Breaking

Showing posts with label முதலமைச்சர். Show all posts
Showing posts with label முதலமைச்சர். Show all posts

Monday, August 01, 2022

August 01, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி

"கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார், முதலமைச்சரை அழைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்துவதற்கான தேதியை கேட்டுள்ளோம்"

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி

முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் தள்ளி வைக்க முடிவு

அரசு ஜாக்டோ-ஜியோ நடத்தும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார்

ஒரு சில கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தகவல். போராட்டத்தை தள்ளிவைப்பது, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை நடத்த உள்ளனர். நிதி அமைச்சரின் செயல்பாடுகள், அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக முதல்வரிடம் நிர்வாகிகள் நேரடியாக புகார்

Tuesday, July 26, 2022

July 26, 2022

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மாணவச் செல்வங்களே, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும்; உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை"

Tuesday, July 12, 2022

July 12, 2022

மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் தகவல் - பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி

திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இது குறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், நீச்சல், பளுதூக்குதல், பூப்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கால்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டியில் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மற்றும் 25ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள், 22ம் தேதி காலை 7 மணி முதல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வளைகோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகள் மேலும் 23ம் தேதி காலை 8 மணியளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பளுதூக்குதல் போட்டி, 23ம் தேதி காலை 7 மணியளவில் முகப்பேர் டென்னிஸ் விளையாட்டரங்கில் டென்னிஸ், நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் 25ம் தேதி காலை 8 மணியளவில் திருவெற்றியூர் பூந்தோட்ட தெரு அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பூப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் 19ம் தேதி மாலை 5 மணிவரை.

மேலும், தகவல்களை பெற திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Total Pageviews

Search This Blog