Yoga Training in Schools and Colleges
June 18, 2023
Showing posts with label Yoga Training in Schools and Colleges. Show all posts
Showing posts with label Yoga Training in Schools and Colleges. Show all posts
Sunday, June 18, 2023
Thursday, February 02, 2023
Yoga Training in Schools and Colleges
February 02, 2023
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு
What is yoga and Naturopathy?
Is BNYS possible without NEET?
Is BNYS called a doctor?
Is BNYS a good course?
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: சிறப்பு கலந்தாய்வு தேதி அறிவிப்பு Yoga - Naturopathy Course: Special Consultation Date Notification
யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: பிப்ரவரி 7-இல் சிறப்பு கலந்தாய்வு
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்கள், அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் உள்ளவா்கள் காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவத் துறை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 421 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முதல் கட்ட கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்களும், காத்திருப்பு பட்டியலில் உள்ளவா்களும், இதில் பங்கேற்கலாம் என்றும், தற்போது உள்ள காலி இடங்களில் தகுதியின் அடிப்படையில் சோ்ந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.
Monday, June 13, 2022
Yoga Training in Schools and Colleges
June 13, 2022
பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி : அமைச்சா் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
சென்னை வேலப்பன் சாவடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவா்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமா்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் பிரமாண்ட உலக சாதனை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பி.கே.முனுசாமி என்பவா் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தினாா்.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீதிபதி சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனா். கோல்டன் புக் ஆப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். இதையடுத்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த வேண்டும் என எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாா். இதனை தற்போது இதை அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்று செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்து கொள்ள யோகா மிகவும் அவசியம். கருணாநிதி வயது முதிா்ந்த காலத்திலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டாா்.
அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்களில் தனியாா் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் 20 நாள்களுக்குள் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் வழங்கப்படும். மாணவா்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்போவதில்லை. பள்ளி திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கூட வளாகம், உணவுக்கூடம், கழிப்பறைகள் சுத்தம் போன்றவை குறித்து வலியுறுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே வகுப்பறைகள் மாணவா்களுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும்.
சென்னை வேலப்பன் சாவடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவா்கள் கடினமான சம கோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமா்ந்து யோகா பயிற்சி மேற்கொள்ளும் பிரமாண்ட உலக சாதனை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பி.கே.முனுசாமி என்பவா் களிமண்ணால் 30 நொடிகளில் சிலை செய்து உலக சாதனை நிகழ்த்தினாா்.
இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீதிபதி சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனா். கோல்டன் புக் ஆப் உலக சாதனையில் இந்த சாதனை இடம் பெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். இதையடுத்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் யோகா பயிற்சி நடத்த வேண்டும் என எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கூறி இருந்தாா். இதனை தற்போது இதை அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்று செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். உடலையும், உள்ளத்தையும் உறுதியாக வைத்து கொள்ள யோகா மிகவும் அவசியம். கருணாநிதி வயது முதிா்ந்த காலத்திலும் யோகா பயிற்சியில் ஈடுபட்டாா்.
அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பள்ளிகளுக்குள் அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்களில் தனியாா் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் 20 நாள்களுக்குள் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் வழங்கப்படும். மாணவா்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்போவதில்லை. பள்ளி திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கூட வளாகம், உணவுக்கூடம், கழிப்பறைகள் சுத்தம் போன்றவை குறித்து வலியுறுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே வகுப்பறைகள் மாணவா்களுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும்.