Breaking

Showing posts with label national flag. Show all posts
Showing posts with label national flag. Show all posts

Thursday, August 11, 2022

August 11, 2022

முதன்மை கல்வி அலுவலருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கண்டனம்!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்களாக மற்ற ஆசிரியர்கள்,ஆசிரியரல்லாத அலுவலர்களும் 50 ரூபாய் கொடுத்து தேசிய கொடியை வாங்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களின் மாவட்ட பொறுப்பாளர் திரு.பழ.கௌதமன் கூறுகையில்...

கரூர் மாவட்ட முதன்மை செயலாளரின் செயல் கடும் கண்டத்துக்குரியது. எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கொடிகள் பெறப்பட்டுள்ளதால் பகுதிநேர ஆசிரியர்கள் நீங்கலாக மற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொடிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். எமிஸ் இணையதளத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்களும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது ஒரு முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது.அவருக்கு திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.
August 11, 2022

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

ரூ.50க்கு தேசிய கொடி ஆசிரியர்களுக்கு விற்பனை

சென்னை:'சுதந்திர தின விழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. 'எமிஸ்' இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு, 50 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல், 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து, முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில், சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறுகையில், ''எல்லா வகை பணிகளிலும், பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். ''அதேநேரம், நாட்டின், 75வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்பது போல், பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது; அடிப்படை உரிமைக்கு எதிரானது,'' என்றார்.

Total Pageviews

Search This Blog