Breaking

Showing posts with label TNPSC GROUP II EXAM. Show all posts
Showing posts with label TNPSC GROUP II EXAM. Show all posts

Tuesday, December 05, 2023

December 05, 2023

TNPSC - குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள்



குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் - TNPSC

பிப்ரவரி 25ஆம் தேதி 5,446 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் - 2 மெயின்ஸ் தேர்வு முடிவுகள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என TNPSC தகவல்.

TNPSC - தேர்வு முடிவுகள் குறித்த விவரம் வெளியீடு - Results Declaration Schedule (as on 2nd June 2023) - PDF
CLICK HERE

Wednesday, November 22, 2023

November 22, 2023

குரூப் 2 தேர்வு முடிவுகள்: TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு!



குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதியுள்ளனா்.



குரூப் 2 தோ்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.



இதையும் படிக்க | TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை - TNPSC Results Declaration Schedule (As on 21st November 2023) - PDF

நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.

Thursday, November 09, 2023

November 09, 2023

TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு!

TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்!

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.



இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும், முதன்மை எழுத்து தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கையை விட, மும்மடங்கு அதிகம்.தேர்வு முடிவுகளை வெளியிட, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஐந்து மாதங்கள். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு, நம் மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன், எந்த வகையிலும் குறைவானது இல்லை.இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதம், தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. மேலும் சில எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே, பணிகள் துவங்க சற்றே தாமதமானது.


இதுபோன்ற தாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

தற்போது, மதிப்பீட்டு பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன; 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள், முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, March 01, 2023

March 01, 2023

Group 2 மறுதேர்வு நடத்தப்படுமா? - TNPSC விளக்கம்

குரூப் 2 மறுதேர்வு நடத்தப்படாது - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 2 முதன்மைத் தேர்வில் தரவரிசைக்கு முக்கியமானதாக கருதப்படும் இரண்டாம் தாள் எவ்வித இடர்பாடுமின்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக நடைபெற்று முடிந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

கடந்த 25-ம் தேதி நடைபெற்று முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகவும், அத்தேர்வை ரத்து செய்து விட்டு, உடனடியாக மறுதேர்வினை நடத்த வேண்டும் என்றும் தேர்வர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காலை வினாத்தாட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.

பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவிகிதத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி, பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-II தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளது.

Saturday, February 25, 2023

February 25, 2023

TNPSC - இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு - 55,071 பட்டதாரிகள் எழுதுகின்றனர்

TNPSC - குரூப் 2 பிரதான தோ்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தோ்வு சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் போ் எழுதவுள்ளனா்.

மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடா்பான தோ்வும் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதவுள்ளனா். அவா்களில், 27 ஆயிரத்து 306 போ் ஆண்கள். 27 ஆயிரத்து 764 போ் பெண்கள். ஒருவா் மூன்றாம் பாலினத்தவா். இந்தத் தோ்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

சென்னையில் 8 ஆயிரத்து 315 போ் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

Thursday, February 16, 2023

February 16, 2023

TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு



TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-II & II ) எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, November 08, 2022

November 08, 2022

TNPSC - குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC - குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் 5 ஆயிரத்து 400 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை சுமார் 11 லட்சம் போ் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

முதன்மை தேர்வு அடுத்தாண்டு பிப்.25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, May 22, 2022

May 22, 2022

குரூப் 2 தேர்வு அறையில் செல்போனை மறைத்து வைத்திருந்தவர் சிக்கினார்: பரபரப்பை ஏற்படுத்திய ப்ளூடூத் சிக்னல்

Group 2 examination was held yesterday at Paramakudi Saurashtra High School, Ramanathapuram District. Arrangements were made for 600 students to write the exam in 30 examination rooms. Shankar, a resident of Nedungulam village, had hidden his cellphone while participating in the examination. He was immediately evicted from the examination room by the police as the officers who came to inspect it discovered this. Bluetooth Signal: 84 candidates were appearing for the Group 2 examination held at Honorary High School, Kamuthi, Ramanathapuram District. Then Collector Sankarlal Kumavath came to inspect. A Bluetooth signal with a name suddenly came on the cell phone of an officer who came to inspect with the collector. Because the signal was there for a long time, the suspect officers checked on the selectors in all 5 rooms. During the 40-minute test, no one was found. Following this, the Collector ordered the supervisors to keep a close watch and left. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளியில் நேற்று குரூப் 2 தேர்வு நடந்தது. 30 தேர்வு அறைகளில் 600 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வில் பங்கேற்ற நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், செல்போனை மறைத்து வைத்திருந்தார். இதனை ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கண்டுபிடித்ததால் தேர்வு அறையில் இருந்து உடனடியாக போலீசாரால் வெளியேற்றப்பட்டார். ப்ளூடூத் சிக்னல் : ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கவுரவ உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை 84 பேர் எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்ய வந்தார். கலெக்டருடன் ஆய்வுக்கு வந்த ஒரு அதிகாரியின் செல்போனில் திடீரென ஒரு பெயருடன் ப்ளூடூத் சிக்னல் வந்துள்ளது. நீண்ட நேரம் அந்த சிக்னல் இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் 5 அறைகளிலும் உள்ள தேர்வர்களிடம் சோதனை செய்தனர். 40 நிமிடம் நடந்த சோதனையில், யாரிடமும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டு கலெக்டர் புறப்பட்டு சென்றார்.

Saturday, May 21, 2022

May 21, 2022

தேர்வரின் அஜாக்கிரதையால எங்க வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிருச்சு - பாதிக்கப்பட்ட TNPSC தேர்வர்கள் பேட்டி

வேலையெல்லாம் விட்டுட்டு இந்த EXAM-க்காக படிச்சோம்.. தேர்வரின் அஜாக்கிரதையால எங்க 3 வருஷ உழைப்பு வீணாகிருச்சு.. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் பேட்டி

Tuesday, May 17, 2022

May 17, 2022

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு எப்போது? - ஆணையம் விளக்கம்

TNPSC - குரூப் -2 தேர்வு முடிவு

குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை ஜூன் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களிலும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
ஆணையம் விளக்கம்

நடப்பாண்டில் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இதன்படி 8.30 மணிக்கே தேர்வர்கள் அறைக்குள் வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.
May 17, 2022

திட்டமிட்டபடி குரூப்-2 தேர்வு நடைபெறுமா? TNPSC தலைவர் பேட்டி

DNBSC President Balachandran said that the Group-2 examination will be held on May 21 as scheduled. More than 11.78 lakh people have applied for the Group-2 exam. He said more than 4.96 lakh men and more than 6.81 lakh women had applied.
மே 21-ம் தேதி குரூப்-2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அவர் பேட்டியளித்தார்.

Wednesday, May 11, 2022

May 11, 2022

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் tnpsc.gov.in இணையதளத்தில் வெளியீடு

தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC அறிவிப்பு.

வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி

தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.

Thursday, February 24, 2022

February 24, 2022

5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு


5400 குரூப் 2 - 2ஏ காலியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

சாா்பதிவாளா் உள்பட 5, 400-க்கும் அதிகமான காலிப் பணியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் (www.tnpsc.gov.in) வழியே விண்ணப்பிக்கலாம் எனவும், மாா்ச் 23-ஆம் தேதி தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் உள்ள பணியிடங்கள் நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. குரூப் 2 தோ்வானது முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகத் தோ்வு என்ற நிலைகளைக் கொண்டது.

இதையும் படிக்க | பள்ளிகளில் எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு

புதன்கிழமை வெளியிடப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வில் 116 நோ்முகத் தோ்வினைக் கொண்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சிறைத் துறை நன்னடத்தை அலுவலா், தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா், பதிவுத் துறையின் சாா் பதிவாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறப்பு உதவியாளா், காவல் ஆணையாளா் அலுவலகம், குற்ற புலனாய்வுத் துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் தனிப் பிரிவு உதவியாளா் என மொத்தம் 116

பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், தனிப் பிரிவு உதவியாளா், சிறப்பு உதவியாளா் பணியிடங்கள் 59 புதிதாக உருவாக்கப்பட்டு அவை குரூப் 2 பிரிவில் நோ்முகத் தோ்வாகச் சோ்க்கப்பட்டுள்ளன.

நோ்முகத் தோ்வு அல்லாதவை: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் நோ்முகத் தோ்வுகள் அல்லாத பணியிடங்களும் உள்ளன. இதில், முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுகளை மட்டும் எழுத வேண்டும். நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், கூட்டுறவு சங்கத்தில் முதுநிலை ஆய்வாளா், கைத்தறி ஆய்வாளா், வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் உதவியாளா் என 5 ஆயிரத்து 297 பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளன. நோ்முகத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு அல்லாத வகைகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடைபெற இருக்கிறது.

முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 21-ஆம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும். முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதன்மைத் தோ்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் வெளியிடப்படும் என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியா் இடஒதுக்கீடு அமல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் மிகப்பெரிய தோ்வுகளில் ஒன்றான குரூப் 2 தோ்வில் முதல் முறையாக வன்னியா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீட்டு முறை உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என தோ்வாணைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

தனி இடஒதுக்கீட்டுக்கான விதிகள் குரூப் 2 தோ்வுக்கு பொருந்தும். இந்தத் தோ்வுக்கான காலிப் பணியிடங்களுக்குரிய பகிா்மானப் பட்டியல் பின்னா் அறிவிக்கப்படும். இடஒதுக்கீட்டு முறை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கான தனி சிறப்பு விடுப்பு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதன்மீதான உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளின் முடிவுகளுக்கு உட்பட்டே இடஒதுக்கீடு இருக்கும். உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவின் மீது எடுக்கப்படும் இறுதி உத்தரவுக்கு உட்பட்டு இடஒதுக்கீடு தொடா்பான தகவல்கள் இணைய வழி விண்ணப்பத்தில் பெறப்படும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog