Training for class 4 and 5 teachers
February 21, 2025
Showing posts with label Primary School Teachers. Show all posts
Showing posts with label Primary School Teachers. Show all posts
Friday, February 21, 2025
Friday, February 14, 2025
Monday, April 01, 2024
Monday, March 27, 2023
Teachers security
March 27, 2023
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம்
ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் தீர்மானம் -
Teachers need a separate job security law: Primary school teachers union resolution
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் காலம் கடத்தாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அவரது குழந்தையை தலைமை ஆசிரியை கண்டித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் ஜான்வெஸ்லி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கடந்த ஆறு மாத காலம் கடந்தும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு செய்து நிலுவை தொகை வழங்காமல் உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் காலம் கடத்தாமல் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அவரது குழந்தையை தலைமை ஆசிரியை கண்டித்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sunday, January 01, 2023
Primary School Teachers
January 01, 2023
அகவிலைப்படி ஜுலை 22 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஊதிய குறைபாடு தொடர்பாக குழு அமைப்பதை விட நேரிடையாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
It should be calculated and provided from July 22 as per cost price. Rather than setting up a committee, the wage deficiency should be resolved through direct discussion. - Emphasis on the Primary School Teacher Alliance
அகவிலைப்படி ஜுலை 22 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஊதிய குறைபாடு தொடர்பாக குழு அமைப்பதை விட நேரிடையாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகஅரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த அகவிலைப்படியானது 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆறு மாதங்கள் கழித்து 01.01.2023 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது. கொரோனா நோய் தாக்குதல் காலத்தில் 21 மாத அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த முறை 6 மாத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 6 மாத காலத்திற்கான அகவிலைப்பிடியை வழங்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு விடுபட்ட அகவிலைப்படி அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி - ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே 6ஆவது ஊதிய குழுவின் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை கலைவதற்காக ராஜீவ்ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் பத்மநாபன் ஐஏஎஸ், உமாதாத் ஐஏஎஸ் ஆகிய மூவர் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 7ஆவது வாதியக்குழு தொடர்பான குறைபாடுகளை நீக்க சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் பணீந்தரரெட்டி ஐஏஎஸ், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இதுவரை நாள்கு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தபடியே உள்ளது. தற்போது 5.ஆவதாக ஒரு குழு அமைப்பதாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்குழு விசாரணை அறிக்கை வழங்குவதற்கு காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்படி அடுக்கடுக்கான குழுக்களால் பலனேதும் விளைந்து விடுமா என்ற கேள்விக்குறி எழுகிறது ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான நியாயத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் இந்த கோரிக்கைகளை ஆதரித்து பலமுறை பேசினார்.
இதன் நியாயத்தை உணர்ந்து தங்களது தேர்தல் அறிக்கையிலும் இணைத்துக் கொண்டார் கோரிக்கையில் உள்ள நியாயம் வெளிப்படையாக தெரிந்த நிலையில், குழு அமைப்பது தேவையற்ற காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதுவே கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிரந்தரமான எளிய வழியாகும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அகவிலைப்படி ஜுலை 22 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஊதிய குறைபாடு தொடர்பாக குழு அமைப்பதை விட நேரிடையாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலியுறுத்தல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகஅரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் இந்த அகவிலைப்படியானது 01.07.2022 முதல் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆறு மாதங்கள் கழித்து 01.01.2023 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது. கொரோனா நோய் தாக்குதல் காலத்தில் 21 மாத அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த முறை 6 மாத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 6 மாத காலத்திற்கான அகவிலைப்பிடியை வழங்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக தமிழக அரசு விடுபட்ட அகவிலைப்படி அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி - ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே 6ஆவது ஊதிய குழுவின் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை கலைவதற்காக ராஜீவ்ரஞ்சன் ஐஏஎஸ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் பத்மநாபன் ஐஏஎஸ், உமாதாத் ஐஏஎஸ் ஆகிய மூவர் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 7ஆவது வாதியக்குழு தொடர்பான குறைபாடுகளை நீக்க சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் பணீந்தரரெட்டி ஐஏஎஸ், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இதுவரை நாள்கு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தபடியே உள்ளது. தற்போது 5.ஆவதாக ஒரு குழு அமைப்பதாக மாண்புமிகு முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்குழு விசாரணை அறிக்கை வழங்குவதற்கு காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்படி அடுக்கடுக்கான குழுக்களால் பலனேதும் விளைந்து விடுமா என்ற கேள்விக்குறி எழுகிறது ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான நியாயத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முழுமையாக உணர்ந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் இந்த கோரிக்கைகளை ஆதரித்து பலமுறை பேசினார்.
இதன் நியாயத்தை உணர்ந்து தங்களது தேர்தல் அறிக்கையிலும் இணைத்துக் கொண்டார் கோரிக்கையில் உள்ள நியாயம் வெளிப்படையாக தெரிந்த நிலையில், குழு அமைப்பது தேவையற்ற காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதுவே கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிரந்தரமான எளிய வழியாகும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thursday, September 15, 2022
Training
September 15, 2022
Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Primary School – 3 days training for all teachers – SCERT Director's Procedures.
SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.
ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.
இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.
பார்வை :
பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '
மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .
சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,
சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.
ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022
பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.
இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.
பார்வை :
பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '
மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .
சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,
சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
Monday, August 29, 2022
ஜாக்டோ-ஜியோ
August 29, 2022
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பு: பொதுச் செயலாளர் தகவல் -
25,000 people participate in JACTO-JEO Conference on behalf of Primary School Teachers Alliance: General Secretary Information
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வர இருக்கின்றனர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித் துள்ளார்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வடக்கு மண்டல மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ் தலைமைதாங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடக்க இருக்கின்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வர இருக்கின்றனர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமுல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, தொடக்க கல்வித்துறை முழு சுதந்திரமாக இயங்க அரசாணை 101, 108 ஆகியவற்றை ரத்து செய்தல், தேசிய மருத்துவ காப்பீட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ செலவினங்களை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் உள்ள பணிப்பாதுகாப்பு போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யும் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவற்றை பரிசீலித்து அவர் அறிவிப்புகள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.




