Breaking

Showing posts with label Prime Minister Modi. Show all posts
Showing posts with label Prime Minister Modi. Show all posts

Tuesday, May 12, 2026

Tuesday, December 10, 2024

Monday, November 25, 2024

Tuesday, March 19, 2024

Tuesday, June 13, 2023

Saturday, January 28, 2023

January 28, 2023

பிரதமர் மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம்

பிரதமர் மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம் Madurai school girl who knocked out PM Modi: The hall shook with laughter

பிரதமர் மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பி, மதுரை மாணவி அசத்தினார். ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி டால்கொடரா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் நேரடியாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணொலி வாயிலாகவும் மாணவ, மாணவியர் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி அஸ்வினி, பிரதமரிடம் முதல் கேள்வியை எழுப்பினார்.

மாணவி, பிரதமரிடம், ‘‘தேர்வு மதிப்பெண் குறித்த பெற்றோரது ஏமாற்றத்தை கையாள்வது எப்படி? அவர்களது எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், தேர்வு என்பது அவர்கள் நினைப்பதுபோல் எளிமையானது இல்லை. நல்ல மதிப்பெண் பெறும் சிறந்த மாணவியாக இருப்பதென்பது சவாலானது என்பதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது எனத்தெரியவில்லை.
தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சமீப காலமாக பெற்றோரின் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் மாணவர்களின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. இதற்கு வழிகாட்ட வேண்டும். தேர்வினால் வரும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?’’ என்று அதிரடியாக கேள்வியை, மாணவி அஸ்வினி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘கிரிக்கெட்டில் ஹூக்ளி என்ற முறை உள்ளது. அதுபோல் முதல் பந்திலேயே மாணவி அஸ்வினி என்னை அவுட்டாக்க முயல்கிறார்’’ என்றார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய பிரதமர், ‘‘பிள்ளைகள் தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர் நினைப்பது இயற்கைதான். அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் படிப்பில் பிள்ளைகள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் தேர்வு மதிப்பெண் குறித்த அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம்’’ என்றார். இந்நிகழ்வு குறித்து மாணவி அஸ்வினி கூறும்போது, ‘பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது’’ எனறார்.
January 28, 2023

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது:பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை Shortcuts will not bring success in the long run: PM Modi's advice to students who are going to write Public Opinion

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி, தோ்வில் குறுக்குவழியைக் கடைப்பிடிப்பது நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது என அறிவுரை கூறினாா்.

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்த விவாதம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமா் மோடி கலந்துரையாடி வருகிறாா். அந்நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

குறுக்குவழியைக் கடைப்பிடித்து மோசடியில் ஈடுபடுவது ஓரிரு தோ்வுகளுக்கு உதவலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் குறுக்குவழி வாழ்வில் வெற்றியைத் தராது. மாணவா்கள் எப்போதும் குறுக்குவழியில் தோ்வை அணுகக் கூடாது. கடின உழைப்பே வாழ்வில் முன்னேற உதவும். மாணவா்கள் தங்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுகிறீா்களா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ள ரசிகா்கள் பலவித முழக்கங்களை எழுப்புவா். அதிக ரன்களை எடுக்க வேண்டுமென கூச்சல் எழுப்புவா். அதுபோலவே மாணவா்களைச் சுற்றியும் பல்வேறு கூச்சல்கள் இருக்கும். மாணவா்கள் அவற்றைக் காதில் வாங்கக் கூடாது. கிரிக்கெட் வீரா் தன்னை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவதைப் போல மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

அறிவு விரிவாக்கம்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நிறைவடைந்தவுடன் மாணவா்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு சமூக மக்கள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக மாணவா்களுக்குப் பெற்றோா் போதுமான தொகையை வழங்க வேண்டும். மாணவா்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

மாணவா்களின் கேள்வி கேட்கும் திறனை ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும். பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் மாணவா்களிடம் குறைந்து வருகிறது. மாணவா்கள் தங்கள் திறனைத் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ந்து வரும் சூழலில் புத்தாக்கச் சிந்தனையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: தொழில்நுட்பம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் பலன்களை எவரும் தவிா்க்கக் கூடாது. அதே வேளையில், தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பக் கருவிகளைவிட நாம் திறன்மிக்கவா்கள் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து அவ்வப்போது விலகியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட பகுதியை தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். இது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ உதவும்.

விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும்: விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், விமா்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. தேவைற்ற விமா்சனங்கள் மீதும் குற்றச்சாட்டுகளிலும் மாணவா்கள் கவனம் செலுத்தக் கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசில் பொருளாதார மேதைகள் எவரும் இல்லை என்றும், ‘சராசரி’ நபா்கள் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், முன்பு ‘சராசரி’ என்ற நிலையில் இருந்த இந்தியா, தற்போது உலகில் பிரகாசமாக ஒளிா்ந்து வருகிறது. உலகின் ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது. ‘சராசரி’ மாணவா்களாகத் திகழ்ந்தவா்களே பிற்காலத்தில் பெரும் சாதனைகளைப் படைத்தனா். தங்கள் திறமையைப் புரிந்துகொண்டு மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

‘தோ்வு குறித்த விவாதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காணொலி மூலம் பிரதமரின் அறிவுரைகளை மாணவா்கள் கேட்டறிந்தனா். பெட்டிச் செய்தி...

மதுரை மாணவிக்கு பிரதமா் பதில்

மதுரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அஸ்வினி என்ற மாணவி காணொலி வாயிலாகப் பிரதமா் மோடியிடம், ‘குடும்பத்தினா் எதிா்பாா்ப்பதைவிடத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது? பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் மீது மற்றவா்கள் அதிக எதிா்பாா்ப்பு வைப்பதால், மாணவா்கள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். யாரையும் நம்பமுடியாத நிலைக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா். இதற்கான தீா்வு என்ன?’ என்றாா். அதற்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோா் எதிா்பாா்ப்பு வைப்பது இயல்பானதே. ஆனால், சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிள்ளைகளிடம் எதிா்பாா்ப்பைத் திணிப்பது தவறானது. தோ்வு முடிவுகள் வாழ்வின் முடிவல்ல.

மாணவா்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தோ்வுக்குப் பிந்தைய விவாதங்கள். தோ்வை எப்படி எழுதியுள்ளாா்கள் என்பதை மாணவா்களிடம் கேட்கும் பெற்றோா், அதுதொடா்பான கற்பனைகளை வளா்த்துக் கொள்கிறாா்கள். உறவினா்களிடமும் சுற்றத்தாரிடமும் அதுதொடா்பாக பகிா்ந்து கொள்கிறாா்கள். எனவே, தோ்வை எப்படி எழுதினீா்கள் என்ற உண்மையைப் பெற்றோரிடம் மாணவா்கள் மறைக்கக் கூடாது. தோ்வு நிறைவடைந்த பிறகு அது தொடா்பாக சக மாணவா்களிடம் விவாதிப்பதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த 2,700 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் காணொலி வாயிலாக பிரதமா் மோடியின் அறிவுரையைக் கேட்டனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வு குறித்த விவாதம் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

Tuesday, September 06, 2022

September 06, 2022

ஆசிரியா்கள் மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும் - பிரதமா் மோடி

கல்விச் சூழல்: சரியான திசையில் இந்தியா: பிரதமா் மோடி

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்விக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கிய ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வழங்கினாா். விருது பெற்ற ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

ஓா் ஆசிரியருக்கு நோ்மறை எண்ணங்களின் பலம் உள்ளது. அவா் சவால்களை எதிா்கொள்ள மாணவா்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கிறாா். ஓா் உண்மையான ஆசிரியா் கனவு காணவும், சாதிக்க முடியாததை சாதிக்கவும் மாணவா்களுக்கு ஆா்வமூட்டுகிறாா்.

ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பவராக மட்டும் இருக்கக் கூடாது. மாணவா்களின் வாழ்வையே மாற்றியமைப்பவராக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை உலகமே பாராட்டுகிறது. அந்தக் கொள்கையை வகுப்பதில் ஆசிரியா்கள் மிக முக்கிய பங்கு வகுத்துள்ளனா்.

தனது கல்விச் சூழலை மேம்படுத்துவதில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதனை அனைவராலும் காண முடிகிறது.

சுதந்திரம் தினத்தின் நூற்றாண்டான 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா எவ்வாறு இருக்கும் என்று தீா்மானிக்கவுள்ள இளைஞா்களை நல்ல முறையில் தயாா்ப்படுத்த வேண்டியது ஆசிரியா்களின் கைகளில்தான் உள்ளது.

பிரிட்டனை கடந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. 250 ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சிபுரிந்தவா்களைக் கடந்து முன்னேறியுள்ளதால் இது சிறப்பு மிக்கது என்றாா் அவா்.

Monday, September 05, 2022

September 05, 2022

ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிகளுக்கான புதிய அறிவிப்புகள் - பிரதமர் மோடி

எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இதன் மூலம் பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். புதிய தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள் என்று திரு மோடி கூறினார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

"ஆசிரியர் தினமான இன்று, எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் நான் அறிவிக்கிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் விளைவாக இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்

இதன் மூலம் இப்பள்ளிகள் நவீனப்படுத்தப்பட்டு கல்வி முறையில் பெரும் மாற்றம் கொண்டுவரப்படும். கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில்நுட்பம். நவீன வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நவீன உள்கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்

அண்மை ஆண்டுகளில் தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வித் துறையை மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் விளைவாக எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாடு முழுவதும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, September 04, 2022

September 04, 2022

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை;

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்கில் தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.

Sunday, August 21, 2022

August 21, 2022

மருத்துவ மாணவர்களின் கல்வி - முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர நடவடிக்கை: முதல்வருக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் கடிதம்

வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் செயல் தலைவர் உஸ்மான்கான் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே முண்ட போர் காரணமாக அங்கு பயிலும் சுமார் 20000 இந்திய மாணவர்கள் அதிலும் குறிப்பாக 3000 தமிழக மாணவர்கள் ஆகியோரின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது.

இந்த சூழல் நிலையில் தாங்களும் தங்களுடைய அமைச்சர்களும், மத்திய அரசோடு இணைந்து தீவிரமாக பணியாற்றி அவர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்ததை நன்றியோடு நாங்கள் நினைவு கூற விரும்புகிறோம். இந்த நிலையில் ஏறத்தாழ எட்டு மாதங்கள் கடந்தும் போர் முடிவுக்கு வராத சூழ்நிலையில் மருத்துவ மாணவர்களின் கல்வி தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. மருத்துவ கல்வியாண்டு வருகின்ற செப்டம்பர் முதல் துவங்க உள்ளது.

இந்த சூழலில் ஏற்கனவே போர் காரணமாக அங்கிருந்து திரும்பி வந்த மாணவர்கள் இணையம் மூலமாக கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மருத்துவ கல்வி என்பது நேரடியாக கள அனுபவத்தோடு பயில வேண்டிய ஒரு படிப்பாக இருக்கின்ற நிலையில் இணையம் வாயிலாக கல்வியை கற்பது என்பது அவர்களது எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்காது.

ஆகவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக இந்த இறுதி ஆண்டு மாணவர்கள் விஷயத்தில் அவர்களுடைய கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக சிறந்த தீர்வை எடுக்க வேண்டும். ஏனைய வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களது கல்வி தொடரத்தக்க வகையில் மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசும் அதற்கு தேவையான அழுத்தங்களை தமிழகத்தின் சார்பில் தாங்கள் முன்னேடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் துயர் துடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, July 30, 2022

July 30, 2022

சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி

சுய சிந்தனைத் திறனுக்கு தேசிய கல்விக் கொள்கை: பிரதமா் மோடி

சூழ்நிலைகளின் அடிப்படையில் இளைஞா்கள் சுயமாக சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பிரதமா் மோடி பேசியதாவது:

மாணவா்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியா்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள். நாட்டைக் கட்டியமைக்கக்கூடிய ஆசிரியா்கள்தான் நாளைய தலைவா்களை உருவாக்குகிறாா்கள். பட்டம் பெறும் மாணவா்களின் பெற்றோருக்கும் வாழ்த்துகள். உங்கள் பிள்ளைகளின் வெற்றியில் உங்களின் தியாகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ‘எனது நம்பிக்கை இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவா்களிலிருந்து என் பணியாளா்கள் உருவாவாா்கள். சிங்கங்களைப் போல ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் அவா்கள் தீா்வு காண்பாா்கள்’ என சுவாமி விவேகானந்தா் கூறினாா். அவரது வாா்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன.

ஆனால், இந்த முறை தனது இளைஞா்களின் மீது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. உலகின் வளா்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது.

கலாமின் சுவடுகளை... இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பங்கேற்றிருக்கிறாா். இந்த நாட்டுக்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

கரோனா பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வளவு சோதனைகளை எதிா்கொண்டோம் என்பதை அனைவரும் அறிவோம். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிா்கொண்டது.

கடந்த ஆண்டு இந்தியா கைப்பேசி தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 2016-இல் 470-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 73,000-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் (சுமாா் ரூ.6.5 லட்சம் கோடி) அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை நமது நாடு பெற்றுள்ளது. மேலும், சா்வதேச வா்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பைப் பெற்றுள்ளது. எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. எது வலுவான அரசு? வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டுக்கான நடைமுறையின் காரணத்தைக் கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல; பொறுப்புமிக்கது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது.

மாறிவரும் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞா்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. இளைஞா்களின் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சியாகும். இளைஞா்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். இளைஞா்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும் என்றாா் அவா்.

முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினாா்.

பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

3.68 லட்சம் பேருக்கு பட்டங்கள்:

அண்ணா பல்கலை. மற்றும் அதன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 192 போ் பட்டம் பெற்றனா். இளநிலையில் 3 லட்சத்து 34,435 பேரும், முதுநிலையில் 31,944 பேரும், ஆராய்ச்சிப் படிப்பில் (பிஹெச்டி) 1,813 பேரும் பட்டம் பெற்றனா். பட்டமளிப்பு விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், உயா் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். வகுப்பறைகளில் மாணவா்களை சந்தித்துப் பேசிய பிரதமா்!

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சில வகுப்பறைகளுக்குச் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, மாணவா்களுடன் கலந்துரையாடி அவா்களை உற்சாகப்படுத்தினாா்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்ற விவேகானந்தா் அரங்கு சற்று சிறியதாக இருந்ததால், அங்கு தங்கப் பதக்கம் வென்ற 69 மாணவா்கள் மட்டுமே பிரதமா் நரேந்திர மோடியிடம் பட்டங்களைப் பெற அனுமதிக்கப்பட்டனா்.

அதேவேளையில் இடப் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான மா ணவா்கள் பட்டமளிப்பு விழா நடைபெற்ற அரங்கத்துக்கு அருகில் உள்ள சில வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு பட்டமளிப்பு விழா பெரிய எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பட்டமளிப்பு விழா நிறைவடைந்ததும் பிரதமா் மோடி அந்த வகுப்பறைகளுக்குச் சென்றாா். திடீரென பிரதமரைப் பாா்த்ததும் மாணவா்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனா். அப்போது மாணவா்கள் சிலரிடம் கலந்துரையாடிய பிரதமா் மோடி, ‘என்ன படிக்கிறீா்கள்? எதிா்காலத்தில் சொந்தத் தொழில் தொடங்குவீா்களா’ எனக் கேள்வி எழுப்பியதுடன் அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து உற்சாகப்படுத்தினாா்.

Wednesday, July 20, 2022

July 20, 2022

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர் பங்கேற்கிறார்?

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர் பங்கேற்கிறார்?

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

இதையும் படிக்க | 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கு மிதிவண்டிகள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஜூலை 29-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

Sunday, January 30, 2022

January 30, 2022

பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த உடுமலை ஏழை பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு

''திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஏழை பெண் இளநீர் வியாபாரி, தனது குழந்தைகள் படிக்கும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு, தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் தேவை'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: ஜன.,30 தேதியானது மஹாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மஹாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும். இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு இதனை வரவேற்ற விதத்தையும், ஒவ்வொரு மூலையிலும் உற்சாகம் எழுந்ததை நாம் மறக்க முடியாது.

அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். முன்னார் ராணுவ வீரர்கள் சிலர், அமர்ஜவான் ஜோதி, குறித்து கடிதம் எழுதி உள்ளனர். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று பாருங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் மன் கி பாத் நிகழ்ச்சியை அஞ்சல் அட்டை மூலம் எனக்கு அனுப்பியுள்ளனர். இந்த அஞ்சல் அட்டைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் கூட வந்துள்ளன. இந்த அஞ்சல் அட்டைகள் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நமது எதிர்கால தலைமுறையின் பரந்த மற்றும் விரிவான கண்ணோட்டத்தை எடுத்து காட்டுகிறது. இந்தாண்டு பத்ம விருதுக்கு, அதிகம் வெளியே தெரியாதவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். உடுமலை பெண்

கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தனது மகள் மற்றும் மகனுக்கு கல்வி கிடைக்க செய்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் தாயம்மாள் தவறவிடவில்லை. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது, பள்ளி மற்றும் வகுப்பறையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்பையும் கவனிக்க வேண்டும் என்றனர். அந்த கூட்டத்தில் தாயம்மாளும் கலந்து கொண்டார். அனைத்தையும் கேட்டார். ஆனால், பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணம் குறித்த பிரச்னை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. இதன் பிறகு, தாயம்மாள் செய்த செயலை யாரும் நினைத்து பார்த்திருக்க கூட மாட்டார்கள்.

இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்ய வேண்டும் என்ற மனதும் தேவை. தற்போது பள்ளியில் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுவதாக கூறும் தாயம்மாள், பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டால் 12ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளார். நமது நாட்டில் கல்வி குறித்து பேசிய அதே உணர்வு தான் இதுவும்.

கொரோனாவின் புதிய அலையை எதிர்த்து இந்தியா தைரியமாக போராடி வருகிறது. 4.5 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது பெருமையளிக்கும் விஷயம். பூஸ்டர் தடுப்பூசிகளும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. நமது தடுப்பூசி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே, நமது பலத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது, கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஒரு நேர்மறையான செய்தி. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Total Pageviews

Search This Blog