Breaking

Showing posts with label Commissioner of School Education. Show all posts
Showing posts with label Commissioner of School Education. Show all posts

Friday, April 26, 2024

Saturday, March 09, 2024

March 09, 2024

பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடிய Audio பதிவ

Monday, April 03, 2023

April 03, 2023

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம் - பள்ளிக் கல்வி ஆணையர் செய்தியாளர் அழைப்பு Awareness Celebration - Commissioner of School Education Press Call

செய்தியாளர் அழைப்பு

மெய்யறிவுக் கொண்டாட்டம்

மாநில அளவிலான வினாடிவினா பயிலரங்கம். இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம், நாள் : ஏப்ரல் 3 காலை 11 மணி

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ்நாடு அரசின் மற்றுமொரு முக்கியமான முன்னெடுப்பு வினாடிவினா போட்டிகள்.

6 முதல் 9 வகுப்புகள் வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பள்ளிக் கல்வித் துறை 'தேன்சிட்டு' என்கிற சிறார் இதழை நடத்தி வருகிறது. அந்த இதழை வாசித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் வாசிப்புக்கான நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதழில் வெளியான படைப்புகள் சார்ந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டு வினாடிவினா போட்டிகள் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வென்ற மாணவர்கள் வட்டார அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டு. அதில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டப் போட்டிகளில் வென்ற 152 மாணவர்கள் மாநில அளவிலான மெய்யறிவுக் கொண்டாட்டம்' பயிலரங்கத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கொடுக்கும் தளம் இது. துறைசார் வல்லுநர்களும் பல்வேறு ஆளுமைகளும் மாணவர்களுடன் உரையாட இருக்கின்றனர்.

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும் பயிலரங்கின் தொடக்க விழா 03.04.2023 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உட்பட பங்கேற்கிறார்கள். துறை அலுவலர்கள் இந்நிகழ்விற்கு தங்கள் நிறுவனத்திலிருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர் பள்ளிக் கல்வி
April 03, 2023

"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார் - பள்ளிக் கல்வி ஆணையர்

"அனைவருக்கும் ITM" திட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார் Hon'ble Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin participates in "ITM for All" Program - Commissioner of School Education

இடம் : டி.டி. ஜெகன்னாதன் அரங்கம், சென்னை ஐ.ஐ.டி வளாகம் நாள் : 03.04.2023 காலை 10 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்:

அவர்கள் 03.04.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் IITM" திட்டம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் முதனமை நிறுவனமான சென்னை ஐஐடியை கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாக்கப்பட்ட திட்டம் "அனைவருக்கும் ITM'. சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக 1 வட்சம் மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மின்னணு செய்முறை பெட்டகங்களை அப்பள்ளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை ஐஐடியின் இயக்குநர் முனைவர் வீகாமகோடி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமநி காகர்லா உஷா இ.ஆ.ப், ஐஐடி பேராசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்,

நிகழ்விற்கு தங்கள் செய்தி நிறுவனத்தில் இருந்து செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆணையர் பள்ளிக் கல்வி

Friday, December 30, 2022

December 30, 2022

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை.

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை - Circular of the Commissioner of School Education regarding the re-opening of schools after the end of the second semester vacation.

அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளித் திறப்பு தொடர்பான பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் சுற்றறிக்கை :

🔸அனைத்துப் பள்ளிகளும் 02.01.2023 அன்று திறக்கப்பட வேண்டும்.

🔸1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 02.01.2023 முதல் 04.01.2023 வரை தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

🔸6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 02.01.2023 முதல் பள்ளி திறக்கப்பட வேண்டும்.

🔸ஓராசிரியராக இருக்கும் தலைமை ஆசிரியர்கள் தவறாது எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ( _குறிப்பு - SMC மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை. தலைமையாசிரியர்கள் EE பயிற்சி பெற்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்_ )

🔸4 மற்றும் 5 ஆம் வகுப்பு போதிக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 02.01.2023 முதல் பள்ளிக்கு வருகை தந்து கீழ்கண்ட செயல்களில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்தல்.

2.பள்ளிக் கல்வித்துறையால் பள்ளிக்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் Emis portal ல் பதிவு செய்தல்.

3. மூன்றாம் பருவத்திற்குரிய பாடத்திட்டங்கள் தயாரித்தல்.

4. கற்றல் உபகரணங்கள் தயாரித்தல்.

5. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல்.

6. அனைத்து ஆசிரியர்களுக்கும் 02.01.2023 முதல் TNSED Attendance App ல் வருகைப் பதிவு மேற்கொள்ளுதல்.

7.ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜனவரி ஐந்து முதல் தொடங்கும்.

Saturday, October 01, 2022

October 01, 2022

CoSE - DEO PROMOTION LIST - 47 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF

CoSE - DEO PROMOTION LIST - 47 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF - Order of the Commissioner of School Education granting promotion/transfer to 47 High/High School Headmasters as District Education Officers

CLICK HERE TO DOWNLOAD

Thursday, September 29, 2022

September 29, 2022

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to conduct special morning/evening classes for students appearing for government public examination

11. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)

- அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் மான்யம் பெறும் வகுப்புகளுக்கு அரசால் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மான்யம் பெறும் வகுப்புகளில் 01.08.2022- நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர் பணியிடங்கள் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் நிலையில் நிர்ணயம் செய்து 15.10.2022 க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

பணியாளர் நிர்ணய ஆணையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து முதலில் தேவையுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.

மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின் அதே வருவாய் மாவட்டத்திற்குள் தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுபணியில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மேற்காண் பொருள் சார்ந்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

12. பள்ளிக் கல்வி ஆணையர் - அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் (Special Class) ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள், அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அப்பள்ளிகளுக்கான Action Plan குறித்த விவரத்தினை இணைஇயக்குநர் (பணியாளர் தொகுதி)-க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

September 29, 2022

மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - The processes of the Commissioner of School Education depend on the dismissal of transferred ministerial staff!

CLICK HERE TO DOWNLOAD

Friday, August 26, 2022

August 26, 2022

வங்கிக் கணக்குகளில் 31.03.2021 நிலவரப்படி செலவிடப்படாத மீதமுள்ள தொகையை அரசுக் கணக்கில் செலுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்

Monday, August 22, 2022

Thursday, August 18, 2022

August 18, 2022

PSTM சான்றிதழ் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப் பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத் தன்மையை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து, உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னர், தகுதியானவர்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம்.

Wednesday, August 17, 2022

August 17, 2022

பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

Friday, July 22, 2022

July 22, 2022

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

திருப்பூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Wednesday, June 01, 2022

June 01, 2022

பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் - PDF

தகவல் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு!!!

CLICK HERE TO DOWNLOAD

Friday, May 13, 2022

May 13, 2022

கோடை விடுமுறை முடிந்து 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது இணை செயல் முறைகள்!!

Total Pageviews

Search This Blog