Breaking

Showing posts with label School Education. Show all posts
Showing posts with label School Education. Show all posts

Thursday, September 29, 2022

September 29, 2022

மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மாறுதல் பெற்ற அமைச்சுப் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - The processes of the Commissioner of School Education depend on the dismissal of transferred ministerial staff!

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, September 13, 2022

September 13, 2022

01.08.2022 நிலவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

01.08.2022 நிலவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

PROCEDURE OF JOINT DIRECTOR OF SCHOOL EDUCATION DEPENDING ON TEACHER POST DETERMINATION AS ON 01.08.2022

CLICK HERE TO DOWNLOAD

Friday, September 09, 2022

September 09, 2022

3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு

Order of the Joint Director of School Education seeking details of those who have filed a case for the 3rd Incentive Pay Hike - It is also ordered that the 3rd Incentive Pay Hike should not be allowed in the future.

3வது ஊக்க ஊதிய உயர்வு கோரி வழக்கு தொடுத்தவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இனிவரும் காலங்களில் 3வது ஊக்க ஊதிய உயர்வு முற்றிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

Tuesday, August 30, 2022

August 30, 2022

ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு

பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள பல்வேறு அலுவலகங்களிலும் ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை நிலுவைத் தொகை சார்ந்து, தொடரப்பட்டு நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளில் "Stay of recovery alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்து மட்டும், தனியருக்கு தகுதிவாய்ந்த ஊதியத்தினை திருத்தியமைத்து அடுத்துவரும் மாதங்களில் திருத்தப்பட்ட ஊதியத்தினை வழங்கிட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, ஊதியம் திருத்தியமைக்கப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை கல்வி மாவட்டம் வாரியாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 31.08.2022 க்குள் உடன் இவ்வலுவலகத்திற்கு தெரிவித்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.

தணிக்கைத் தடை சார்ந்த விவரங்கள் தனியரின் பணிப் பதிவேடுகளில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதனை ஆண்டாய்வுகளின் போதும் ஆய்வு செய்திடவும், தணிக்கைத்தடை அறிக்கை மீது அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆய்வு அலுவலர்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு படிவம்

Tuesday, August 23, 2022

August 23, 2022

Lesson Plan மற்றும் Work Done Register பயன்படுத்த தேவையில்லை - Commissioner Proceedings



வழக்கொழிந்த 11 பதிவேடுகளை நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் NOTES OF LESSON பராமரித்தால் போதும்

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும்.

4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORKD DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

1-3 ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டுமே பராமரிக்க வேண்டும். 4-12 வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மட்டும் போதுமானது, LESSON PLAN, WORK DONE பராமரிக்க தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் , தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு*

*பதிவேடுகளை குறைத்து கற்பித்தலை அதிகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.*

*ஆசிரியர் மனசு* திட்டத்தின் கீழ் வந்த கோரிக்கையினை அடுத்து *மரியாதைக்குரிய பள்ளிக்கல்வி அமைச்சரின் உடனடி உத்தரவுக்கிணங்க* ஆசிரியர்களுக்கு கற்பித்தல் சுதந்திரம் வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அரசாணை...

CLICK HERE TO DOWNLOAD

Friday, June 24, 2022

June 24, 2022

அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்

● மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் கட்டாயமாகும் இட ஒதுக்கீடு

● General - 31%, ST - 1%, SC - 18% ( SCA இருப்பின் அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு ), MBC - 20%, BCM - 3.5%, BC - 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்ற ஆணை.

Wednesday, June 01, 2022

June 01, 2022

பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் - PDF

தகவல் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு!!!

CLICK HERE TO DOWNLOAD

Sunday, April 24, 2022

April 24, 2022

தமிழகத்தில் இரு மொழி கொள்கை: பள்ளிகல்வித்துறை உறுதி

இரு மொழி கொள்கை

தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை கமிஷனர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும். தமிழக அரசு தன்னுடைய மொழி கொள்கையை பல்வேறு காலகட்டங்களில் தெளிவுபடுத்தியுள்ளது. தாய்மொழியான தமிழுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கை மட்டுமே அமலில் உள்ளது. பள்ளிகல்வித்துறை உறுதி

2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவரும் 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்களும், தமிழ் மொழியுடன் சேர்த்து அவர்தம் தாய்மொழியையும் விருப்ப பாடமாக படித்து தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 30, 2022

March 30, 2022

மாணவர்களின் கணித கற்றலை சுலபப்படுத்தும் ஆசிரியர்கள் - சாதாரண உபகரணங்களுடன் கற்பிக்கின்றனர்

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் கணித பாடத்தைஎளிமை யாக கற்க, ஆசிரியர்கள் மாற்று வழியை கையா ளத் தொடங்கியுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத் துள்ளதாக அவர்கள் தெரி வித்தனர்.

Thursday, March 17, 2022

March 17, 2022

அரசுப்பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு.

அரசுப்பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு.

அரசுப்பள்ளிகளில் செயல்பாடுகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் கிருஷ்ணகிரியில் ஆய்வு.

Saturday, March 12, 2022

March 12, 2022

ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

Monday, February 21, 2022

February 21, 2022

வாக்குகள் எண்ணும் பணி: நாளை (பிப்ரவரி 22) பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதில்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி:

இதையும் படிக்க | மத்திய கல்வி அமைச்சக கருத்தரங்கில் பிரதமர் மோடியின் உரை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 22ஆம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா.


இதையும் படிக்க | 2000 இந்திய மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog