Breaking

Showing posts with label Private Schools. Show all posts
Showing posts with label Private Schools. Show all posts

Wednesday, March 04, 2026

Friday, May 10, 2024

May 10, 2024

கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுரை - செய்தி வெளியீடு - 09.05.2024

Wednesday, April 03, 2024

Tuesday, February 13, 2024

February 13, 2024

கட்டணம் செலுத்தாததால் பள்ளி குழந்தைகளை துன்புறுத்திய தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்

Principal and teacher of private school harassed school children for non-payment of fees - கட்டணம் செலுத்தாததால் பள்ளி குழந்தைகளை துன்புறுத்திய தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு;

வழக்கு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவு ;

பாலக்குறிச்சி தனியார் பள்ளி முதல்வர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ;

திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியை சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை

Wednesday, February 07, 2024

February 07, 2024

Private schools protest on 29th demanding continuous recognition

தொடர் அங்கீகாரம் கோரி 29ல் தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம் Private schools protest on 29th demanding continuous recognition

அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தொடர் அங்கீகாரம் வழங்கக்கோரி, வரும் 29ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. சங்கத்தின் மாநில பொது செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2022 - 23 மற்றும் 2023 - 24ம் கல்வி ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தில், அரசின் சார்பில் தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, கல்வி கட்டண பாக்கியை, தாமதமின்றி வழங்க வேண்டும்.அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தற்காலிக தொடர் அங்கீகாரத்தை தாமதமின்றி, நிபந்தனையும், நிர்ப்பந்தமும் இன்றி வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்று, 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பள்ளிக் கல்வி தலைமை அலுவலகம் உள்ள, டி.பி. ஐ., வளாகத்தில், வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, December 26, 2023

December 26, 2023

தனியார் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது: நீதிமன்றம்



தனியார் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது: நீதிமன்றம்

வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி மாணவர் சேர்க்கை வழங்காமல் தனியார் பள்ளிகளில் உள்ளகாலியிடங்களை பூர்த்தி செய்யாமல் இருப்பது கட்டாயக்கல்வி உரிமை சட்டத்துக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த லட்சுமணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது மகனுக்கு வால்பாறையில் உள்ள பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டவிதிகளின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கக் கோரி கடந்த ஆண்டு மே மாதம்விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த பள்ளி நிர்வாகம், எங்கள் வீடு பள்ளியில் இருந்து 1 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருப்பதாகக் கூறி, எனது விண்ணப்பத்தை நிராகரித்தது. அதன்பிறகு உரிய கல்விக் கட்டணம் செலுத்தி எனது மகனைஎல்கேஜி வகுப்பில் சேர்த்தேன். எனது மகனுககு உரிய காலகட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கை வழங்காமல், வசிப்பிட தூரத்தை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரித்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, எனது மனு மீது உரியநடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்துக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள உத்தரவு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை வழங்க வசிப்பிட தூரம் குறித்த விதிகள் கட்டாயம் கிடையாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாக இருந்தால் அந்த இடங்களை நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு அப்பால் வசிப்பவர்களைக் கொண்டும் நிரப்ப எந்த தடையும் இல்லை. காலியாக விடப்பட்ட இடங்கள்: குறிப்பிட்ட பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில் 2022-23-ம் ஆண்டில் 13 இடங்களும், 2023-24கல்வியாண்டில் 8 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளன. காலியிடம் இருக்கும்போது வசிப்பிட தூர விதிகளை காரணம் காட்டி, அந்த இடங்களை நிரப்பாமல் இருப்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக அமைந்து விடும்.

அந்தப் பகுதியில் பியூலா மெட்ரிக் பள்ளியை தவிர்த்து வேறு பள்ளி ஏதும் இல்லாததால் மனுதாரரின் மகனுக்கு 3 வாரங்களில் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை வழங்குவதை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எல்கேஜி மாணவர் சேர்க்கைக்காக பள்ளி நிர்வாகம் வசூலித்த கட்டணத்தை 2 வாரங்களில் மனுதாரரிடம் திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Friday, December 08, 2023

December 08, 2023

தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது



தனியார் பள்ளிகளை நாளை திறக்க கூடாது

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

4 மாவட்டங்களிலும் நாளை தனியார் பள்ளிகளையும் திறக்க கூடாது என உத்தரவு



“ சென்னை , செங்கல்பட்டு , திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை எவ்வித பள்ளிகளும் இயங்காது வரும் திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படும் " என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Friday, April 21, 2023

April 21, 2023

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பதில்தர உத்தரவிட்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தொடர்ந்த வழக்கை ஜூன் 5க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Wednesday, April 19, 2023

April 19, 2023

விடைத்தாள் மதிப்பீடு: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு Challenges for Answer Sheet Evaluation and Result

விடைத்தாள் மதிப்பீடு: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு - Evaluation of Answer Papers: Instructions for Private Schools

சென்னை, ஏப். 18: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.24 முதல் நடைபெறவுள்ள நிலையில், இப்பணியில் தனி யார் பள்ளிகளின் ஆசிரியர் களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அரசுத் தேர் வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப் பப்பட்ட சுற்றறிக்கை: விடைத் தாள் மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக் கையை சரியாக கணக்கிட்டு பாடவாரியான ஆசிரியர்களை உடனே பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள தங் கள் எல்லைக்குட்பட்ட அனைத் துப் பள்ளிகளில் இருந்தும் தகு தியான ஆசிரியர்களை பணி யில் இருந்து விடுவித்து தேர் வாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தவொரு பள் ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாதவாறு கண்காணிக்க வேண்டும்.தனியார் பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டு அப்பள்ளிக்கான தேர்வு வெளியிடப்படும்

Total Pageviews

Search This Blog