Breaking

Showing posts with label Admission Guidelines. Show all posts
Showing posts with label Admission Guidelines. Show all posts

Wednesday, July 08, 2026

Friday, April 05, 2024

Tuesday, June 27, 2023

June 27, 2023

TRANSFER COUNSELLING - ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள்

Wednesday, May 31, 2023

Monday, April 17, 2023

April 17, 2023

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

Admission of students from 1st to 9th class in Tamilnadu government schools has started - தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.

அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
April 17, 2023

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை.. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்..

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை.. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்.. - Admission of students in government schools.. Awareness campaign started under the leadership of Minister Shekhar Babu..

Tuesday, April 11, 2023

April 11, 2023

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம்



அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - அடுத்த வாரத்தில் தொடங்க திட்டம் - Admissions to Government Schools - Scheduled to begin next week

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சேர்க்கைப் பணிகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த ஆண்டு கரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியது. எனினும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டன. இதனால், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஏப்ரல் மாதத்துக்குள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதற்கேற்ப அரசுப் பள்ளிகளும் சேர்க்கைப் பணிகளை முன்கூட்டியே தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, வரும் கல்வியாண்டுக்கான(2023-24) அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது,

‘‘அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பமுள்ள பெற்றோர் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சேர்க்கைக்கு அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும்’’ என்றனர்.

Total Pageviews

Search This Blog