Breaking

Showing posts with label Certificates Verification. Show all posts
Showing posts with label Certificates Verification. Show all posts

Wednesday, September 14, 2022

September 14, 2022

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - In 2010, the director of school education ordered to request details of part-time temporary vocational teachers whose certificates were checked!

09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் & 2010–ல் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

Monday, August 29, 2022

August 29, 2022

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் 17 பாடங்களுக்கு சான்று சரிபார்க்க பட்டியல் வெளியீடு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் பணி நியமனத்துக்காக 17 பாடப் பிரிவுகளுக்கு சான்று சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குனர் கிரேடு-1, கணினி பயிற்றுனர் கிரேடு-1 ஆகிய பணியிடங்களில் நேரடி நியமனங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்கின்றன.

தமிழ்வழியில் படித்ததற்கான சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக வரும் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்வழி சான்றுகளை பட்டதாரிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். அவை தற்போது சரிபார்க்கப்பட்டு 17 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியல் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், மனையியல், உயிரி வேதியியல், இந்திய பண்பாடு, உடற்கல்வி, கணினி அறிவியல் பாடங்களில் தகுதியுள்ளவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடக்க உள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கான அழைப்பு கடிதம், ஆளறி சான்று படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். இவற்றை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. பட்டியலிடப்பட்ட நபர்கள், சான்று சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களின் அனைத்து அசல் சான்றுகள், ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய சுய கையொப்பமிட்ட நகல்கள், ஆளறி சான்று ஆகியவற்றின் சான்றுகள் கொண்டு வர வேண்டும்.

சான்று சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வராதவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அடுத்தகட்ட பணி தெரிவுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள். சான்று சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய http://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக 3 நாட்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
August 29, 2022

TRB அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு
விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.

செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Monday, August 08, 2022

August 08, 2022

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன.

இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கு 624 இடங்கள் உள்ளன. இவை நடப்பாண்டு இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 12-ல் தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த விவரங்களை http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இதையடுத்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஆக. 8) முதல்வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வரும் 13-ம் தேதி வழங்கப்படும். அவ்வாறு ஆணை பெற்றவர்கள், தேர்வுசெய்த படிப்புகளில் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, August 01, 2022

August 01, 2022

TNEA Counselling 2022: இதர மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

TNEA Counselling 2022: விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது; இதர மாணவர்களுக்கு எப்போது?

பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியது

கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27 வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது.இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நேரடியாக தொடங்கியது. வரும் 8ம் தேதி வரை விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விளையாட்டு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 3093 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் நாளொன்றுக்கு 300 மாணவர்கள் வீதம் கலந்தாய்விற்கு அழைக்கப்பட இருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) உதவியுடன் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சரிபார்க்கப்படும். இதர மாணவர்களுக்கு தமிழக அரசு அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் ஏழு நாட்களுக்குள் தாங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியில் சேர வேண்டும். கல்லூரியில் சேராத (அல்லது) கல்லூரியில் உரிய கட்டணத்தை செலுத்தாத மாணாக்கர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும். அந்த, இடங்கள் காலியாக காட்டப்பட்டு தரவரிசையில் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் அந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் விடுவதால் ஏற்படும் காலியிடங்கள் நடப்பாண்டு முதல் குறையும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

Monday, April 18, 2022

April 18, 2022

MRB - Temporary post of Skilled Assistant Grade - II (Electrician Grade - II) - Certificate Verification

Temporary post of Skilled Assistant Grade - II (Electrician Grade - II) You are hereby informed to appear for verification of your certificates / documents as claimed by you in your on-line application.

The list of documents to be produced by you (in original along with one set of self-attested photocopies) is attached herewith. You are required to appear for the verification as per the following date / time / venue.

CLICK HERE TO DOWNLOAD

Friday, April 08, 2022

April 08, 2022

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) - CERTIFICATE VERIFICATION SCHEDULE FOR VILLAGE HEALTH NURSE - PDF

CERTIFICATE VERIFICATION SCHEDULE FOR VILLAGE HEALTH NURSE

(DIFFERENTLY ABLED PERSONS CATEGORY ONLY)

You are hereby informed to appear for verification of your certificates/ documents as claimed by you in your on-line application.

The list of documents to be produced by you (in original along with one set of self-attested photocopies) is attached herewith. You are required to appear for the verification as per the following date/time/venue.

Note:

a. If the candidate fails to appear for verification of certificates / documents on the specified date / time, it will be presumed that the candidate is no longer interested in the post and his / her candidature is liable for rejection, without any further notice.

b. Mere calling for verification of certificates / documents does not confer any right over selection / appointment.

c. The candidates are called for verification of certificates / documents based on the particulars furnished in their on-line applications such as age, educational qualification, community, etc. The provisional selection of candidates will be made only after verification/ acceptance of certain documents, educational qualification possessed by him/her, clarification regarding community status and its acceptance, marks / rank list of the candidate etc. as the case may be. If any of their claims are found to be false or incorrect, their candidature is liable for rejection at any point of time.

d. Candidate called for Certificate Verification is hereby advised to appear with all the relevant documents in original without fail. Failure to produce even any one of the essential documents will result in rejection of his / her candidature.

CLICK HERE TO DOWNLOAD

Friday, February 11, 2022

February 11, 2022

எம்பிபிஎஸ், பிடிஎஸ் - 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவு: 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை கல்லூரிகளை தேர்வு செய்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் இணையதளத்தில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 6,082 கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு பல்மருத்துவ கல்லூரிகளிலும், அதைப்போன்று தமிழகம் முழுவதும் 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டனர். நேற்றுடன் இப் பணி முடிவடைந்தது. இதையடுத்து கல்லூரிகள் குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்று 17ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தெந்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும்.

இதையும் படிக்க | அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற உத்தரவு?? சென்னை உயர் நீதிமன்றம்

அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Saturday, January 29, 2022

Total Pageviews

Search This Blog