Breaking

Showing posts with label High Court Branch Order. Show all posts
Showing posts with label High Court Branch Order. Show all posts

Thursday, May 08, 2025

Wednesday, November 08, 2023

November 08, 2023

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.


விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.

ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Friday, December 30, 2022

December 30, 2022

மருத்துவ கவுன்சிலில் MBBS படிப்பை மட்டுமே பதியலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு - Only MBBS course can be registered in Medical Council: iCourt Branch Order

மருத்துவ கவுன்சிலில் MBBS படிப்பை மட்டுமே பதியலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு - Only MBBS course can be registered in Medical Council: iCourt Branch Order

Manokaran, Malaichami and Balu, who have completed their B.Sc (Social Health) degree from the government, have applied for registration with the Tamil Nadu Medical Council. The Medical Council refused to accept this and rejected the BSc (Social Health) course as non-registrable. They petitioned the Madurai branch of the ICourt to cancel this and seek an order to register them with the Medical Council.

Judge GR Swaminathan, who heard this petition, said, 'Only MBBS degree course can be registered in the Medical Council. The medical council has said that it is not possible to register other courses. Petitioners have aspired too much. Considered equivalent to MBBS and above. As there is no merit in their request, this petition is dismissed. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மனோகரன், மலைச்சாமி மற்றும் பாலு ஆகியோர், தங்களை தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த மருத்துவ கவுன்சில், பிஎஸ்சி (சமூக சுகாதாரம்) படிப்பை பதிவு செய்ய முடியாது என நிராகரித்தது. இதை ரத்து செய்யவும், தங்களை மருத்துவ கவுன்சிலில் பதிவு ெசய்யுமாறு உத்தரவிடக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மருத்துவ கவுன்சிலில் எம்பிபிஎஸ் பட்டப் படிப்பை மட்டுமே பதிவு செய்ய முடியும். இதர படிப்புகளை பதிவு செய்ய முடியாது என மருத்துவ கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மிக அதிகமாய் ஆசைப்பட்டுள்ளனர். எம்பிபிஎஸ் மற்றும் அதற்கு மேலான படிப்பிற்கு சமமானதாக நினைக்கின்றனர். அவர்களது கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டுள்ளார்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

படிக்கும் வாய்ப்பை தவற விட்டோர் கல்வித் திட்டம்; உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கல்வித் திட்டம்;

'குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பை தவற விட்டோருக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக சிலர் பணிபுரிந்தனர். இவர்கள் படித்த முன் அடிப்படை கல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானது இல்லை எனக்கூறி, கேங் மஸ்துார் நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மேல் முறையீடு செய்தனர்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், 'மனுதாரர்கள் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள்' என தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:மனுதாரர்கள் முன் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித் தகுதியின்படி கேங் மஸ்துாராக நியமிக்கப்பட்டனர்; அப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.முன் அடிப்படை கல்வி படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்பிற்கு இணையானதாக அங்கீகரிக்க முடியாது.மனுதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மூலம் பத்தாம் வகுப்பை முடிக்கவில்லை. பொது வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில், முன் அடிப்படை கல்வி தேர்ச்சியை கருத்தில் கொள்ள முடியாது.இவ்வாறு கூறப்பட்டது. உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மனுதாரர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இந்நிலையில் பதவி இறக்கம் செய்யப்பட்டால் அவர்களின் குடும்பம், சமூகத்தில் அந்தஸ்து பாதிக்கும். மனுதாரர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது.மனுதாரர்கள் 2017 நவ., 20க்கு முன்பே முன் அடிப்படை கல்வியை முடித்திருப்பதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள்; பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது; மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதுபோல, வாய்ப்பை தவற விட்டோருக்கான கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும். இருப்பினும், வழக்கமாக பள்ளியில் நேரடியாக படிப்பை முடித்தவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் திட்டம் இருக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Total Pageviews

Search This Blog