Breaking

Showing posts with label ஆசிரியைகள். Show all posts
Showing posts with label ஆசிரியைகள். Show all posts

Tuesday, July 26, 2022

July 26, 2022

வேலூர் அருகே ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே தனியார் பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் டேவிட். இவரது மனைவி மின்னி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மாலை பணிமுடிந்து வில்சன் டேவிட் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மர்மநபர்கள் தனியறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 30 பவுன் நகைளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வில்சன் டேவிட் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Monday, July 18, 2022

July 18, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக மேலும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தாா்.

மாணவி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது பெற்றோா், உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 4 நாள்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில் மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனா். இந்நிலையில், 5-ஆவது நாளாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாணவியின் உறவினா்கள், ஆதரவாளா்கள் கனியாமூரில் தனியாா் பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பினர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளியை அடித்து நொறுக்கி, பள்ளி சூறையாடப்பட்டு பேருந்துகள் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில், விழுப்புரம் சரக டிஐஜி உள்பட சுமாா் 100 போலீஸாா் காயமடைந்தனா்.

மாணவி மரணமடைந்த வழக்கில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் 329 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog