Breaking

Showing posts with label temporary posts. Show all posts
Showing posts with label temporary posts. Show all posts

Wednesday, February 26, 2025

Wednesday, September 13, 2023

September 13, 2023

MRB - Notifications Dated: 13.09.2023 - Temporary post of Therapeutic Assistant (Female) - PDF

MRB - Notifications Dated: 13.09.2023 - Temporary post of Therapeutic Assistant (Female) - PDF

Temporary post of Therapeutic Assistant (Female)

You are hereby informed to appear for verification of your certificates / documents as claimed by you in your on-line application.

The list of documents to be produced by you (in original along with one set of self-attested photocopies) is attached herewith. You are required to appear for the verification as per the following date / time / venue.

Note:

a. If the candidate fails to appear for verification of certificates / documents on the specified date / time, it will be presumed that the candidate is no longer interested in the post and his / her candidature is liable for rejection, without any further notice

b. Mere calling for verification of certificates / documents does not confer any right over selection / appointment.

c. The candidates are called for verification of certificates / documents based on the particulars furnished in their on-line applications such as age, educational qualification, community, marks, etc. The provisional selection of candidates will be made only after verification/ acceptance of certain documents, educational qualification possessed by him/her, clarification regarding community status and its acceptance, marks / rank list of the candidate etc. as the case may be. If any of their claims is found to be false or incorrect, their candidature is liable for rejection at any point of time.


d. Candidate called for Certificates Verification is hereby advised to appear with all the relevant documents in original without fail. Failure to produce even any one of the essential documents will result in rejection of his / her candidature.

CLICK HERE TO DOWNLOAD PDF

Monday, July 31, 2023

July 31, 2023

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் - மாவட்ட வாரியாக பட்டியல் ஆய்வு



தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் - மாவட்ட வாரியாக பட்டியல் ஆய்வு

பள்ளிக்கல்வி துறையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்ட தில், முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. மாவட்ட வாரியாக நியமன பட்டியலை, ஆய்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியர் பதவியில், 14,000 காலியிடங்கள் உள்ளன.

அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள நடப்பாண்டில், 109.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 12,000; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15,000; முதுநிலை ஆசிரியர்களுக்கு, 18,000 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியே மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வி துறைஅறிவுறுத்தியது. முறைகேடு புகார்

ஆனால், சில உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாநில அளவில், சில குறிப்பிட்ட தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

இந்த நியமனங்களில், தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், மறைமுகமாக வசூல் வேட்டை நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு வலு சேர்ப்பது போல, துாத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.

ஆதவா என்ற தனியார் நிறுவனம், பட்டதாரிகள் பலரிடம் பல லட்சம் ரூபாய் வரை மறைமுக நன்கொடை பெற்று, அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது.

அவ்வாறு நியமனம் பெற்றவர்களுக்கு, 4 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வரவில்லை என, மாவட்ட கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம், பள்ளிக்கல்வி துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை தேவை

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

பள்ளிக்கல்வி துறையில், மத்திய அரசின் நிதியை செலவிடும் பிரிவான, ஒருங்கிணைந்த கல்வி திட்ட பிரிவின் வழியே, தற்காலிக பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்துக்கு மட்டுமே, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு மேலாக ஒதுக்குகின்றன.

அந்த நிதியில் பெரும்பகுதி, தனியார் நிறுவனங்கள் வழியே செலவிடப்படுகிறது.

இந்த அடிப்படையில் தான், தன்னார்வ நிறுவனங்களின் வழியே, தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே, பள்ளிக்கல்வி துறையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, உண்மையை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரிந்துரைத்தது யார்?

இதற்கிடையே, அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் எப்படி நடந்தது; பரிந்துரைத்தது யார்; நிராகரிக்கப்பட்டவர்கள் யார் யார்; அதற்கான காரணம் என்னவென்ற விசாரணை துவங்கியுள்ளது.

இதன்முடிவில், பணி நியமனத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதா என்பது தெரியவரும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Monday, June 12, 2023

Thursday, February 09, 2023

February 09, 2023

அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்!

அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்! Anna University appoints employees on lease basis!

அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பணி நிலைப்பு வேண்டும்- நீக்கம் கூடாது! - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. உண்மையில் இத்தகைய அறிவிப்பு மகிழ்ச்சியளிக்க வேண்டும். ஆனால், இத்தகைய அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பதன் நோக்கம் பெரும் கவலையை அளிக்கிறது. இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழகம் இனி தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நியமிக்காது என்று அறிவித்திருப்பதன் நோக்கம், இனி அனைத்து பணிகளிலும் நிரந்தரப் பணியாளர்கள் தான் நியமிக்கப் படுவார்கள் என்பதாக இருந்திருந்தால் அது பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும், படித்து விட்டு வேலையின்றி வாடும் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாகவும் இருந்திருக்கும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம், தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை விட குறைந்த ஊதியத்தில், எந்த காலத்திலும் பணி நிலைப்பு உரிமை கோர முடியாத வகையில், குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி/தற்காலிக அடிப்படையில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறது. அவ்வாறு வலியுறுத்தும் போதெல்லாம் அம்முடிவை தற்காலிகமாக கிடப்பில் போட்டிருந்த பல்கலைக்கழக நிர்வாகம், இப்போது அந்த முடிவை முழுமூச்சாக செயல்படுத்தத் தயாராகியிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய முறையாகும். இந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்பட்டால் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அத்தகைய பொறுப்பு கொண்ட அரசாங்கமே, அதை மறந்து விட்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது.

தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இ.ஆ.ப அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அமைத்தது. நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பது தான் அந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆய்வு வரம்பு ஆகும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து குத்தகை முறை நியமனம் குறித்த ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பல்கலைக்கழகங்களில் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்க நடக்கும் முயற்சிகளை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

Tuesday, August 30, 2022

August 30, 2022

2760 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு



தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு

Serial extension order for 2760 temporary posts and release of salary payment for the month of August

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Total Pageviews

Search This Blog