Breaking

Showing posts with label part time Teachers. Show all posts
Showing posts with label part time Teachers. Show all posts

Monday, March 02, 2026

Saturday, January 24, 2026

January 24, 2026

அரசு பள்ளி பணியிடங்களுக்கான நிரந்த பணியிட தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் - முதல்வர் அறிவிப்பு.

Thursday, January 15, 2026

Sunday, October 06, 2024

Saturday, January 06, 2024

January 06, 2024

பொங்கல் போனஸ், ஊதிய உயர்வு இல்லை - பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை!



*பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தான் இல்லை அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வையாவது கொடுத்திருக்கலாமே என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை.*

இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்குகிறது.இந்த ஆண்டும் அதற்காக 167 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழக்கம் போலவே இந்த ஆண்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. நாங்களும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே பணிபுரிகின்றோம்,நாங்களும் தமிழர்கள் தானே,எங்களுக்கும் பொங்கல் ஒரு பண்டிகை தானே.இந்நிலையில் நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். தமிழர் திருநாளாம் நன்னாளில் பக்கத்து வீட்டு பானையில் பொங்கல் பொங்குவதை ஏக்கத்தோடு பார்க்கும் வலி என்று தீருமோ தெரியவில்லை.

குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அறிவித்த 2500 ரூபாய் ஊதிய உயர்வையாவது டிசம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து கொடுத்திருந்தால் எங்கள் வீட்டுப் பானையும் பொங்கியிருக்கும்.240 நாட்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் தான் பொங்கல் போனஸ்க்கு தகுதியானவர்களாம்.நாங்களும் 240 நாட்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று தானே சொல்கிறோம்.அதற்கும் அரசு அனுமதிக்கவில்லை,அதைக் காரணம் காட்டி போனஸும் வழங்கவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கூறினார்.

Saturday, December 23, 2023

December 23, 2023

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் Part-time teachers in Jaktojio protest

ஜாக்டோஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :

மீண்டும் பழைய ஓய்வூதியம், காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் போன்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுவோர், தினக்கூலிகள் உள்பட பல்வேறு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோஜியோ சார்பில் வருகின்ற டிசம்பர் 28 ந் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

இதில் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நேரத்திலாவது முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் பகுதிநேர ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் கணினி, உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்வியல்திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை ஆகிய பாடங்களில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டாக பணி புரிகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தலின்போது இன்றைய முதல்வர் வாக்குறுதி கொடுத்ததை நினைவூட்டி வருகின்றனர்.

அனைத்து நாளும் முழுநேரம் வேலை, மே மாதம் சம்பளம், பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம், இறந்தோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி போன்றவை வழங்கி, இந்த வேலையை முறைப்படுத்தி, பணி பாதுகாப்பு கேட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்து முதல் முறையாக சம்பள உயர்வு ரூ.2500 வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததுகூட இதுவரை வழங்கவில்லை.

எனவே முதல்வர் ஆணையிட்டு சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

இதனை ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்துவோம்.

*****

எஸ்.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் : 9487257203

Total Pageviews

Search This Blog