Breaking

Showing posts with label Applicants. Show all posts
Showing posts with label Applicants. Show all posts

Monday, March 02, 2026

Friday, July 04, 2025

Sunday, June 15, 2025

Saturday, May 31, 2025

Wednesday, April 23, 2025

Tuesday, November 14, 2023

November 14, 2023

4 வருட பீங்கான் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு - பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை



பீங்கான் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு!

வீட்டு உபயோகப் பொருள்களில் நமக்குப் பயன்படுபவை பல பீங்கான் பொருட்களாக உள்ளன. அலுமினிய பொருள்களால் உடல் நலனுக்குக் கேடு ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் பீங்கான் பொருட்களால் எந்தவித உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. எனவே பீங்கான் தொழில்நுட்பத்துக்கு வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

Institute of Ceramic Technology, Cuddalore

தமிழக அரசின் ஊரகத் தொழில் துறையின் கீழ், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் "டிப்ளமோ இன் செராமிக்ஸ் டெக்னாலஜி' (Diploma in Ceramic Technology) என்ற பட்டயப்படிப்பு உள்ளது.

இதில் மூன்று ஆண்டு படிப்பும், ஆறு மாத காலம் தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இக்கல்லூரி கடந்த 1964 ஆம் ஆண்டு விருத்தாச்சலத்தில் பீங்கான் தொழில் கூடம் தொடங்கப்பட்டது. அப்போது பீங்கான் தொடர்பான படிப்பினை கற்றுக் கொடுக்கும் விதமாக செராமிக் பயிற்சி பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு அரசால் பீங்கான் தொழில் நுட்பக்கல்லூரியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொடங்கப்பட்ட போது சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பட்டயப் படிப்பாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் சேருபவர்களுக்கு மூன்று ஆண்டு காலப் படிப்பும் ஆறு மாத கால பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

பிளஸ் டூ தேர்ச்சி பெற்று வருபவர்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பும், ஆறு மாத கால பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. தொழில் நுட்பக் கல்வி இயக்கம் இந்த படிப்பிற்கு பாடத்திட்டங்களை வழங்குகிறது.

தொடக்கத்தில் மெக்கானிக்கல், பிசிக்ஸ், அறிவியல், கணிதம், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். கிராப் (வடிவமைப்பு) பாடமும் உண்டு. கண்ணாடியின் மூலப் பொருள்களின் தன்மை, எந்த விகிதாசாரத்தில் கலவை செய்ய வேண்டும்? பல்வேறு விதமான கண்ணாடிகளின் தொழில் நுட்பம் குறித்த பாடங்களும், தரையில் பதிக்கப்படும் டைல்ஸ்களின் தன்மை, வகைகள், கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கோப்பைகளின் தன்மை, வாஷ்பேஷின் வடிவமைப்பு, பீங்கான் பொருட்களைத் தயாரிக்கும்முறை உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படும். இறுதியில் ஆறு மாத காலம் தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.

பாண்டிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கார் கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் டைல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த பீங்கான் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. வங்கியில் கடனுதவி பெற்று சொந்தமாகவும் தொழில் தொடங்கலாம். பீங்கான் தொழில் நுட்பம் என்பது மேம்பட்ட தொழில் நுட்பமாகும். இந்த படிப்பில் மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும்'' என்றார்.

சென்னை அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் (Alagappa College of Technology , Guindy, Chennai) B.Tech. மற்றும் M.Tech செராமிக் டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

B.Tech, செராமிக் டெக்னாலஜி முழுநேர 4 வருட படிப்பு.

சேர்க்கை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு மூலம்.

கூடுதல் தகவல்களுக்கு:

https://cac.annauniv.edu/uddetails/udug_2012/CERAMIC.pdf

https://www.annauniv.edu/pdf/MIT-Workshop%20Brochure.pdf

Friday, June 23, 2023

Sunday, June 11, 2023

Monday, May 15, 2023

Friday, April 28, 2023

Thursday, January 19, 2023

January 19, 2023

10 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க 27/01/2023 கடைசி

தென்காசியில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!10 Temporary Nurse Vacancies - Last to apply 27/01/2023

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் - செவிலியர் (Staff Nurse), பதவியிடங்களின் எண்ணிக்கை - 10, கல்வித்தகுதி - செவிலியர் பட்டயபடிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் படித்துள்ளவர்கள். வயது - 50 வயது வரை, மாத ஊதியம் - ரூ.18,000/-. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கோவிட் - 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிட் -19 காலத்தில் தனியார் கோவிட் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் அனுபவ சான்றிதழ் இணை இயக்குநர் சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட(https://tenkasi.nic.in/notice_category/recruitment) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது, என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

Saturday, October 08, 2022

October 08, 2022

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி பசுமைப் போா்வையை விரிவுபடுத்தும் வகையில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளா்ப்புக்கு ஊக்குவிப்பதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி, விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச் சங்கங்கள், இயற்கை ஆா்வலா்கள், தனிநபா்கள் ஆகியோா் மரக்கன்றுகளை எளிதாகப் பெறலாம். இதற்கு பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், கடிதத்தின் வாயிலாகவும் மரக்கன்றுகளைப் பெறலாம். மரங்கள் நடுவதற்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்கள், தேவைப்படும் மரக்கன்றுகள் ஆகிய விவரங்களை இயக்குநா், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8-ஆவது தளம், சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல்கள் பெற 1800 599 7634 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, October 07, 2022

October 07, 2022

MBBS, BDS படிப்புகளுக்கு 36,100 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 36,100 போ் விண்ணப்பம்

நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 36,100 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு தெரிவித்தது.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டில் 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த செப். 12-ஆம் தேதி தொடங்கியது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையவழியே விண்ணப்பித்தனா். வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேரும் என மொத்தம் 36,100 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Friday, September 30, 2022

September 30, 2022

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு... Applicants for veterinary courses have till October 6 to amend their application

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் - Applicants for veterinary courses have till October 6 to amend their application

Applicants for veterinary courses have been given time till October 6 to amend their application. To amend the application, upload the certificate copy from 8 pm on October 3 to 8 pm on October 6. It was informed that the application can be edited through the registered mobile number and email at https://adm.tanuvas.ac.in.

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம்

அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, சான்றிதழ் நகல் பதிவேற்ற அக்டோபர் 3 இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் https://adm.tanuvas.ac.in-ல் விண்ணப்பம் திருத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

Total Pageviews

Search This Blog