Breaking

Showing posts with label CEO orders. Show all posts
Showing posts with label CEO orders. Show all posts

Thursday, December 29, 2022

December 29, 2022

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் முறைகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக,

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து பகிரப்படுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தற்போதைய நிலை மற்றும் விண்ணப்பம் திறக்கும் தேதி, விண்ணப்பிக்கும் கடைசி தேதி நுழைவுத் தேர்வு கட்டணம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 15 நுழைவுத் தேர்வுகளின் இரண்டாவது புதுப்பிப்பு இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு விவரங்களை தெரிவித்து அதில் பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசக ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, October 03, 2022

October 03, 2022

காலாண்டு தேர்வு - ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு CEO உத்தரவு - Quarterly Examination – CEO orders asking teacher for explanation

காலாண்டு தேர்வு - ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு CEO உத்தரவு - Quarterly Examination – CEO orders asking teacher for explanation

கலெக்டர் ஆய்வின்போது அம்பலம் கணிதத்தேர்வு விடைகளை போர்டில் எழுதிய ஆசிரியர் - விளக்கம் கேட்டு சிஇஓ உத்தரவு



தர்மபுரி, அக்.3: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த 28ம் தேதி ஆய்வுக்கு சென்றார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் காலாண்டு தேர்வு நடந்து வந்தது. அன்றைய தினம் கணித தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு நன்றாக எழுதினீர்களா என கலெக்டர் சாந்தி கேட்டார். நன்றாக எழுதினோம் என கூறிய மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை வாங்கி கலெக்டர் சாந்தி பார்த்தார்.

அப்போது அதில் இருந்த கேள்விகளுக்கான பதிலை கலெக்டர் கேட்டபோது மாணவர்கள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டி ருந்தனர். பதில் தெரியாமல் எவ்வாறு தேர்வை எழு தினீர்கள் என கேட்டபோது. எங்கள் கணித ஆசிரியர் விடைகளை போர்டில் எழுதிப்போட்டார், அதனை பார்த்து நாங்கள் பதில் எழுதினோம் என மாணவர்கள்

தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர் சாந்தி, உடனடியாக இதுகுறித்து விசாரிக்கும்படி சிஇஓ குணசேகருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிஇஓ பள்ளி தலைமையாசிரியரிடம் ஒரு வாரத்தில் விளக்க கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog