TET
February 02, 2026
Showing posts with label CERTIFICATES. Show all posts
Showing posts with label CERTIFICATES. Show all posts
Monday, February 02, 2026
Saturday, November 01, 2025
Saturday, November 02, 2024
Wednesday, May 01, 2024
Sunday, March 24, 2024
Saturday, December 23, 2023
ITI certificate
December 23, 2023
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - உயர்கல்வித்துறை
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.. A rare opportunity for college students who lost their certificates due to rain and flood.
மாணவர்களின் கவனத்திற்கு...
மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு..
சான்றிதழ்களின் நகலை கட்டணமின்றி பெறலாம்
கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவர்களுக்கு கட்டணமின்றி நகல்கள்
நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் www.mycertificates.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் உயர்கல்வித்துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
சந்தேகங்களுக்கு 1800 425 0110 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம்
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்
உயர்கல்வித்துறை
Tuesday, December 12, 2023
CERTIFICATES
December 12, 2023
இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம் - mycertificates.in
இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம்.
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கம்.
சான்றிதழ்களின் நகல்களை mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.
பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800–425–0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்-உயர்கல்வித்துறை.
Tuesday, June 27, 2023
Friday, May 26, 2023
Saturday, February 11, 2023
Latest News
February 11, 2023
ITI சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்
ITI சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் ITI certificate holders can get 10th and 12th equivalent certificate
தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் அதேபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள், 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம்,முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தொழிற்பயிற்சி நிலைய (ஐடிஐ) சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் அதேபோல் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி, என்ஏசி சான்றிதழ் பெற்றவர்கள், 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம்,முழுவிவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Thursday, February 09, 2023
MBBS courses
February 09, 2023
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோா் தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான திறனறித் தோ்வில் பங்கேற்பதற்கான தகுதிச் சான்றிதழுக்கு வியாழக்கிழமை (பிப்.9) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம். அந்தத் தோ்வு நிகழாண்டில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழ் கட்டாயம். அதை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையப் பக்கத்தின் வாயிலாக வியாழக்கிழமை (பிப்.9) முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தை அணுகலாம்.
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான திறனறித் தோ்வில் பங்கேற்பதற்கான தகுதிச் சான்றிதழுக்கு வியாழக்கிழமை (பிப்.9) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது அவசியம். அந்தத் தோ்வு நிகழாண்டில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு தகுதிச் சான்றிதழ் கட்டாயம். அதை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையப் பக்கத்தின் வாயிலாக வியாழக்கிழமை (பிப்.9) முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தை அணுகலாம்.
Tuesday, December 27, 2022
mbbs tamil college
December 27, 2022
உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும்: மருத்துவக்கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில்வதற்காக உடனடியாக இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றுகளை வழங்கவேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை. மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவக்கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புக்கு சேரும் பொழுது அரசுக்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவையில் பணியாற்றவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதை தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் தங்கள் ஏற்கனவே கொரோனா காலத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே மேலும் பணியாற்ற அவசியம் இல்லை. எனவே தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டானர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் மருத்துவக்கல்வி சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றிதழ்களை வழங்க உத்தரவிட கோரி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளார் என நீதிபதி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதனால் உயர்கல்வி பயில்வதற்காக உடனடியாக இளநிலை எம்.பி.பி.எஸ். சான்றுகளை வழங்கவேண்டும் என உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை. மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல மருத்துவக்கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவக்கல்வி பயில்வதற்கு தங்களின் எம்.பி.பி.எஸ். சான்றுகளை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்ட படிப்புக்கு சேரும் பொழுது அரசுக்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவையில் பணியாற்றவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதை தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் தங்கள் ஏற்கனவே கொரோனா காலத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே மேலும் பணியாற்ற அவசியம் இல்லை. எனவே தங்களது மருத்துவக்கல்வி சான்றிதழ்களை தங்களிடம் வழங்க உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டானர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மாணவர்களின் மருத்துவக்கல்வி சான்றிதழ்களை உடனடியாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.
Saturday, October 01, 2022
Tuesday, July 05, 2022
சான்றிதழ்
July 05, 2022
பல்வேறு சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆவணங்கள் வேண்டும்..? பட்டியல் இதோ...
பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்காக மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்காகவும் வாரிசுச்சான்று, இருப்பிடம், பட்டா மாறுதல் உட்பட பல்வேறு சான்றிதழ்களை கேட்டு, அரசு இ சேவை மையங்களில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அந்த சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கும் போது என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரியாமல் அலைய வேண்டியுள்ளது. வீட்டுக்கும், இ சேவை மையத்துக்கும் அலைவதால் வீண் அலைச்சலும், காலதாமதமும் உண்டாகிறது. எனவே, வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் சான்றிதழ்களை பெற தேவையான ஆவணங்களின் பட்டியல் இதோ...
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
பிறப்புச் சான்றிதழ்
மாற்றுச்சான்றிதழ் (TC)
மதிப்பெண் பட்டியல் (10, பிளஸ் 2)
ஜாதி, வருமானச் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
தாத்தா, பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கல்வித்தகுதி சான்றிதழ்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
மாற்றுச்சான்றிதழ் (TC)
பெற்றோரின் ஜாதி சான்றிதழ் அல்லது மாற்றுத் சான்றிதழ் (யாராவது ஒருவருடையது மட்டும்)
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
வருமானச் சான்று (payslip)
வருமான வரி செலுத்திய ரசீது
பான்கார்டு
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ (2)
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
பிறப்புச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் (TC)
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
OBC சான்று பெற தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
ஜாதிச் சான்றிதழ்
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
முதியோர் உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு
ஆதார் கார்டு
வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம்
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
முழுப்புலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
கிரையப்பத்திரம்
மூலப்பத்திரம்
கம்ப்யூட்டர் சிட்டா
இ.சி.,
உட்பிரிவு பட்டா மாறுதல் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
கிரையப்பத்திரம்
மூலப்பத்திரம்
கம்ப்யூட்டர் சிட்டா
இ.சி.,
மனை வரைப்படம்
வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் போட்டோ
ரேஷன் கார்டு (இறந்தவரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்)
ஆதார் கார்டு (வாரிசுதாரர்கள் அனைவரின் ஆதார் கார்டு)
இறப்புச் சான்றிதழ்
இறந்தவரின் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை
இவை அனைத்தும் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் ஒரு காப்பி.
இ சேவை மையத்துக்கு செல்லும் போது மறக்காமல் செல்போன் எடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய செல்போன் நம்பருக்கு வரும் otp எண்ணை உடனடியாக தெரிவித்தால் மட்டுமே தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ்கள் அனைத்தும் 15 நாட்களில் வழங்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டா மாறுதல் முழுபுலத்துக்கு 15 நாட்களும், உட்பிரிவு இனத்துக்கு ஒரு மாதம், முதியோர் உதவித்தொகைக்கு ஒரு மாதம் என பெறுவதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் தயாரானதும் உங்களின் மொபைல் எண்ணுக்கு 'மெசேஜ்' அனுப்பப்படும். அந்தந்த மையத்துக்குச் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். முன்னதாக சான்றிதழ்களின் தேவைக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சரிபார்ப்புக்காக ஒரிஜினல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும்.







