Breaking

Showing posts with label POCSO. Show all posts
Showing posts with label POCSO. Show all posts

Wednesday, January 31, 2024

January 31, 2024

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது

தலைமையாசிரியரை மாட்டிவிட நினைத்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது Teacher arrested under POCSO Act for trying to trap principal

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் சீண்டல் என பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது தோழி ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியை மீது பழிவாங்கும் நோக்கத்தில் போலி வீடியோ தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது...

Thursday, December 21, 2023

December 21, 2023

மாணவனுடன் காதல் - போக்சோவில் ஆசிரியை கைது.



மாணவனுடன் காதல் - போக்சோவில் ஆசிரியை கைது.

சென்னை - தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரில், மாணவனை கோவை காரமடை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஆசிரியை ஹெப்சிபா (28) கைது,

கணவனை பிரிந்து வாழும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசிரியையுக்கும், மாணவனுக்கு பழக்கம் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

Monday, November 06, 2023

November 06, 2023

பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்; தலைமை ஆசிரியர் மீது வழக்கு

ஓமலூர், நவ.6-

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி பெரிய வட கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியராக பெரியவடகம்பட்டி கோவிந்தம்மாள் பாலம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் (வயது 50) இருந்து வருகிறார்.

இவர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் காடையாம்பட்டி தொடக்கக்கல்வி அலுவலர் சந்திரா பள்ளிக்கு சென்று விசா ரித்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் ஓமலூர் அனைத்து மகளிர்போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் சின்ராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Wednesday, August 16, 2023

August 16, 2023

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ? - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கில், அடுத்த கல்வியாண்டு முதல் போக்சோ குறித்த பாடங்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என அம்மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்தது.

இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு காரணம், போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததே என கருத்து தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து ஒருவாரத்தில் பதில்மனு அளிக்க மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது

Wednesday, August 09, 2023

August 09, 2023

மருத்துவ கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள்: 'ஆறுதல்' மட்டும் கூறி அமுக்கப்படும் கொடுமை

மருத்துவ கல்லூரிகளில் பாலியல் குற்றங்கள்: 'ஆறுதல்' மட்டும் கூறி அமுக்கப்படும் கொடுமை

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தல்படி, 'விசாகா' கமிட்டி செயல்படாததால், பாலியல் புகார்கள் விசாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்கும் சட்ட விதிகளின்படி, அனைத்து இடங்களிலும் குறைதீர்ப்பு மற்றும் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துமீறல்:

தொடர்ந்து, நாடு முழுதும் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களும், பாலியல் புகார்களை விசாரிக்க, விசாகா குழுக்களை அமைக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையமும் அறிவுறுத்தியது. ஆனால், தமிழகத்தில் இக்குழுக்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் ஒருசில பேராசிரியர்கள், பாலுணர்வை துாண்டும் வகையில் மாணவியரிடம் பேசுவது, சீண்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியர் புகார் அளித்தாலும், அவை பேராசிரியர் மட்டத்திலேயே விசாரிக்கப்பட்டு, மாணவிக்கு ஆறுதல் மட்டும் கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், தவறு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், எச்சரித்து மட்டுமே விடப்படுகின்றனர்.

'விசாகா' கமிட்டிசமீபத்தில் இதுபோன்று ஒரு கல்லுாரியில், மாணவி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, பேராசிரியர் மட்டத்திலேயே விசாரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லுாரிகளில், விசாகா கமிட்டி முறையாக செயல்படாதது குறித்து, தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையம், பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுக்களில் இடம் பெற்றவர்களின் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அதன் வாயிலாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவ கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

கோரிக்கை

ஆனால், அதை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் பின்பற்றாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, விசாகா கமிட்டியில் இடம் பெற்றவர்களின் மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை, 'அறிவிப்பு பலகை'யில் ஒட்டப்படுவதுடன், அவை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மருத்துவ மாணவியர் கோரிக்கை வைத்துஉள்ளனர்.

Thursday, April 13, 2023

April 13, 2023

ஆசிரியர் கைது!

கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்

நாமக்கல் பரமத்திவேலூர்

ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் பள்ளி மாணவிகளை ஆபாச படம் மற்றும் வீடியோ எடுத்து தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரின் செயல் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அங்கு அவர்கள், ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு கருதி அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டு பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பேச்சுவார்த்தை

உடனடியாக அங்கு வந்த பரமத்தி போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பன்னீர்செல்வம் இருந்த அறையை திறக்க முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் கூடுதல் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

ஆனால் பெற்றோர்கள் ஆசிரியர் பன்னீர் செல்வத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரை பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்து பள்ளியின் கேட்டை இழுத்து மூடி முற்றுகையிட்டனர். போக்சோவில் கைது

இதைத்தொடர்ந்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு பெற்றோர்கள் ஆசிரியரை அழைத்து சென்ற போலீஸ் வாகனத்தை வெளியே செல்ல வழி விட்டனர். மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்ததுடன், தரக்குறைவாக திட்டியதாகவும் ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் கீரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Sunday, April 02, 2023

April 02, 2023

அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது- Government school teacher arrested in Pokso! -

செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம். இதேபோல் நேற்று முன்தினம் ஆசிரியர் முருகன் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Monday, February 13, 2023

February 13, 2023

போக்சோவில் கைதான உதவி தலைமையாசிரியருக்கு சிறை

போக்சோவில் கைதான உதவி தலைமையாசிரியருக்கு சிறை Jail for assistant principal arrested in POCSO

பள்ளி மனைவிக்கு பாலியல் தோலை தந்த உதவி தலைமை ஆசிரியருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை என உத்தரவு. போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் ரமேஷுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 07, 2023

January 07, 2023

அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி அறிவியல் பாட பிரிவு ஆசிரியர் பரணியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Saturday, August 13, 2022

August 13, 2022

ஆசிரியை மீதான 'போக்சோ' வழக்கு; தள்ளுபடி செய்ய ஐகோர்ட் மறுப்பு

'வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில், மாணவியின் பேன்டை கழற்ற வைத்த ஆசிரியை மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது,'' என கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு ஹலசூரில் தனியார் பள்ளியில், 2017ல் படித்து வந்த 5 வயது மாணவியின் பேன்டை, வகுப்பில் மற்ற மாணவியர் முன்னிலையில், 41 வயது ஆசிரியை கழற்றியுள்ளார்.

இதனால் அழுத அம்மாணவி, தன் பெற்றோரிடம் விஷயத்தை கூறினார். அவர்கள் உடனடியாக ஹலசூரு போலீஸ் நிலையத்தில், ஆசிரியை மீது கிரிமினல் புகார் அளித்தனர்.புகாரில் குறிப்பிட்டிருந்ததாவது:குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை, முதலில் குழந்தையை அடித்துள்ளார், பின், வகுப்பில் தன் மகளின் பேன்டை கழற்றி, மற்ற மாணவர்கள் முன் நிற்க வைத்துள்ளார். மேலும், அந்த ஆசிரியர், இங்குள்ள இருட்டு அறையில் அடைத்து விடுவதாகவும், அங்கு கொடூரமான நாய் இருப்பதாகவும் குழந்தையை மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, ஆசிரியை மீது போலீசார், 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ''ஒரு குழந்தையின் உடலை மற்றவர்களுக்கு காட்டுவது பாலியல் துன்புறுத்தலுக்கு சமம். இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. ஆசிரியை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.

Total Pageviews

Search This Blog