Breaking

Showing posts with label EMPLOYMENT. Show all posts
Showing posts with label EMPLOYMENT. Show all posts

Saturday, January 28, 2023

January 28, 2023

முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..! - கடைசி தேதி - ஜனவரி.30, 2023



முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Senior Research Fellow, Research Assistantஉள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - தமிழ்நாடு வனத்துறை, வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம்

பதவி - Senior Research Fellow, Research Assistant

காலியிடம் - 03

கல்வித்தகுதி - BE / B.Tech in CSE / IT, ME / M.Tech, Masters Degree, M.Sc

சம்பளம் - ரூ.20,000-35,000

வயது வரம்பு - 28

பணியிடம் - சென்னை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல், எழுத்து தேர்வு

இணையதள முகவரி - https://tngreencompany.com/

கடைசி தேதி - ஜனவரி.30, 2023

முகவரி - Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur

Tuesday, September 20, 2022

September 20, 2022

Fake interviews to provide employment! warning - வேலைவழங்குவதாக போலி நேர்முகத்தேர்வுகள்! எச்சரிக்கை

வேலை வழங்குவதாகக் கூறி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் மூலம் பணம் சிலர் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.



ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்காக எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை என்றும், இதனால், வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.



இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சில மர்ம நபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் பணி வாய்ப்புக்காக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.



பணியிடங்களை நிரப்புவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வர்களிடம் பணம் பெறுவதில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியிடங்கள் குறித்து அறிந்துகொள்ள ஜெட் கேரியர்ஸ் (JetCareers) என்ற இணையப் பக்கத்தை பின்தொடரலாம். ஜெட் ஏர்வேஸ் பணியிடங்கள் குறித்து சமூகவலைதளத்தில் அல்லது மின்னஞ்சல்களில் வரும் அறிவிப்புகளை பரிசீலனை செய்துகொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, September 16, 2022

September 16, 2022

COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) (Notification) - TNPSC இன்று (15/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - New Job Notification - PDF

TNPSC இன்று (15/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - New Job Notification - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination

WARNING

 All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based.

 The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.

 The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/ Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure III) before finally submitting the same.

 The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.

 Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

1. ONE TIME REGISTRATION:

It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs.150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment. [The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post. [For further details refer para 2 of the Commission’s Instructions to Applicants.]

CLICK HERE TO DOWNLOAD

Thursday, September 15, 2022

September 15, 2022

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

217 காலியிடங்கள்: TNPSC அறிவிப்பாணை வெளியீடு.

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது.

இது குறித்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியில் தொகுப்பாளர் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்பப்படும்.

தகுதியாளர்கள் இன்று முதல் அக்.,14 வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அக்.,19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜன.29 ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும்.

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNPSC இன்று (14/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) (THE TAMIL NADU JAIL SERVICE) (Notification) - PDF



JAILOR (MEN) & JAILOR (SPECIAL PRISION FOR WOMEN) (THE TAMIL NADU JAIL SERVICE) (Notification)

Applications are invited from eligible candidates only through online mode upto 13.10.2022 for direct recruitment to the posts of JAILOR (Men) and JAILOR (Special Prison for Women) in Prisons & Correctional Services Department included in the Tamil Nadu Jail Service.

Examination for this post shall be conducted in OMR / Computer Based Test (CBT) Method.

WARNING

All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based.  The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.  The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.

 The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.

 Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

1. ONE TIME REGISTRATION:

It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment. [The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post.

CLICK HERE TO DOWNLOAD
September 14, 2022

4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளியில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்த பின்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறையில் மருத்துவ ஆள் சோ்ப்பு வாரியம் (எம்ஆா்பி) மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒப்பந்த முறையில் பணியில் சோ்ந்தவா்களை நிரந்தரப்படுத்துவது இயலாது. அதேவேளையில், எம்.ஆா்.பி. மூலம் பணியமா்த்தப்பட்டவா்களைத் தரம் பிரித்து பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்து வருவோா் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவா்களைத் துறை வாரியாக நிரந்தரப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் தமிழகம் முழுவதும் தொற்றா நோய் உள்ளவா்களை 70 சதவீதம் கண்டறிந்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இத் திட்டத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத் திட்டத்தில் தன்னாா்வலா்களாகப் பணியமா்த்தப்பட்டவா்கள், தங்களுக்கு பணிச்சுமை உள்ளது என தெரிவித்துள்ளனா். இவா்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

புதிய கட்டடங்கள்: தருமபுரி மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் பாலக்கோடு வட்டம், நமாண்ட அள்ளியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், காரிமங்கலம் அரசு சமுதாய உடற்மைய வளாகத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு, நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டடம், ரூ. 37.50 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ. 25 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு ஆகிய கட்டடங்கள் உள்பட மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ. 4.89 கோடி மதிப்பில் 14 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் மொத்தம் 127 பயனாளிகளுக்கு ரூ. 71.10 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Saturday, September 10, 2022

September 10, 2022

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள் - Notification PDF

SBI வங்கியில் 5000 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க விவரம் இங்கே!


SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம் 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SBI Notification - Download here...

Thursday, September 08, 2022

September 08, 2022

பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

பொதுத்துறை நிறுவனமான பொக்கோரா இரும்பு ஆலையில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.BSL/R/2022-01

பணி: Attendent-Cum Technician Trainee (NAC)
காலியிடங்கள்: 146

பயிற்சிக்காலம்: 2 ஆண்டுகள்.

உதவித்தொகை: பயிற்சியின் போது முதலாம் ஆண்டு மாதம் ரூ.12,900 வழங்கப்படும், இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,100 வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரும்பு ஆலையில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

Saturday, August 27, 2022

August 27, 2022

இளநிலை பொறியாளர் தேர்வு-2022: SSC புதிய அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2022

மத்திய பணிக்காக காத்திருக்கும் பொறியியல் இளைஞர்களுக்கான வாய்ப்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் பணிக்காக கவனம் செலுத்தி வரும் இளைஞர்கள் இதுபோன்ற மத்திய அரசு தேர்வுகள் மீதும் கவனம் செலுத்தி முயற்சித்தால் வெற்றியடையலாம். 

விளம்பர எண். HQ-PRII03(2)/2/2022-PP-II

பணி: இளநிலை பொறியாளர் (Junior Engineer)

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ, பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I - கொள் குறிவகை கேள்விகளும், தாள் II - விரிவாக விடையளிக்கும் வகையான கேள்விகளும் கொண்டதா இருக்கும். 

எழுத்துத் தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.sss.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2022

மேலும் விவரங்கள் அறிய www.sss.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
August 27, 2022

4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2022

பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள 4300 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 4,300

1. எல்லை பாதுகாப்பு படை - 353
2. மத்திய தொழில் பாதுகாப்பு படை - 86
3. மத்திய ரிசர்வ் போலீஸ் படை - 3112
4. இந்தோ - திபெத் எல்லை போலீஸ் - 191
5. சாஸ்த்ரா சீமா பால் - 218
6. தில்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டர் - 340 

தகுதி: ஏதாவதொரு இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 தேதியின் அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2022

மேலும் விபரங்கள் அறிய https://ssc.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

Monday, August 22, 2022

August 22, 2022

மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி

மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய ஆயுத காவல்படையில் 4300 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு நாடுமுழுவதும் நவம்பரில் நடக்கவிருக்கிறது. இத்தோ்வில் இரண்டு தாள்கள் இருக்கும். இப்பணிக்கு ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஆக.30-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். இத்தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ரூ.62 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
August 22, 2022

இளநிலை பொறியாளா் பணி தோ்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு!

இளநிலை பொறியாளா் பணிக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வாணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணியாளா் தோ்வாணையம் இளநிலை பொறியாளா் (கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை) பணியிடங்களுக்கு நாடுமுழுவதும் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் இணையவழி அடிப்படையிலான திறந்தநிலை தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இணையவழி அடிப்படையிலான எழுத்துத்தோ்வு 2 மணிநேரம் நடக்கும். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 25 முதல் 32 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோ்வு நடைமுறை, பாடத்திட்டங்கள், இதர விவரங்களை அறிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம். கா்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை செப்.2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு கல்விக்கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 20, 2022

August 20, 2022

ஸ்டார் நர்ஸ் பணி - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் (ITBP) காலியாக உள்ள ஸ்டார் நர்ஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub Inspector (Staff Nurse)

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் General Nursing & Midwifery பிரிவில் டிப்ளமோ முடித்து மத்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ITBP ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, முழு மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2022

Total Pageviews

Search This Blog