Breaking

Showing posts with label Free Coaching Course. Show all posts
Showing posts with label Free Coaching Course. Show all posts

Wednesday, April 17, 2024

Saturday, August 12, 2023

August 12, 2023

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கும் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Wednesday, February 01, 2023

February 01, 2023

எம்.டி.எஸ்.மத்திய அரசு பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

எம்.டி.எஸ்.பணிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் Training classes for MDS Central Govt jobs start from today

எம்.டி.எஸ்.பணிக்கான இணையதளப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்க உள்ளன.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம், எம்.டி.எஸ். பணியில் சோ்வதற்கான போட்டித் தோ்வுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது.

இம்மாதிரியான பணிகளுக்கான தோ்வு குறித்த விழிப்புணா்வை தமிழக இளைஞா்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி ‘எ.ஐ.எம் டி.என்.’ என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இந்த யூடியூப் சேனலில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள எம்.டி.எஸ். தோ்வுக்கான காணொலி வகுப்புகளை அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி நடத்துகிறது.

பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநா்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு, அக்காணொலிகள் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தினமும் மூன்று காணொலிகள் வீதம் 60 நாள்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மேலும் 30 மாதிரித் தோ்வுகளை யும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘உனக்குள் தேடு’ என்ற செயலியின் மூலம் உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவா்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

இப்பயிற்சி புதன்கிழமை (பிப்.1) முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 31, 2023

January 31, 2023

Free Coaching Course for Union Civil Service Exams - ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் பல்நோக்கு பணியாளர், ஹவில்தார் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) மற்றும் Havidar என்ற பணியிடத்திற்கு ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தேர்வினை தமிழில் எழுதவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 01.01.2023 தேதியில் 18 வயது முதல் 27ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.0.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 01.02.2023 நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்போட்டி தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 044 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog