Breaking

Showing posts with label suicide. Show all posts
Showing posts with label suicide. Show all posts

Tuesday, November 21, 2023

November 21, 2023

மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோரே காரணம் - உச்ச நீதிமன்றம்



Parents responsible for student suicide - Supreme Court - மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோரே காரணம்.

புதுடில்லி: 'மாணவர்கள் தற்கொலைக்கு கடும் போட்டி நிறைந்த சூழல் மற்றும் பெற்றோர் தரும் அழுத்தமே காரணம்.

இந்த விவகாரத்தில், போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், நாடு முழுதும் காளான்களை போல முளைத்து வரும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Friday, November 10, 2023

November 10, 2023

பணி நெருக்கடி - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்!!!



பணி நெருக்கடி - பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்!!! Work crisis - Govt school teacher who tried to commit suicide in school!!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர்நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவரைமீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பென்னாகரம் போலீஸார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரின் பணிகளில் குறைகள் இருப்பதாக, நேற்று காலை பள்ளியில் நடந்த பிரேயர்நிகழ்வின்போது தலைமை ஆசிரியர் சுட்டிக் காட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, “தற்போது ஆசிரியர்களுக்கு அதிகநெருக்கடிகள் உள்ளன. பாடங்கள் கற்பிப்பது மட்டுமின்றி, தொடர்பேஇல்லாத பல பணிகள் வழங்கப்படுவதால், மனஉளைச்சல் அடைகின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கும் நெருக்கடியும், அழுத்தமும் உள்ளது. எனவே, அரசு இதுகுறித்துஆய்வு மேற்கொண்டு, ஆசிரியப் பணியை செம்மையாக மேற்கொள்ள உதவ வேண்டும். மேலும், யோகா போன்ற பயிற்சிகளை அளிக்க வேண்டும்” என்றனர்.

Thursday, September 28, 2023

September 28, 2023

8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி

திருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை பிறந்தநாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி

திருவெண்ணெய் நல் லூர் அருகே பிறந்த நாளை கொண்டாட செலவுக்கு தாய் பணம் தராததால் விரக்தி அடைந்த 8-ம் வகுப்பு மாணவன் தூ க்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.

Tuesday, September 27, 2022

September 27, 2022

மது அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு

கமுதி அருகே மது அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு

கமுதி, செப். 26: கமுதி அருகே ஞாயிற்றுக் கிழமை மது போதை யில் ஆரம்ப சுகாதார நிலையத் தில்சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்ற பள்ளி மாண கௌதம் வர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள போத்தநதி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்ப சாமி மகன் கெளதம் (17). இவர் மண்டலமாணிக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கி ழமை மாலை தனது நண்ப ரான அழகுபாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்குச் சென்ற கௌதம் வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கௌதமை அவ ரது உறவினர்களானசரவணன், முத்துப்பாண்டி ஆகியோ ரின் உதவியுடன் தாயார் சித் ராதேவி மண்டலமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டுவிட்டு வீட்டிற் குச் சென்றுள்ளனர். ஆனால் இரவு 9 மணிக்கு கௌதம் சுயநி னைவின்றி கிடந்ததால் அவரை கமுதி அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் கெளதம் இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சித்ராதேவி அளித்தப் புகாரின் பேரில் மண்டலமா ணிக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Monday, September 26, 2022

September 26, 2022

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

தற்கொலை செய்து கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர் ஆடியோ வெளியீடு! - Audio release of a government school teacher who committed suicide!

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Audio link

Touch Here

Saturday, July 23, 2022

July 23, 2022

தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

ஸ்ரீபெரும்புதூரில் தாய் கண்டித்ததால், தனியாா் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கைஆழ்வாா் தெரு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகள் பாக்கியலட்சுமி. இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இதையும் படிக்க | G.O. (Ms) No.20 Dt: July 14, 2022 - மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை - PDF இந்த நிலையில், பாக்கியலட்சுமி சரியாகப் படிக்கவில்லை என அவரது தாய் பானு தொடா்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை பாக்கியலட்சுமியை படிக்கச் சொல்லி கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த மாணவி பாக்கியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Monday, July 18, 2022

July 18, 2022

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். கால்முறிவு ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

*சிறுமிக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

*குடும்ப பிரச்சினையால் தற்கொலை முயற்சி என மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், இன்று (ஜூலை 18) காலை பள்ளியின் 2ம் மாடியில் இருந்து கீழே குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை கண்டு சக மாணவிகள் கூச்சலிட்டதும், அங்கு திரண்ட ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கோகிலவாணி என்ற மாணவி இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து மாணவி பள்ளியின் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கூச்சலிட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடனடியாக தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது . பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கு அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாணவி தரப்பில் தெரிவித்ததாக தெரிகிறது. இரண்டாம் மாடிலிருந்து குதித்து தற்கொலை முயற்சித்ததில் சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது . மருத்துவர்கள் தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் மாணவியின் மனநிலையை அறிந்த அவருக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அரசு பள்ளி மாணவியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Total Pageviews

Search This Blog