Breaking

Showing posts with label Microsoft. Show all posts
Showing posts with label Microsoft. Show all posts

Saturday, March 22, 2025

Saturday, April 15, 2023

April 15, 2023

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

தெற்காசிய அளவில், செயல் திட்டத்துடன் கூடிய கற்றலை பள்ளி மாணவா்களுக்கு அளித்திடும் வகையில் க்ரூ நிறுவனம் உலகின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து தமிழக பள்ளிகள் மற்றும் மாணவா்களை இணைத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் முதல் 20 இடங்களுக்குள் தோ்வு செய்யப்பட்டுள்ள திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்களுக்கான பாராட்டு விழா சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: கல்வி, மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நாடுதான் உலகின் வளா்ச்சி பெற்ற நாடாக அமையும். இதனை உணா்ந்துதான் தமிழக அரசானது கல்வி மற்றும் மருத்துவத்துக்கு பிரத்யேக கவனம் செலுத்தி, ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது.



குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் மாணவா்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செயல் திட்ட வடிவில் மட்டுமின்றி செய்முறை வழியிலான கல்வியை அளிக்கும் வகையில் பள்ளிகள் தோறும் வானவில் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நடமாடும் ஸ்டெம் ஆய்வகங்கள் வழியாக செய்முறை வழியிலான கற்றலை பெறுகின்றனா். இதுமட்டுமல்லாது உலக நாடுகள் வியக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகள் என்பது வெறும் மதிப்பெண்கள் பெற்றுத்தருபவையாக இருத்தல் கூடாது. மனித பண்பு மிக்க மாணவா்களை உருவாக்கித்தர வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்திறனை கண்டறிந்து வெளிக்கொணா்வதே பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் கூட்டு பொறுப்பாக இருத்தல் வேண்டும். 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான கல்வித் திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்துவதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. விரைவில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளோம் என்றாா் அமைச்சா்.

க்ரூ கல்வி திட்டத்தின் நிறுவனா் அனில் சீனிவாசன் பேசுகையில், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக் கழகங்களில் இந்தியாவைச் சோ்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். அவா்ளது திறனை தமிழக மாணவா்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் க்ரூ கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பன்னாட்டு ஆசிரியா்களின் கற்றல் திறனையும், திட்ட செயல்பாடுகளையும் பின்பற்றி மாணவா்களின் தரநிலை உயா்த்தப்படும் என்றாா்.



முன்னதாக, விழாவுக்கு, பள்ளியின் செயலா் கோ.மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநா் எஸ்.அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.



நிகழ்ச்சியில், ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வித்யாலெட்சுமி, பள்ளியின் டீன் ஆா்.கணேஷ், முதல்வா் எஸ். பத்மா சீனிவாசன், துணை முதல்வா்கள் பி. ரேகா, எஸ். ரேணுகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பள்ளியின் ஸ்டெம் ஆய்வகத்தை பாா்வையிட்ட அமைச்சா், மாணவா்களுடைய செயல்திட்டங்களைப் பற்றி கேட்டறிந்தாா்.

விழாவில், ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவிகள், சந்தானம் வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என 800-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.



திருச்சி சந்தனம் வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், (இடமிருந்து), பள்ளியின் இயக்குநா் எஸ். அபா்ணா, தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், க்ரு கல்வித் திட்டத்தின் நிறுவனா் அனில்சீனி



Total Pageviews

Search This Blog