Breaking

Showing posts with label ITR. Show all posts
Showing posts with label ITR. Show all posts

Monday, November 06, 2023

November 06, 2023

யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?

யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?

PAN எண் வைத்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வருமான வரித்துறை நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் தங்களது வருமானம் & வரி விபரங்களைத் தனிப்பட்ட முறையில் வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இதற்கு IT RETURN என்று பெயர்.

2022-23 நிதியாண்டில், வருமான வரி செலுத்தியிருந்தாலும் - செலுத்தாவிட்டாலும் தங்களது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க (IT RETUN செய்ய) 31.07.2023 இறுதி நாளாகும்.

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் ரூ.5,000/- அபராதம் விதிக்கப்படும். இது மற்றவர்களுக்கு எப்படியோ அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கட்டாயமாக நேர் செய்யப்பட்டுவிடும். நான் இதுவரை IT RETURN செய்ததேயில்லையே. . . எனக்கென்ன அபராதமா விதித்தார்கள்? என எண்ணலாம். . . .

தொழில்நுட்ப வசதி, PAN, ஆதார் இணைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்துவிட்டதால் வருங்காலங்களில் கண்காணிப்புகள் தீவிரமாகும். அபராதம் தானாக வந்து சேரும்.

--- --- ----

எனக்குத்தான் FORM-16 வந்திருச்சே நான் ஏன் IT RETURN செய்ய வேண்டும்? என்று தோன்றலாம். . .

FORM-16 என்பது A & B என இரு பிரிவாக இருக்கும்.

FORM-16 A என்பது ஊதியம் வழங்கும் அலுவலர் தனது TAN எண்ணில் ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்து வைத்த வருமான வரித் தொகையை, வருமான வரித்துறையிடம் அவரவர் PAN எண்ணிற்கென பிரித்துச் செலுத்திவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் சான்றிதழ் ஆகும்.

FORM-16 B என்பது ஊதியம் வழங்கும் அலுவலரிடம் தாங்கள் பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்த வருமான வரிப் படிவத்தில் உள்ள தரவுகளைப் பிரிவு வாரியாக உங்களது PAN எண்ணில் பதிவேற்றியதைக் குறிக்கும் சான்றிதழ் ஆகும்.

எனவே இவையிரண்டுமே ஊதிய அலுவலர் வழங்கும் சான்றிதழ். அவ்வளவே. --- --- --- இந்த இரு சான்றிதழ்கள் போதாதா? மீண்டும் எதற்கு IT Return? எனலாம். . . .

FORM 16B-ல் தனிநபரது பணித்தளத்தில் பெற்ற ஊதியம் & பிடித்தம் சார்ந்தவை அலுலரால் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. அவ்வாறு பதிவேற்றப்பட்டதற்கு சார்ந்த ஊழியர் ஒப்புதல் அளிக்கிறார் என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

மேலும், இதனுடன் தனிநபரது மற்ற பணப்பரிமாற்றங்களையும் வருமான வரித்துறையின் மென்பொருளானது தங்களது PAN எண் வழி கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும். நடப்பு ஆண்டில், வங்கிச் சேமிப்புக் கணக்கு & வைப்புநிதி உள்ளிட்டவற்றிற்கு வரவான வட்டியானது அவரவர் PAN எண்ணில் தானாகவே பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் தனிநபர் ஒப்புதல் அளிக்கிறாரா என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

ஆக, பணி சார்ந்த பணப்பரிமாற்றம் & தனிப்பட்ட பணப்பரிமாற்றங்கள் என்று தனது ஒட்டுமொத்த வருமானம் - சேமிப்பு - செலவு - வரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தனது சுய நினைவோடே வருமான வரித்துறையிடம் நானே சமர்ப்பிக்கிறேன் என்ற தனிநபரின் உறுதியளிப்பை வருமான வரித்துறையானது IT Return மூலம்தான் உறுதி செய்து கொள்கிறது.

IT Return செய்யவில்லை எனில், உங்களது வருமானத்தை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க மறுக்கிறீர் / மறைக்கிறீர் என்றே பொருள் கொள்ளப்படும். இது தண்டனைக்குரிய பொருளாதாரக் குற்றமாகும்.

எனவே, வருமான வரி கட்டியிருந்தாலும் கட்டாவிட்டாலும், FORM 16 வாங்கியிருந்தாலும் உரிய காலத்தில் நமது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க IT Return செய்வோம்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

CLICK HERE TO DOWNLOAD INCOME TAX CALCULATOR 2024

Monday, August 08, 2022

August 08, 2022

வருமான வரி ரீஃபண்ட் வேண்டுமா.? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 5 வருமான வரி விதிகள்.!

ITR Refund | வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

2022 - 2023ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவடைந்து விட்டது. ஜூலை 31 அல்லது அதற்கு முன் ஐடி வருமானத்தைத் தாக்கல் செய்தவர்கள் கூடுதலாக செலுத்திய வரியை மத்திய நேரடி வரி அமைப்பு மூலம் திரும்ப பெறுவார்கள். இருப்பினும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியவர்கள், டிசம்பர் 31, 2022க்குள் ஐடி ரிட்டனைத் தாக்கல் செய்வதன் மூலம் தங்களுக்கான கூடுதல் வரித்தொகையை திரும்ப பெறலாம்.

வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டால், அபராதத் தொகையுடன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். ஐடிஆர் ரீஃபண்ட் என்பது வருமானம் இல்லை என்றாலும், அந்த ரீஃபண்ட் தொகைக்கான வட்டி வருமானமாக கருதப்படுகிறது. எனவே அந்த தொகைக்கான வருமான வரியானது அடுத்த ஆண்டுக்கான கணக்கில் சேர்க்கப்படுகிறது. வருமான வரி ரீஃபண்ட் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை பற்றி இங்கே பார்க்கலாம்...

தகுதி:

வருமான வரித் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் அல்லது அதற்கு முன்னதாக வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியானவர்கள். நீங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதி வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும்.

ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டி:

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால், ஏப்ரல் 1ம் தேதிக்கு வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கான வட்டித் தொகை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வருமான வரி ரீஃபண்ட் தொகைக்கு வரி இல்லை என்றாலும், ரீஃபண்ட் தொகைக்கான வட்டியானது வரிக்குட்பட்டது.

ரீஃபண்ட் வட்டி விகிதம்:

மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு ஐடிஆர் ரீஃபண்ட் தொகையில் 0.50 சதவீத மாதாந்திர வட்டி கிடைக்கும். வரிவிதிப்பு விதிகள்:

தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கிற்கான ரீ ஃபண்ட் தொகை என்பது, வரி செலுத்துவோர் ஏற்கனவே தெரிவித்த வருமானமாகும். எனவே தான் ஐடிஆர் ரீஃபண்ட் தொகைக்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் ஐடிஆர் ரீஃபண்ட் தொகை மூலமாக ஈட்டப்படும் வட்டியானது, தனிநபரின் நிகர ஆண்டு வருமானமாக கணக்கிடப்படுவதால் அதற்கு வருமான வரி விதிக்கப்படுகிறது.

வட்டி கணக்கீடு:

வருமான வரிச் சட்டம் பிரிவு 234D வருமான வரி ரீஃபண்ட் தொகை கணக்கிடப்படுகிறது. ஐடிஆர் ரீஃபண்ட் மீதான வட்டியைக் கணக்கிடும் போது, ​​மாதத்தின் எந்தப் பகுதியும் ஒரு மாதமாக கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களுக்கு ரூ.8,489 வட்டியைக் கணக்கிட வேண்டும் என வைத்துக்கொள்வோம். அப்போது 100 ஆக முழுமை பெறாத தொகையானது கணக்கில் இருந்து கழிக்கப்படும். அதாவது 8,489 ரூபாயில் உள்ள ரூ.89 கழிக்கப்பட்டு, மீதமுள்ள 8.400 ரூபாய்க்கான வட்டித்தொகை மட்டுமே கணக்கிடப்படும்.

Monday, August 01, 2022

August 01, 2022

ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா?

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் அடுத்து என்ன செய்வது.

வருமானவரி ரிட்டன் 2021-22ம் ஆண்டுக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதன்படி நேற்று இரவு 10 மணிவரை ஏறக்குறைய 65 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 5 கோடி பேர் ரிட்டன் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காலக்கெடுவை தவறவிட்டவர்கள் என்ன செய்ய முடியும். சட்ட நடவடிக்கையை எவ்வாறு தவிர்க்கலாம்.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதியை தவறவிட்டவர்கள் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ம்தேதிவரை கால அவகாசம் இருக்கிறது.

இதற்கு தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும் பிரிவில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். இந்த முறையில் தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

ஆண்டுக்கு ரூ.5லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வருமானவரிச் சட்டம் 243(எப்) பிரிவில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருந்துத. ஆனால், பட்ஜெட்டில் இந்த அபராதத்தை ரூ.5 ஆயிரமாக மத்திய நிதியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டுவோர் தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால், அதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். புதிய வருமானவரித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர், எந்தவிதமான அபராதமும் செலுத்தத் தேவையில்லை.

காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்

ஐடிஆர் கடைசித் தேதியையும தவறவிட்டால் வரி செலுத்துவோருக்கு பல பின்னடைவுகள் ஏற்படும். அதாவது வரி செலுத்துவோர் வரி அளவுக்கு ஏற்பட வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். இது கடந்த ஐடிஆர் தாக்கல் செய்த தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

காலதாமதமான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர், மூலதனச் செலவுகளில் ஏற்பட்ட இழப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், சொத்து விற்பனையால் ஏற்படும் இழப்பு முன்னெடுத்துச்செல்லலாம்

Total Pageviews

Search This Blog