Special classes on Saturdays
December 26, 2024
Showing posts with label conduct special classes. Show all posts
Showing posts with label conduct special classes. Show all posts
Thursday, December 26, 2024
Saturday, May 04, 2024
Monday, December 26, 2022
Private Schools
December 26, 2022
அரசு உத்தரவையும் மீறி அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளி நிர்வாகங்கள்
அரசு உத்தரவையும் மீறி அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளி நிர்வாகங்கள்
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த டிச.16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெற்றது.
இதில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிவடைந்ததை அடுத்து, மாணவர்களுக்கு டிச.24 முதல் ஜன 1-ம் தேதிவரை தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை மட்டும் வழங்கலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறைசுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம்வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இன்று(டிச.26) முதல் டிச.30-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இதில், அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டிப்புடன் வாய்மொழியாக பள்ளி நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். அரசு, பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்பால் மாணவ, மாணவிகள் குழப்பத்துக்குள்ளாகி உள்ளனர். பொதுத்தேர்வு போன்றே அரையாண்டு தேர்வு நடத்தப்பட்ட பிறகும்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘பொதுவாக தேர்வு விடுமுறைகாலங்களில் குறிப்பிட்ட பாடத்தைகற்பதில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கற்றல்வளர்ச்சிக்காக சில மாணவர்களுக்கு மட்டுமே பல ஆண்டுகளாகவே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான், இந்த கல்வியாண்டிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையில் இருந்து எங்களுக்கு எந்த சுற்றறிக்கையோ, வாய்மொழி உத்தரவோ வரவில்லை. ஆகையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக5 நாட்களுக்கான பாடப்பிரிவு அட்டவணைகள் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது’’ என்றனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரையாண்டு தேர்வு முடிவுற்ற பிறகு டிச.24-ம் தேதி முதல்ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுறைஅறிவிக்கப்பட்டு, இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மற்றும் பிற தொடர் சாதனங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த டிச.16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடைபெற்றது.
இதில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரையாண்டு தேர்வு முடிவடைந்ததை அடுத்து, மாணவர்களுக்கு டிச.24 முதல் ஜன 1-ம் தேதிவரை தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை மட்டும் வழங்கலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறைசுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்தும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம்வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இன்று(டிச.26) முதல் டிச.30-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இதில், அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டிப்புடன் வாய்மொழியாக பள்ளி நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். அரசு, பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய முரண்பட்ட அறிவிப்பால் மாணவ, மாணவிகள் குழப்பத்துக்குள்ளாகி உள்ளனர். பொதுத்தேர்வு போன்றே அரையாண்டு தேர்வு நடத்தப்பட்ட பிறகும்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ‘‘பொதுவாக தேர்வு விடுமுறைகாலங்களில் குறிப்பிட்ட பாடத்தைகற்பதில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் கற்றல்வளர்ச்சிக்காக சில மாணவர்களுக்கு மட்டுமே பல ஆண்டுகளாகவே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான், இந்த கல்வியாண்டிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையில் இருந்து எங்களுக்கு எந்த சுற்றறிக்கையோ, வாய்மொழி உத்தரவோ வரவில்லை. ஆகையால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக5 நாட்களுக்கான பாடப்பிரிவு அட்டவணைகள் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது’’ என்றனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரையாண்டு தேர்வு முடிவுற்ற பிறகு டிச.24-ம் தேதி முதல்ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுறைஅறிவிக்கப்பட்டு, இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மற்றும் பிற தொடர் சாதனங்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் நடக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Thursday, September 29, 2022
morning special classes
September 29, 2022
அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை / மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Commissioner of School Education orders to conduct special morning/evening classes for students appearing for government public examination
11. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)
- அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் மான்யம் பெறும் வகுப்புகளுக்கு அரசால் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மான்யம் பெறும் வகுப்புகளில் 01.08.2022- நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர் பணியிடங்கள் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் நிலையில் நிர்ணயம் செய்து 15.10.2022 க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
பணியாளர் நிர்ணய ஆணையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து முதலில் தேவையுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.
மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின் அதே வருவாய் மாவட்டத்திற்குள் தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுபணியில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேற்காண் பொருள் சார்ந்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
12. பள்ளிக் கல்வி ஆணையர் - அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் (Special Class) ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள், அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அப்பள்ளிகளுக்கான Action Plan குறித்த விவரத்தினை இணைஇயக்குநர் (பணியாளர் தொகுதி)-க்கு அனுப்பி வைக்க வேண்டும்.
11. இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி)
- அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளியில் மான்யம் பெறும் வகுப்புகளுக்கு அரசால் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மான்யம் பெறும் வகுப்புகளில் 01.08.2022- நிலவரப்படி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர் பணியிடங்கள் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலர் நிலையில் நிர்ணயம் செய்து 15.10.2022 க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
பணியாளர் நிர்ணய ஆணையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து முதலில் தேவையுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.
மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பின் அதே வருவாய் மாவட்டத்திற்குள் தேவையுள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்றுபணியில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேற்காண் பொருள் சார்ந்து விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
12. பள்ளிக் கல்வி ஆணையர் - அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காலை அல்லது மாலையில் கூடுதல் நேரம் (Special Class) ஒதுக்கி பள்ளிகளில் பாடம் நடத்தப்படவேண்டும். மாணவர்கள் எந்தப் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள், அதற்கான காரணம் குறித்து சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடம் கூட்டம் நடத்தி மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அப்பள்ளிகளுக்கான Action Plan குறித்த விவரத்தினை இணைஇயக்குநர் (பணியாளர் தொகுதி)-க்கு அனுப்பி வைக்க வேண்டும்.

