News Release
August 09, 2024
Showing posts with label News Release. Show all posts
Showing posts with label News Release. Show all posts
Friday, August 09, 2024
Monday, April 24, 2023
News Release
April 24, 2023
பள்ளி வாகனங்கள் ஆய்வு: மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவு
பள்ளி வாகனங்கள் ஆய்வு: மே மாதத்துக்குள் முடிக்க உத்தரவு
தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.
வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசமும் முடிவுற்ற நிலையில், கேமரா, சென்சார் போன்றவை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இதனை பின்பற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையை மே 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.
வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசமும் முடிவுற்ற நிலையில், கேமரா, சென்சார் போன்றவை கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இதனை பின்பற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். இந்த ஆய்வு தொடர்பான இறுதி அறிக்கையை மே 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sunday, February 12, 2023
World Painting Day
February 12, 2023
ஓவியத்தில் அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
ஓவியத்தில் அசரடிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் Government school students are busy with painting
திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியில் உள்ளது கே.இ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, கொப்பூரைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ரமேஷ் மகன் ரத்தீஷ்சாமுவேல், 15; பிளஸ் 1 மாணவர்.
அரண்வாயல்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மதன் மகன் தமிழரசு, 16; பிளஸ் 2 பயில்கிறார்.
இரண்டு மாணவர்களும், பார்த்தவுடன் ஓவியம் வரைவதில் அசரடித்து வருகின்றனர். அவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர். இரு மாணவர்களும் கூறியதாவது: சிறு வயதிலிருந்து, ஓவியத்தில் எங்களுக்கு தனி ஆர்வம் இருந்தது. எவ்வித சிறப்பு பயிற்சியும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு கொடுத்த பயிற்சி மற்றும் சக ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் திறம்பட வரைகிறோம்.
எங்களை ஊக்கப்படுத்த, தலைமையாசிரியர் சா.ஞானசேகர், ஜன., 26ம் தேதி குடியரசு தின விழாவில், நாங்கள் வரைந்த ஓவியங்கள், மற்ற மாணவர்களின் ஓவியங்களை சேர்த்து ஓவியக் கண்காட்சி நடத்தினார்.
தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவற்றை பார்த்து எங்களை பாராட்டியது மறக்க முடியாதது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோட்டோவியம், நவீன ஓவியம் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதில் இரண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளதாக, பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு தெரிவித்தார்.
CLICK HERE TO READ NEWS FULLY
திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியில் உள்ளது கே.இ.நடேசன் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு, கொப்பூரைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ரமேஷ் மகன் ரத்தீஷ்சாமுவேல், 15; பிளஸ் 1 மாணவர்.
அரண்வாயல்குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மதன் மகன் தமிழரசு, 16; பிளஸ் 2 பயில்கிறார்.
இரண்டு மாணவர்களும், பார்த்தவுடன் ஓவியம் வரைவதில் அசரடித்து வருகின்றனர். அவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர். இரு மாணவர்களும் கூறியதாவது: சிறு வயதிலிருந்து, ஓவியத்தில் எங்களுக்கு தனி ஆர்வம் இருந்தது. எவ்வித சிறப்பு பயிற்சியும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு கொடுத்த பயிற்சி மற்றும் சக ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் திறம்பட வரைகிறோம்.
எங்களை ஊக்கப்படுத்த, தலைமையாசிரியர் சா.ஞானசேகர், ஜன., 26ம் தேதி குடியரசு தின விழாவில், நாங்கள் வரைந்த ஓவியங்கள், மற்ற மாணவர்களின் ஓவியங்களை சேர்த்து ஓவியக் கண்காட்சி நடத்தினார்.
தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவற்றை பார்த்து எங்களை பாராட்டியது மறக்க முடியாதது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோட்டோவியம், நவீன ஓவியம் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதில் இரண்டு மாணவர்களும் தேர்ச்சி பெற்று உள்ளதாக, பள்ளி ஓவிய ஆசிரியர் ஹரிபாபு தெரிவித்தார்.
CLICK HERE TO READ NEWS FULLY
Tuesday, February 07, 2023
News Release
February 07, 2023
மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..! மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!
மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..! மகா சிவராத்திரி 2023 : செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்..!
Maha sivratri 2023 | மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பது நமசிவாயம் சொல்லி ஜபிப்பது, தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவது என சிவனை நினைத்து கண் விழித்து இருத்தால் சிறப்பு
சிவபெருமனுடைய அற்புதமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரிக்காக ஒரு வருடமாக காத்திருந்து விரதமிருந்து, வேண்டும் வரங்களையெல்லாம் பெறனும் என்று விரும்பும் பக்தர்கள் ஏராளம். இது ஒரு விரதத்திற்கு உரியநாள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு. இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.. செய்ய வேண்டியவைகள்
1. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
2. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலையிலேயே குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.
3. சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது.
4. அதுமட்டுமல்லாமல் சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என ஒரே ஒருமுறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் கிடைக்கும்.
5. தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.
6. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.
7. ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை தரும். சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும். செய்யக்கூடாதவை
1. இந்த தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மது அருந்துதல் கூடாது. விழித்திருப்பதற்காக சீட்டு ஆடுவது, செல்போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது அறவே தவிர்க்க வேண்டும்.
2. இந்த புனிதமான தினத்தில் பொய் பேசுதல், புறம் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, சுக போகங்கள், தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனுபவிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
3. நமக்கு பாவம் வந்து சேரும். இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது. சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி உண்ணக் கூடாது.
4. மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
Maha sivratri 2023 | மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பது நமசிவாயம் சொல்லி ஜபிப்பது, தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவது என சிவனை நினைத்து கண் விழித்து இருத்தால் சிறப்பு
சிவபெருமனுடைய அற்புதமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரிக்காக ஒரு வருடமாக காத்திருந்து விரதமிருந்து, வேண்டும் வரங்களையெல்லாம் பெறனும் என்று விரும்பும் பக்தர்கள் ஏராளம். இது ஒரு விரதத்திற்கு உரியநாள். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு. இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.. செய்ய வேண்டியவைகள்
1. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
2. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலையிலேயே குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.
3. சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது.
4. அதுமட்டுமல்லாமல் சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என ஒரே ஒருமுறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் கிடைக்கும்.
5. தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.
6. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.
7. ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை தரும். சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும். செய்யக்கூடாதவை
1. இந்த தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மது அருந்துதல் கூடாது. விழித்திருப்பதற்காக சீட்டு ஆடுவது, செல்போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது அறவே தவிர்க்க வேண்டும்.
2. இந்த புனிதமான தினத்தில் பொய் பேசுதல், புறம் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, சுக போகங்கள், தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனுபவிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
3. நமக்கு பாவம் வந்து சேரும். இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது. சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி உண்ணக் கூடாது.
4. மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
Saturday, January 21, 2023
School News
January 21, 2023
பள்ளிச் சிறார்கள் காண்டம், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த தடை இல்லை.. அரசு விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் பள்ளிச் சிறுவர்கள் காண்டம் பயன்படுத்த தடை விதிக்கவில்லை என கர்நாடகா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
There is no ban on the use of condoms and birth control pills by school children.. Govt
பெங்களூரில் உள்ள பள்ளிகளில் மாநில கல்வித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில் மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது தெரியவந்தது.
மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் மதுபானம் அருந்துவது , கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவற்றால் சீரழிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. பள்ளி மாணவர்கள்
இந்த நிலையில் பெங்களூரில் பள்ளி மாணவர்கள் ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வைத்திருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் கர்நாடகா மருந்துக் கட்டுப்பாட்டு துறை 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.
எதிரொலி
இந்தச் செய்தியின் எதிரொலியாக கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பதால் சிறுவர்கள் வேறு தவறான பாதையை நோக்கிப் போகக் கூடும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்தால் பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும் எதிர்பாராத கருத்தரிப்புக்கும் வழிவகுக்கலாம் என அவர்கள் எச்சரித்தனர். ஆணுறைகளுக்கு தடை விதித்தால் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பெண்கள் அவ்வப்போது கருக்கலைப்பு செய்து அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடகா அரசு
இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளது. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால் மருந்து விற்பனையாளர்கள் கருத்தடை சாதனங்களைக் கேட்கும் சிறார்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும்.
சிறார்களுக்கு ஆணுறை
எனவே சிறார்கள் ஆணுறையை வாங்க எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மதுபானங்கள், சிகரெட்டுகள் 18 வயதுக்குக் கீழ் இருப்போருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்ற விதிகள் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. அது போல் ஆபாச படங்களை 18 வயதுக்குக் கீழ் இருப்போர் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் உள்ள பள்ளிகளில் மாநில கல்வித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில் மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது தெரியவந்தது.
மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் மதுபானம் அருந்துவது , கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவற்றால் சீரழிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. பள்ளி மாணவர்கள்
இந்த நிலையில் பெங்களூரில் பள்ளி மாணவர்கள் ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வைத்திருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் கர்நாடகா மருந்துக் கட்டுப்பாட்டு துறை 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.
எதிரொலி
இந்தச் செய்தியின் எதிரொலியாக கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பதால் சிறுவர்கள் வேறு தவறான பாதையை நோக்கிப் போகக் கூடும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்தால் பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும் எதிர்பாராத கருத்தரிப்புக்கும் வழிவகுக்கலாம் என அவர்கள் எச்சரித்தனர். ஆணுறைகளுக்கு தடை விதித்தால் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பெண்கள் அவ்வப்போது கருக்கலைப்பு செய்து அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடகா அரசு
இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளது. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால் மருந்து விற்பனையாளர்கள் கருத்தடை சாதனங்களைக் கேட்கும் சிறார்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும்.
சிறார்களுக்கு ஆணுறை
எனவே சிறார்கள் ஆணுறையை வாங்க எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மதுபானங்கள், சிகரெட்டுகள் 18 வயதுக்குக் கீழ் இருப்போருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்ற விதிகள் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. அது போல் ஆபாச படங்களை 18 வயதுக்குக் கீழ் இருப்போர் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Wednesday, January 18, 2023
vaiko
January 18, 2023
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய வலியுறுத்தல் Insist on Field Study of Juvenile Correctional Schools
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை களஆய்வு செய்ய ஆணையம் வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் களஆய்வு செய்திட ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த கோகுல்ஸ்ரீ (17) என்பவரை ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
கடந்த டிசம்பர் 31-ம் மாலை 5 மணியளவில் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று அவரது தாய்க்கு தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து அவரது தாய், சத்தம் போட்டதும் அவரை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து செங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா விஷயத்தை சொல்லியுள்ளார். அவரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல்துறை இதை கொலைவழக்காக மாற்றி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
அபலைப்பெண் பிரியாவை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத்தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்குற்ப வேலைவாய்ப்பும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும், அத்துடன் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் களஆய்வு செய்திட ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த கோகுல்ஸ்ரீ (17) என்பவரை ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
கடந்த டிசம்பர் 31-ம் மாலை 5 மணியளவில் அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார் என்று அவரது தாய்க்கு தகவல் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து அவரது தாய், சத்தம் போட்டதும் அவரை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து செங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா விஷயத்தை சொல்லியுள்ளார். அவரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல்துறை இதை கொலைவழக்காக மாற்றி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
அபலைப்பெண் பிரியாவை சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத்தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், அவரின் தகுதிக்குற்ப வேலைவாய்ப்பும் நிவாரணமும் அரசு வழங்க வேண்டும், அத்துடன் வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை கள ஆய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Friday, September 23, 2022
tender for shoes
September 23, 2022
Government of Tamil Nadu has invited tender for shoes, book bag for school students 2023-24 - பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான(2023-24) ஷூ, புத்தகப்பை - ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு
Government of Tamil Nadu has invited tender for shoes, book bag for school students for the next academic year (2023-24).
2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல்!
- ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு
பள்ளி மாணவர்களுக்கு ஷூ, புத்தகப்பை
அடுத்த கல்வியாண்டுக்கான ஷூ, புத்தகப்பை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியது அரசு
34.64 லட்சம் ஜோடி ஷூக்கள், 70.69 லட்சம் புத்தகைப்பைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன
2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல்!
- ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு
பள்ளி மாணவர்களுக்கு ஷூ, புத்தகப்பை
அடுத்த கல்வியாண்டுக்கான ஷூ, புத்தகப்பை வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியது அரசு
34.64 லட்சம் ஜோடி ஷூக்கள், 70.69 லட்சம் புத்தகைப்பைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன
Wednesday, August 31, 2022
SUSPENDED
August 31, 2022
மாணவன் இறப்பு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்’
செங்கல்பட்டு : நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் இறந்தது தொடர்பாக, ஓர் ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியை 'டிஸ்மிஸ்' செய்து, கலெக்டர் உத்தர விட்டார்.இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவர்கள், கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்காக, அணுபுரம் சென்றனர்.
பின், கல்பாக்கம் கடற்கரை கடலில் மாணவர்கள் குளிக்க சென்றனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவன் மோகன், அலையில் சிக்கி மாயமானார்.கடந்த 28ம் தேதி, மெய்யூர் குப்பம் மீனவர் பகுதியில் மாணவர் சடலம் கரை ஒதுங்கியது.இச்சம்பவத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் ஞானசேகரன் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறார். பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியை விஜயா, பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார்.மேலும், பள்ளி தலைமை யாசிரியை யிடம், இது குறித்து விளக்கம் கோரப்பட்டு உள்ளது.முதல்வரின் நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் நிவாரணம் வழங்க, ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
பின், கல்பாக்கம் கடற்கரை கடலில் மாணவர்கள் குளிக்க சென்றனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவன் மோகன், அலையில் சிக்கி மாயமானார்.கடந்த 28ம் தேதி, மெய்யூர் குப்பம் மீனவர் பகுதியில் மாணவர் சடலம் கரை ஒதுங்கியது.இச்சம்பவத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் ஞானசேகரன் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறார். பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியை விஜயா, பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார்.மேலும், பள்ளி தலைமை யாசிரியை யிடம், இது குறித்து விளக்கம் கோரப்பட்டு உள்ளது.முதல்வரின் நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் நிவாரணம் வழங்க, ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
Monday, August 08, 2022
கிராம சபைக் கூட்டம்
August 08, 2022
சுதந்திர தினமான 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூடுதல் கூட்டப் பொருள்கள் அனுப்பி வைத்தல் - தொடர்பாக
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம சபைக் கூட்டம் - சுதந்திர தினமான 15.08.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூடுதல் கூட்டப் பொருள்கள் அனுப்பி வைத்தல் - தொடர்பாக
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Monday, August 01, 2022
பள்ளிக் கட்டிடம்
August 01, 2022
மோசமான நிலையில் பள்ளிக் கட்டிடம்: நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?
படவட்டம்மன் கோவில் தெருவில் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்ககளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்தும் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு எடுத்துகாட்டுதான் சென்னை மாநகராட்சியின் படவட்டம்மன் கோவில் தெரு பள்ளிக் கட்டிடம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளி ஒன்று கொருக்குப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது.
மேலும், அந்த 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, இந்தப் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கல்வி துறை துணை ஆணையர் சினேகாவிடம் கேட்டபோது, சீரமைக்க நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், ஒரு சில விபத்துகளில் மரணங்களும் பதிவாகிறது. குறிப்பாக பள்ளிக் கட்டிடங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்ககளையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்தும் மோசமான பள்ளிக் கட்டிடங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு எடுத்துகாட்டுதான் சென்னை மாநகராட்சியின் படவட்டம்மன் கோவில் தெரு பள்ளிக் கட்டிடம். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை உயர் நிலைப்பள்ளி ஒன்று கொருக்குப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது. ஜன்னலில் கதவு ஒன்று பாதி சேதமடைந்து கிழே விழும் நிலையில் உள்ளது.
மேலும், அந்த 2 ஜன்னல்களை சுற்றியுள்ள பகுதி பகுதிகளில் மிகவும் சேதம் அடைந்துள்ளது. எனவே, இந்தப் பள்ளி கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கல்வி துறை துணை ஆணையர் சினேகாவிடம் கேட்டபோது, சீரமைக்க நடவடிக்க எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Monday, July 25, 2022
தமிழக அரசு
July 25, 2022
ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் - தமிழக அரசு விளக்கம்
ஆசிரியர்களின் வருகை பதிவேடு - தமிழக அரசு விளக்கம்
ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம்
இதையும் படிக்க | Tamil Nadu Government M.G.R. Film and Television Institute - Admission Notification for the year 2022-2023 - Application and Prospectus - PDF
ஆசிரியர்களின் வருகை பதிவேடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை
ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம்
இதையும் படிக்க | Tamil Nadu Government M.G.R. Film and Television Institute - Admission Notification for the year 2022-2023 - Application and Prospectus - PDF
ஆசிரியர்களின் வருகை பதிவேடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை
Thursday, July 21, 2022
மாவட்ட உதவி திட்ட அலுவலர்
July 21, 2022
கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்
கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர் பேச்சு
கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி பேசினார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்போது கற்றல் கற்பித்தலுள்ள பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு கலந்தா லோசனை கூட்டம் நடை பெற்றது.
இதையும் படிக்க | Ph.D. பயிலும், மதம் மாறிய SC/ST இனத்தவருக்கு ஊக்கத்தொகை - திருத்திய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு
கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி பேசினார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்போது கற்றல் கற்பித்தலுள்ள பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு கலந்தா லோசனை கூட்டம் நடை பெற்றது.
இதையும் படிக்க | Ph.D. பயிலும், மதம் மாறிய SC/ST இனத்தவருக்கு ஊக்கத்தொகை - திருத்திய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு
Wednesday, July 13, 2022
மாணவர்
July 13, 2022
பள்ளிகளில் மாணவர்களுக்கு காகிதக் கலையை கற்றுத் தர வடமாநில இளைஞர்களுக்கு அனுமதி: தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
தமிழகத்தில் கரோனா காலகட்டத்துக்கு பிறகு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் கல்வியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்விஇணைச் செயல்பாடுகள் என்ற பாடவேளை சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த பாடவேளைகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி வினா மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகள் போன்ற கலைச் செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், நுண்கலை பாடவேளையில் இடம்பெற்றுள்ள காகித கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், இதைக்கற்றுக் கொடுக்க வட மாநில இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ் கலை இலக்கியப் பேரவையின் திருச்சிமாவட்டச் செயலாளர் மு.த.கவித்துவன் கூறியது: வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் பள்ளிகளுக்கு வந்து, காகிதக் கலையை கற்றுத் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொண்டுவரும் காகிதக் கலை புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேர்த்தியான சிறப்பாசிரியர்கள் இருக்கும்போது, இதற்கு வடமாநிலத்தவரை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காகிதக் கலை பயிற்சியை சிறப்பாசிரியர்கள் கொண்டு வழங்க முடியாது. அதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களை கொண்டுதான் வழங்கப்பட வேண்டும்.
வழக்கமாக யோகா, காகிதக் கலை உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையில் தற்போது காகிதக் கலை பயிற்சிஅளிக்க டெல்லியை சேர்ந்த நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை.
குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்கள் யாரேனும் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி அளிக்க முன் வந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்’’ என்றனர்.
அதன்படி, இந்த பாடவேளைகளில் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், விநாடி வினா மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகள் மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகள் போன்ற கலைச் செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், நுண்கலை பாடவேளையில் இடம்பெற்றுள்ள காகித கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வடமாநில இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், இதைக்கற்றுக் கொடுக்க வட மாநில இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ் கலை இலக்கியப் பேரவையின் திருச்சிமாவட்டச் செயலாளர் மு.த.கவித்துவன் கூறியது: வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் பள்ளிகளுக்கு வந்து, காகிதக் கலையை கற்றுத் தருவதாக கூறுகின்றனர். அவர்கள் மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொண்டுவரும் காகிதக் கலை புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேர்த்தியான சிறப்பாசிரியர்கள் இருக்கும்போது, இதற்கு வடமாநிலத்தவரை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘காகிதக் கலை பயிற்சியை சிறப்பாசிரியர்கள் கொண்டு வழங்க முடியாது. அதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களை கொண்டுதான் வழங்கப்பட வேண்டும்.
வழக்கமாக யோகா, காகிதக் கலை உள்ளிட்ட கல்வி இணை செயல்பாடுகள் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையில் தற்போது காகிதக் கலை பயிற்சிஅளிக்க டெல்லியை சேர்ந்த நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் இல்லை.
குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கைவினை கலைஞர்கள் யாரேனும் தன்னார்வ அடிப்படையில் பயிற்சி அளிக்க முன் வந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்’’ என்றனர்.
Friday, July 08, 2022
வேலைவாய்ப்பு
July 08, 2022
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து!
பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து!
வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவுகள் இனி பள்ளிகளில் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் 2011-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இனி பள்ளிகளில் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்பவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaaippu.gov.in என்ற முகவரியில் நேரடியாக மாணவர்களே பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, July 04, 2022
News Release
July 04, 2022
ஆசிரியர் ஊசியால் குத்தியதால் மாணவன் இறந்தாரா? – சங்கத்தினர் புகார்!
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் வட்டத்துக்கு உட்பட்டது அரசவெளி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசின் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், நூற்றுக்கும் அதிகமான மாணவ – மாணவிகள் பயில்கிறார்கள். விடுதியிலும் பல மாணவர்கள் தங்கி படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் நம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேவத்தான் என்பவரது மகன் சிவகாசி 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். கடந்த ஜூன் 30ஆம் தேதி மதியம் அந்த மாணவன் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்துள்ளார்
இது தொடர்பாக சிவகாசியின் தந்தை சேவத்தான் ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் தந்துள்ள புகாரில், ஜூன் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஆசிரியர் மகாலட்சுமியின் மொபைல் எண்ணில் இருந்து போன் வந்தது. உங்கள் மகனின் முகம் வீங்கிப்போய் உள்ளது. வந்து அழைத்து போங்கள் எனச்சொன்னார். நாங்கள் சென்று பார்த்தபோது அவனின் முகம் வீங்கிப்போய் இருந்தது. அவன் பேசமுடியாத நிலையில் இருந்தான். மெல்ல பேசினான். அவனிடம் என்னாச்சி எனக் கேட்டபோது, முகத்தில் பரு இருந்தது, அதனை மகாலட்சுமி டீச்சர் ஊக்கால் குத்தினார் எனச்சொன்னான். அவனை அழைத்துவந்து நம்மியப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டினோம், அவர்கள் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். பாகாயத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் உடனே வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். அங்கு போன போது மருத்துவர்கள் செக் செய்துவிட்டு அவன் இறந்து விட்டதாக கூறினார்கள். பருவை ஊசியால் குத்தியதால் செப்டிக்காகி முகம் வீங்கியுள்ளது. ஆசிரியர் மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்துள்ளார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்காக பல கல்வி சேவைப் பணிகளை செய்வதன் மூலமாக பல விருதுகளை பெற்றவர். ஆசிரியர் மகாலட்சுமி மீது குற்றம்சாட்டுவதற்கு பின்னால் ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சேர்மனுமான அதிமுக பிரமுகரான வெள்ளையன் உள்ளார் என குற்றம்சாட்டுகிறார்கள்.
இது குறித்து சமூக வலைதளத்தில் மகாலட்சுமியின் நண்பர் ஒருவர் எழுதியுள்ள பதிவில், ‘தொலைக்காட்சி சேனல் வழங்கிய தொகையில் இருந்து 12 ஆயிரத்தை ஒரு மாணவனின் உயர் கல்விக்காக வழங்கியவர் மீதியிருந்த ஒரு லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரினார். அந்த தொகையோடு எஸ்.எஸ்.எஸ் திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தார். அந்த ஒப்பந்தத்தை எடுத்த முன்னாள் ஆட்சியின் கட்சி பிரமுகர் வேறு இடத்தில் கட்டினார். இது குறித்து ஆசிரியர் மகாலட்சுமி கேள்வி எழுப்பியதற்கு நேரடியாக பள்ளிக்கே வந்து உன்னை இடமாற்றுகிறேன். பள்ளியை பூட்டுகிறேன் என மிரட்டினார். அவர்கள்தான் இந்த விவகாரத்தை தூண்டிவிடுகிறார்கள். ஊர்க்காரர்கள், பிள்ளைகளிடம் மகாலட்சுமி தப்பு செய்தார் எனச்சொல்லுங்கள் என சொல்லச்சொன்னார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். காவல்துறை விசாரணையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது தவறில்லை என்பது உறுதியாகியுள்ளது’ என்கிறது அப்பதிவு. அரசியல் பிரமுகர்கள் தூண்டிவிடுவதாகவே இருக்கட்டும், அந்த மாணவன் எப்படி இறந்தான்? அவன் விடுதியில் தங்கித்தானே படித்தான், அவனுக்கு உடலுக்கு முடியவில்லை, முகத்தில் கட்டி வந்திருக்கிறது என்றால் இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது விடுதி காப்பாளர் கடமைதானே? இது பற்றி அவர் பெற்றோருக்கு தகவல் சொன்னாரா? பள்ளி தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இதற்கு விடை தெரிய வேண்டாமா? ஆசிரியர் மகாலட்சுமி ஊசியல் குத்தினாரா இல்லையா? இறந்த மாணவனுக்கு வேறு நோய்கள் ஏதாவது இருந்ததா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தினால்தானே உண்மை தெரிய வரும். இது பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்கமாட்டேன் என்கிறார்கள். இறந்தது பழங்குடியின மாணவன் என்பதால்தானே அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். இறந்த சிறுவனின் உயிர் என்ன காக்கா, குருவியா? எனக்கேள்வி எழுப்புகிறார்கள் மலைவாழ் சங்கத்தினர்.
அரசு முழுமையான விசாரணை நடத்தவேண்டும், உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
இது தொடர்பாக சிவகாசியின் தந்தை சேவத்தான் ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் தந்துள்ள புகாரில், ஜூன் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஆசிரியர் மகாலட்சுமியின் மொபைல் எண்ணில் இருந்து போன் வந்தது. உங்கள் மகனின் முகம் வீங்கிப்போய் உள்ளது. வந்து அழைத்து போங்கள் எனச்சொன்னார். நாங்கள் சென்று பார்த்தபோது அவனின் முகம் வீங்கிப்போய் இருந்தது. அவன் பேசமுடியாத நிலையில் இருந்தான். மெல்ல பேசினான். அவனிடம் என்னாச்சி எனக் கேட்டபோது, முகத்தில் பரு இருந்தது, அதனை மகாலட்சுமி டீச்சர் ஊக்கால் குத்தினார் எனச்சொன்னான். அவனை அழைத்துவந்து நம்மியப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காட்டினோம், அவர்கள் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். பாகாயத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவர்கள் உடனே வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னார்கள். அங்கு போன போது மருத்துவர்கள் செக் செய்துவிட்டு அவன் இறந்து விட்டதாக கூறினார்கள். பருவை ஊசியால் குத்தியதால் செப்டிக்காகி முகம் வீங்கியுள்ளது. ஆசிரியர் மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்துள்ளார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மகாலட்சுமி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்காக பல கல்வி சேவைப் பணிகளை செய்வதன் மூலமாக பல விருதுகளை பெற்றவர். ஆசிரியர் மகாலட்சுமி மீது குற்றம்சாட்டுவதற்கு பின்னால் ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் சேர்மனுமான அதிமுக பிரமுகரான வெள்ளையன் உள்ளார் என குற்றம்சாட்டுகிறார்கள்.
இது குறித்து சமூக வலைதளத்தில் மகாலட்சுமியின் நண்பர் ஒருவர் எழுதியுள்ள பதிவில், ‘தொலைக்காட்சி சேனல் வழங்கிய தொகையில் இருந்து 12 ஆயிரத்தை ஒரு மாணவனின் உயர் கல்விக்காக வழங்கியவர் மீதியிருந்த ஒரு லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் தந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரினார். அந்த தொகையோடு எஸ்.எஸ்.எஸ் திட்டத்தின்கீழ் 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தார். அந்த ஒப்பந்தத்தை எடுத்த முன்னாள் ஆட்சியின் கட்சி பிரமுகர் வேறு இடத்தில் கட்டினார். இது குறித்து ஆசிரியர் மகாலட்சுமி கேள்வி எழுப்பியதற்கு நேரடியாக பள்ளிக்கே வந்து உன்னை இடமாற்றுகிறேன். பள்ளியை பூட்டுகிறேன் என மிரட்டினார். அவர்கள்தான் இந்த விவகாரத்தை தூண்டிவிடுகிறார்கள். ஊர்க்காரர்கள், பிள்ளைகளிடம் மகாலட்சுமி தப்பு செய்தார் எனச்சொல்லுங்கள் என சொல்லச்சொன்னார். அவர்கள் மறுத்துவிட்டார்கள். காவல்துறை விசாரணையில் ஆசிரியர் மகாலட்சுமி மீது தவறில்லை என்பது உறுதியாகியுள்ளது’ என்கிறது அப்பதிவு. அரசியல் பிரமுகர்கள் தூண்டிவிடுவதாகவே இருக்கட்டும், அந்த மாணவன் எப்படி இறந்தான்? அவன் விடுதியில் தங்கித்தானே படித்தான், அவனுக்கு உடலுக்கு முடியவில்லை, முகத்தில் கட்டி வந்திருக்கிறது என்றால் இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது விடுதி காப்பாளர் கடமைதானே? இது பற்றி அவர் பெற்றோருக்கு தகவல் சொன்னாரா? பள்ளி தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இதற்கு விடை தெரிய வேண்டாமா? ஆசிரியர் மகாலட்சுமி ஊசியல் குத்தினாரா இல்லையா? இறந்த மாணவனுக்கு வேறு நோய்கள் ஏதாவது இருந்ததா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தினால்தானே உண்மை தெரிய வரும். இது பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்கமாட்டேன் என்கிறார்கள். இறந்தது பழங்குடியின மாணவன் என்பதால்தானே அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். இறந்த சிறுவனின் உயிர் என்ன காக்கா, குருவியா? எனக்கேள்வி எழுப்புகிறார்கள் மலைவாழ் சங்கத்தினர்.
அரசு முழுமையான விசாரணை நடத்தவேண்டும், உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Thursday, June 16, 2022
News Report
June 16, 2022
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - செய்தி அறிக்கை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
செய்தி அறிக்கை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர்தொழில் நுட்பவியல்
என்னும் (M.Sc. Biotechnology) பட்டப்படிப்பு கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் உயிர் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் நடத்தப்பெற்று வருகின்றது. இப்பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி, ஒன்றிய அரசின் உயிர்தொழில்நுட்பத்துறை தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் என்பதனால், மேற்கண்ட மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டு விகிதாச்சாரம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதியின்படிதான் (69%) மாணவர் சேர்க்கை நடத்தப்பெற வேண்டும் எனும் கருத்துருவை வலியுறுத்தி மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத்துறையின் செயலருக்கு ஒரு வலியுறுத்தல் கடிதத்தை 14.06.2022 அன்று சமர்ப்பித்துள்ளார்.
எனவே, முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கணக்கீடு செய்தால் அது கீழ்க்காணும் வகையில் அமையும்: அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் : 30 இக்கல்வியாண்டில் (2022-2023), மேற்கண்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மேற்குறிப்பிட்டுள்ள தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியே நடத்தப்படும் என இதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி அறிக்கை
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர்தொழில் நுட்பவியல்
என்னும் (M.Sc. Biotechnology) பட்டப்படிப்பு கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் உயிர் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் நடத்தப்பெற்று வருகின்றது. இப்பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி, ஒன்றிய அரசின் உயிர்தொழில்நுட்பத்துறை தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் என்பதனால், மேற்கண்ட மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டு விகிதாச்சாரம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதியின்படிதான் (69%) மாணவர் சேர்க்கை நடத்தப்பெற வேண்டும் எனும் கருத்துருவை வலியுறுத்தி மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத்துறையின் செயலருக்கு ஒரு வலியுறுத்தல் கடிதத்தை 14.06.2022 அன்று சமர்ப்பித்துள்ளார்.
எனவே, முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கணக்கீடு செய்தால் அது கீழ்க்காணும் வகையில் அமையும்: அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் : 30 இக்கல்வியாண்டில் (2022-2023), மேற்கண்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மேற்குறிப்பிட்டுள்ள தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியே நடத்தப்படும் என இதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றது.






