Breaking

Showing posts with label Directive to Principal Education Officers. Show all posts
Showing posts with label Directive to Principal Education Officers. Show all posts

Thursday, August 18, 2022

August 18, 2022

PSTM சான்றிதழ் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப் பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத் தன்மையை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து, உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னர், தகுதியானவர்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம்.

Friday, July 22, 2022

July 22, 2022

தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பள்ளி பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, மாநிலம் முழுதும், தனியார் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்த, பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக்கு எதிராக வெடித்த போராட்டத்தில் பள்ளி வளாகம் தீக்கிரையானது. பள்ளி கட்டடத்தை, கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதில், பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி, அடைக்கப்படாமல் திறந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு நீல வண்ணத்தில் மிதிவண்டி

அதேபோல், பள்ளி வளாகத்தில் தேவையான இடங்களில், கண்காணிப்பு கேமரா இல்லாதது; உறைவிட பள்ளிகளுக்கான விதிகளை சரியாக பின்பற்றாதது என, பல குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. வகுப்பறை கட்டடத்தில் விடுதி

அதாவது, தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின்படி, பள்ளி வகுப்பறை கட்டடத்திலேயே, தங்கும் அறைகள் இருக்க கூடாது. ஆனால், கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டடத்திலேயே, விடுதி இருந்ததும் தெரிய வந்தது. இதை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்ய தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்தும், அதை பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டு விட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிக்க | நீட் தேர்வு ஆடை விவகாரம்: 5 பேர் கைது

வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் செயல்படும் 'ரெசிடென்ஷியல் ஸ்கூல்' எனப்படும் உறைவிட பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து, அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog