Breaking

Showing posts with label Plus 2 student attempted suicide in Salem. Show all posts
Showing posts with label Plus 2 student attempted suicide in Salem. Show all posts

Monday, July 18, 2022

July 18, 2022

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். கால்முறிவு ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

*சிறுமிக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

*குடும்ப பிரச்சினையால் தற்கொலை முயற்சி என மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், இன்று (ஜூலை 18) காலை பள்ளியின் 2ம் மாடியில் இருந்து கீழே குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை கண்டு சக மாணவிகள் கூச்சலிட்டதும், அங்கு திரண்ட ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கோகிலவாணி என்ற மாணவி இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து மாணவி பள்ளியின் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கூச்சலிட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடனடியாக தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது . பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கு அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாணவி தரப்பில் தெரிவித்ததாக தெரிகிறது. இரண்டாம் மாடிலிருந்து குதித்து தற்கொலை முயற்சித்ததில் சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது . மருத்துவர்கள் தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் மாணவியின் மனநிலையை அறிந்த அவருக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அரசு பள்ளி மாணவியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Total Pageviews

Search This Blog