்,மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.பள்ளி கட்டடங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடமும், பள்ளி கல்வித்துறை அதிகாரத்தில் ஆசிரியர்களும் என, இருவேறு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இதனால், பள்ளிகள் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் சிக்கல் நிலவியதுடன், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவர்கள்நலன் கருதி இந்த, 64 பள்ளிகளும் தற்போது கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. வந்தது அரசாணை!
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 தொடக்க பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை, 17 மேல்நிலை என, 84 பள்ளிகள் உள்ளன.தற்போது, விரிவாக்கபகுதிகளில் இருக்கும், 64 பள்ளிகளையும் சேர்த்து, 148 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு இப்பள்ளிகளை இணைத்து, அரசாணை பெற்றுள்ளோம். இது மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், என்றார்.
நிபந்தனைகள்!
64 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாநகராட்சி பணியில் சேர விரும்பினால், அவ்வாறே தொடரலாம். தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிய விரும்பினால் தாய் ஒன்றியத்துக்கோ, பிற ஒன்றியங்களுக்கோ முன்னுரிமை அடிப்படையில் பணிக்கு திரும்பலாம் என்பன உள்ளிட்ட, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
About the Department
GCC has 281 Primary /Middle/High/Higher Secondary Schools across Chennai.
What is the difference between private and government school?
While private schools offer better facilities and resources, they are also more expensive than government schools. Government schools, on the other hand, are free up to the age of 14, but the quality of education can vary widely.
How many primary schools are there in Tamil Nadu?
(a): The number of primary schools in the State of Tamil Nadu is 35062, as per UDISE+ 2021-22. (b)& (c): As per UDISE+ 2021-22, the total number of primary teacher in rural areas of Tamil Nadu is 83052, out of which, the number of qualified teachers is 79457.
How can I start my own primary school?
10 STEPS TO START A PRIMARY SCHOOL
Prepare a blue print. The very first step to start a primary school is to plan everything in advance. ...
Develop a budget. ...
Form a trust or society. ...
Finding a suitable land. ...
Start early. ...
Approach MCD for recognition. ...
Recruiting qualified staff. ...
Promotional strategies.
மாநகராட்சியின் கீழ் வந்த 64 அரசு ஆரம்ப பள்ளிகள்
தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, 64 பள்ளிகள் தற்போது மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது, நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. கோவை மாநகராட்சி, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், 41 ஆரம்பப் பள்ளிகள், 23 நடுநிலைப்பள்ளிகள் என, 64 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியின் ஆசிரியர்கள் நியமனம், பணியிட மாறுதல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை, தொடக்க கல்வி இயக்ககம் மேற்கொண்டு வந்தது. அதே சமயம், பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு, மேம்பாடு, பள்ளி காவலர், துாய்மை பணிகளுக்கு ஒப்பந்த பணியாளரை நியமித்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, மாநகராட்சியில் இருந்து நிதி வழங்கப்படுகிறது.
இப்பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டமும்,மாநகராட்சி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.பள்ளி கட்டடங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடமும், பள்ளி கல்வித்துறை அதிகாரத்தில் ஆசிரியர்களும் என, இருவேறு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இதனால், பள்ளிகள் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் சிக்கல் நிலவியதுடன், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவர்கள்நலன் கருதி இந்த, 64 பள்ளிகளும் தற்போது கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. வந்தது அரசாணை!
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 தொடக்க பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை, 17 மேல்நிலை என, 84 பள்ளிகள் உள்ளன.தற்போது, விரிவாக்கபகுதிகளில் இருக்கும், 64 பள்ளிகளையும் சேர்த்து, 148 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு இப்பள்ளிகளை இணைத்து, அரசாணை பெற்றுள்ளோம். இது மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், என்றார்.
நிபந்தனைகள்!
64 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாநகராட்சி பணியில் சேர விரும்பினால், அவ்வாறே தொடரலாம். தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிய விரும்பினால் தாய் ஒன்றியத்துக்கோ, பிற ஒன்றியங்களுக்கோ முன்னுரிமை அடிப்படையில் பணிக்கு திரும்பலாம் என்பன உள்ளிட்ட, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
Thursday, July 20, 2023
Friday, November 04, 2022
Latest News
November 04, 2022
10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி
10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லாத நிலையில் இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவியர் டெல்லி, சண்டிகர், சிம்லா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் முக்கியமான பகுதிகளை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நாகரீகம், பண்பாடு குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கிய கல்வி சுற்றுலாவை, மாணவ மாணவியர் இம்மாதம் எட்டாம் தேதி முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளது சென்னை மாநகராட்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லாத நிலையில் இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவியர் டெல்லி, சண்டிகர், சிம்லா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் முக்கியமான பகுதிகளை பார்த்து வியந்து வருகின்றனர். மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நாகரீகம், பண்பாடு குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படுகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கிய கல்வி சுற்றுலாவை, மாணவ மாணவியர் இம்மாதம் எட்டாம் தேதி முடித்துக்கொண்டு சென்னை திரும்புகின்றனர். இந்தாண்டு மாணவர்களின் தேசிய கல்விச் சுற்றுலாவிற்காக சென்னை மாநகராட்சி ரூபாய் 9.17 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, April 11, 2022
latest tamil news
April 11, 2022
ரூ.145 கோடியில் மாநகராட்சி பள்ளிகள்... தரம் உயர்வு!
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளை, உலகத்தரத்தில் நவீன முறையில் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக முதற்கட்டமாக, 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் 145 கோடி ரூபாய் செலவில், 50 பள்ளிகளை 'மார்டன்' பள்ளியாக மாற்றும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதே போல், மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் தரம் உயர்த்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர் வரை படிக்கும் வசதி உள்ளது. அதே நேரம், தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, அதன் மீதான பெற்றோர்களின் மோகம் போன்றவற்றால், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது.
கடந்த 2019ம் ஆண்டு வரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆயிரம் என்ற அளவில் தான், மாணவர்கள் படித்து வந்தனர். 'சிட்டிஸ்' திட்டம்
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பெற்றோர் பலர் தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை நோக்கி இடம் பெயர்ந்தனர்.
அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் தற்போது, மாணவர் எண்ணிக்கை, 1.10 லட்சமாக உயர்ந்து உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகள் உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் 'சிட்டிஸ்' திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது.
துவக்கம்
இத்திட்டத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில், 28 பள்ளிகள் 'மார்டன்' எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன.இதைத் தவிர, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் 22 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மொத்தம் 50 பள்ளிகளில் 145 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகளின் மேசை, நாற்காலி போன்றவற்றிற்கு, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும், 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த 50 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணிகள் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சியின் மீதமுள்ள பள்ளிகளையும் நவீன வகுப்பறைகளாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாட்டு வங்கிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, சிட்டிஸ் திட்டத்தில் 28 பள்ளிகள்; சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 22 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் மாணவர்களுக்கு தரமான வகுப்பறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்.
-- சினேகாமாநகராட்சி கல்வி துணை கமிஷனர்.
- நமது நிருபர் -
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர் வரை படிக்கும் வசதி உள்ளது. அதே நேரம், தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, அதன் மீதான பெற்றோர்களின் மோகம் போன்றவற்றால், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது.
கடந்த 2019ம் ஆண்டு வரை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆயிரம் என்ற அளவில் தான், மாணவர்கள் படித்து வந்தனர். 'சிட்டிஸ்' திட்டம்
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, பள்ளி சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த, 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பெற்றோர் பலர் தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை நோக்கி இடம் பெயர்ந்தனர்.
அதன்படி, மாநகராட்சி பள்ளிகளில் தற்போது, மாணவர் எண்ணிக்கை, 1.10 லட்சமாக உயர்ந்து உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகள் உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் 'சிட்டிஸ்' திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியது.
துவக்கம்
இத்திட்டத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில், 28 பள்ளிகள் 'மார்டன்' எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளன.இதைத் தவிர, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், 50 கோடி ரூபாய் மதிப்பில் 22 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மொத்தம் 50 பள்ளிகளில் 145 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பள்ளிகளின் மேசை, நாற்காலி போன்றவற்றிற்கு, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும், 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த 50 பள்ளிகளில் நவீன வகுப்பறை அமைக்கும் பணிகள் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சியின் மீதமுள்ள பள்ளிகளையும் நவீன வகுப்பறைகளாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு நாட்டு வங்கிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, சிட்டிஸ் திட்டத்தில் 28 பள்ளிகள்; சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 22 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்தால் மாணவர்களுக்கு தரமான வகுப்பறைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்.
-- சினேகாமாநகராட்சி கல்வி துணை கமிஷனர்.
- நமது நிருபர் -
