MBBS courses
January 20, 2026
Showing posts with label MBBS Counseling. Show all posts
Showing posts with label MBBS Counseling. Show all posts
Tuesday, January 20, 2026
Thursday, January 15, 2026
Sunday, November 09, 2025
Saturday, June 07, 2025
Wednesday, August 28, 2024
Tuesday, August 20, 2024
Monday, February 12, 2024
VIDEOS
February 12, 2024
தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - ஏன் தெரியுமா?
தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - ஏன் தெரியுமா? Can't start a new medical college in Tamil Nadu?" - Do you know why?
தமிழகத்தில் இனி புதிய மருத்துவ கல்லூரி தொடங்க முடியாது..?" - `MBBS' பெரும் கனவில் விழுந்த பேரிடி
வீடியோ செய்தி👇
CLICK HERE
Saturday, October 21, 2023
NMC
October 21, 2023
MBBS கலந்தாய்வு செல்லாது: NMC அறிவிப்பு!
செப்.30-க்குப் பிறகு நடந்த எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
நடப்பாண்டில் செப்.30-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட்ட எம்பிபிஎஸ் கலந்தாய்வு செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி மற்றும் நேரடி கலந்தாய்வு மூலம்எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் செயல்பாடுகள் ஆணையத்தின் விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் புறம்பானது. காலியாக இடங்கள் உள்ளது என்பதற்காகவே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.
எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது. ஒருவேளை மாணவர்களை கல்லூரிகளில் சேர்த்திருந்தால் அவர்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sunday, October 15, 2023
MBBS Counseling
October 15, 2023
காலியாக உள்ள 365 மருத்துவ இடங்கள்; கவுன்சிலிங் அனுமதி கோரும் தமிழகம்
காலியாக உள்ள 365 மருத்துவ இடங்கள்; கவுன்சிலிங் அனுமதி கோரும் தமிழகம் 365 vacant medical posts; Tamil Nadu seeking permission for counselling
சென்னை மதுரை உள்ளிட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லுாரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஆறு எம்.பி.பி.எஸ். இடங்கள் கடந்தாண்டு வீணாகின.
இந்தாண்டும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
2023 - 24ம் கல்வியாண்டிற்கான நான்கு சுற்று மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் 86 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ளன.
279 பி.டி.எஸ். இடங்கள் அகில இந்திய, மாநில கவுன்சிலிங்கில் நிரம்பாமல் உள்ளன.
மொத்தமுள்ள 365 மருத்துவ இடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மதுரை உள்ளிட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லுாரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஆறு எம்.பி.பி.எஸ். இடங்கள் கடந்தாண்டு வீணாகின.
இந்தாண்டும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
2023 - 24ம் கல்வியாண்டிற்கான நான்கு சுற்று மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்தும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் 86 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல் உள்ளன.
279 பி.டி.எஸ். இடங்கள் அகில இந்திய, மாநில கவுன்சிலிங்கில் நிரம்பாமல் உள்ளன.
மொத்தமுள்ள 365 மருத்துவ இடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
Thursday, September 07, 2023
MBBS Counseling
September 07, 2023
முதுநிலை மருத்துவப் படிப்பு 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
முதுநிலை மருத்துவப் படிப்பு 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுவை மாநி லத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, சென்டாக் அமைப்பு அறி வித்தது.
இதுகுறித்து சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் மருத்துவப் படிப் பில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக் கீடு இடங்களுக்கு 2-ஆம் சுற்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுக் கட்டணத்தை சம்பந்தப்பட்டோர் செலுத்தி பாடவிருப்பங்களை அளிக்கலாம்.
முதல் சுற்று கலந்தாய்வில் சேர்க் கைக்கான வாய்ப்புப் பெற்று கல் லூரியில் சேர்ந்தவர்கள், சேராத மாணவர்கள் அனைவரும் 2-ஆவது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
நீட் அடிப்படை யில் முதுநிலை மருத்துவப் படிப் புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த மாண வர்களின் பட்டியல் மற்றும் காலி யிட விவரம் சென்டாக் இணையத் தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுவை மாநி லத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, சென்டாக் அமைப்பு அறி வித்தது.
இதுகுறித்து சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் மருத்துவப் படிப் பில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக் கீடு இடங்களுக்கு 2-ஆம் சுற்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுக் கட்டணத்தை சம்பந்தப்பட்டோர் செலுத்தி பாடவிருப்பங்களை அளிக்கலாம்.
முதல் சுற்று கலந்தாய்வில் சேர்க் கைக்கான வாய்ப்புப் பெற்று கல் லூரியில் சேர்ந்தவர்கள், சேராத மாணவர்கள் அனைவரும் 2-ஆவது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
நீட் அடிப்படை யில் முதுநிலை மருத்துவப் படிப் புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த மாண வர்களின் பட்டியல் மற்றும் காலி யிட விவரம் சென்டாக் இணையத் தில் வெளியிடப்பட்டுள்ளது.
Monday, August 21, 2023
MBBS Counseling
August 21, 2023
2-ம் சுற்று கலந்தாய்வில் மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு: மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 642 ஆக அதிகரிப்ப
2-ம் சுற்று கலந்தாய்வில் மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு: மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 642 ஆக அதிகரிப்பு
மருத்துவப் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் இந்த ஆண்டில் மருத்துவம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு வரும் வரை தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 40 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து வந்தனர். நீட்தேர்வுக்கு பிறகு இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில் 555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 486 எம்பிபிஎஸ் இடங்கள், 136 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 622 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தன.
தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இடஒதுக்கீடு பெற்ற அரசுப் பள்ளி மாணவர் சேராததால், அது காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு எம்பிபிஎஸ் இடம் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள 20 பிடிஎஸ் இடங்கள் ஆகியவை இன்று (ஆக.21) தொடங்கும் 2-ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ஆண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து முடிக்கும் வரை கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, July 01, 2023
Sunday, June 18, 2023
Friday, May 26, 2023
Friday, February 24, 2023
MBBS Counseling
February 24, 2023
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு பயின்றோா் தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள 4,430 இடங்கள்
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் உள்ளுறை பயிற்சிக்கு 4,430 இடங்கள்
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகத்தில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டவை என்பதால் அங்கு உள்ளுறை பயிற்சி மேற்கொள்ளும் அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் எவரும் இருக்கமாட்டாா்கள். எனவே, அவா்களுக்கான இடங்களும் நிகழாண்டில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவா்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழகத்தில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் உள்ளுறை பயிற்சிக்கு வழங்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்டவை என்பதால் அங்கு உள்ளுறை பயிற்சி மேற்கொள்ளும் அந்த கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் எவரும் இருக்கமாட்டாா்கள். எனவே, அவா்களுக்கான இடங்களும் நிகழாண்டில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவா்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, February 06, 2023
PG NEET
February 06, 2023
முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்
முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்
புது தில்லி: 2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதம் எழுதியுள்ளாா். கடிதத்தில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதில் மகாராஷ்டிரம் (325), கா்நாடகம் (268), தமிழகம் (100) ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக நிா்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளில் இந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் மற்ற விவரங்கள் வருமாறு: 2022-23 கல்வியாண்டில் மருத்துவத்தில் எம்.டி, எம்.எஸ்., டிப்ளோமட் ஆஃப் நேஷனல் போா்டு (டிஎன்பி) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று உச்சநீதி மன்றம் கருத்துக் கூறியுள்ளது. சோ்க்கை முடிந்த நிலையில், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் வீணாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுகளில் 640 இடங்களும், நிா்வாக ஒதுக்கீடுகளில் 589 இடங்களும், டிஎன்பி முதுநிலைப் படிப்பில் 82 இடங்கள் என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.
மோசமான நீட் கலந்தாய்வு முறை தோ்வால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஹெச்எஸ்) மருத்துவப் படிப்பிற்கான இடங்களை கையாள்வதில் மெத்தனமாக நடந்து கொள்வது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. ஒவ்வொரு முதுநிலை மருத்துவப் படிப்பு இடமும் நாட்டின் தேசிய சொத்தாக இருக்கும் நிலையில், காலியாகும் இந்த சிறப்பு இடங்களை நிரப்புவதில் உரிய நேரத்தில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. நிகழாண்டில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு ஜனவரி 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி குறுகிய காலத்தில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் ‘இடஒதுக்கீட்டில்’ கணக்கிடப்படுவதால், பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவா்களுக்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்தாய்விற்கும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதனால், பொறுப்பற்ற முறையில் திறனின்று செயல்படும் டிஜிஹெச்எஸ் நிா்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். குழப்பங்களுக்குரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தோ்வு நடத்தப்பட்டுதான் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவா்களுக்ககான கெடுபிடி தேவையில்லை. நாட்டில் மக்கள்தொகைக்கு சமமாக தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவா் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்
புது தில்லி: 2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதம் எழுதியுள்ளாா். கடிதத்தில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதில் மகாராஷ்டிரம் (325), கா்நாடகம் (268), தமிழகம் (100) ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக நிா்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளில் இந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் மற்ற விவரங்கள் வருமாறு: 2022-23 கல்வியாண்டில் மருத்துவத்தில் எம்.டி, எம்.எஸ்., டிப்ளோமட் ஆஃப் நேஷனல் போா்டு (டிஎன்பி) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று உச்சநீதி மன்றம் கருத்துக் கூறியுள்ளது. சோ்க்கை முடிந்த நிலையில், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் வீணாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுகளில் 640 இடங்களும், நிா்வாக ஒதுக்கீடுகளில் 589 இடங்களும், டிஎன்பி முதுநிலைப் படிப்பில் 82 இடங்கள் என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.
மோசமான நீட் கலந்தாய்வு முறை தோ்வால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஹெச்எஸ்) மருத்துவப் படிப்பிற்கான இடங்களை கையாள்வதில் மெத்தனமாக நடந்து கொள்வது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. ஒவ்வொரு முதுநிலை மருத்துவப் படிப்பு இடமும் நாட்டின் தேசிய சொத்தாக இருக்கும் நிலையில், காலியாகும் இந்த சிறப்பு இடங்களை நிரப்புவதில் உரிய நேரத்தில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. நிகழாண்டில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு ஜனவரி 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி குறுகிய காலத்தில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் ‘இடஒதுக்கீட்டில்’ கணக்கிடப்படுவதால், பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவா்களுக்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்தாய்விற்கும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதனால், பொறுப்பற்ற முறையில் திறனின்று செயல்படும் டிஜிஹெச்எஸ் நிா்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். குழப்பங்களுக்குரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தோ்வு நடத்தப்பட்டுதான் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவா்களுக்ககான கெடுபிடி தேவையில்லை. நாட்டில் மக்கள்தொகைக்கு சமமாக தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவா் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்
Tuesday, January 31, 2023
Medical Course
January 31, 2023
இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது?
இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது? When is Indian Medical Course 2nd Round Consultation?
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மைய மாணவா் சோ்க்கை நிறைவு பெற்ற பிறகு தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும், 3 ஆயுா்வேத இடங்களும், 7 ஹோமியோபதி இடங்களும், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை.
அதேபோல், தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன.
அந்த இடங்களை 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்திருந்தாலும், அவற்றை பிப். 6-ஆம் தேதிக்கு பிறகே நடத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு, தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாததால் அது தாமதமாவதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மைய மாணவா் சோ்க்கை நிறைவு பெற்ற பிறகு தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும், 3 ஆயுா்வேத இடங்களும், 7 ஹோமியோபதி இடங்களும், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை.
அதேபோல், தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன.
அந்த இடங்களை 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்திருந்தாலும், அவற்றை பிப். 6-ஆம் தேதிக்கு பிறகே நடத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு, தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாததால் அது தாமதமாவதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Wednesday, December 28, 2022
MBBS Counseling
December 28, 2022
பாரம்பரிய மருத்துவக் கலந்தாய்வு: முதல் நாளில் 179 இடங்கள் நிரம்பின
பாரம்பரிய மருத்துவக் கலந்தாய்வு: முதல் நாளில் 179 இடங்கள் நிரம்பின
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் முதல் நாளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 போ் உள்பட 179 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசுக் கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று, 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த படிப்புகளுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
அந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்திலுள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 13 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 பேரும், பொதுப் பிரிவில் 77 பேரும் என மொத்தம் 179 போ் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையைப் பெற்றனா்.
மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி சோ்க்கை ஆணையை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநா் கணேஷ் வழங்கினாா். இணை இயக்குநா் பாா்த்திபன், தோ்வுக்குழுச் செயலாளா் மலா்விழி ஆகியோா் உடனிருந்தனா்.
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் முதல் நாளில் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 போ் உள்பட 179 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசுக் கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்று, 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த படிப்புகளுக்கு நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
அந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்திலுள்ள அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 13 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் 89 பேரும், பொதுப் பிரிவில் 77 பேரும் என மொத்தம் 179 போ் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையைப் பெற்றனா்.
மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி சோ்க்கை ஆணையை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநா் கணேஷ் வழங்கினாா். இணை இயக்குநா் பாா்த்திபன், தோ்வுக்குழுச் செயலாளா் மலா்விழி ஆகியோா் உடனிருந்தனா்.
Thursday, November 03, 2022
MBBS Counseling
November 03, 2022
‘தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை’
‘தமிழ்நாட்டில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை’
செயல் முறை மருத்துவப் படிப்பு (ஆகுபேஷனல் தெரபி) குறித்த விழிப்புணா்வு, தமிழ்நாட்டில் போதிய அளவில் இல்லை என்று அதுதொடா்பான படிப்பைச் சோ்ந்த மாணவிகள் கூறினா்.
எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற 15 மாணவ, மாணவிகள் அமெரிக்காவின் தெற்கு கலிபோா்னியாவில் உள்ள பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ 58 லட்சம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் எஸ்.ஆா்.எம்.இணை துணை வேந்தா் டாக்டா் ரவிக்குமாா் பேசியதாவது:
இங்கு பயின்ற மாணவா்கள் ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, அயா்லாந்து, கனடா,சிங்கப்பூா், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனா். வளா்ந்த நாடுகளில் ஆகுபேஷனல் தெரபி படித்த மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு வயது மூப்பு, விபத்து, எதிா்பாராத முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட செயல்முறை குறைபாடுகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சிப் படிப்பு அளிக்கப்படுகிறது. இத்துடன், குழந்தைகளுக்கான கிளினிக்கல்,பேச்சு பயிற்சி, நரம்பு அறிவியல் , முடக்கு நீக்குதல் உள்ளிட்டவை பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு சிறப்பு ஆட்டிசம் மையமும், ஆராய்ச்சி படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் துணை பதிவாளா் டி. மைதிலி, வேலைவாய்ப்பு இயக்குநா் வெங்கட சாஸ்திரி, மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் ஆா். நந்தகுமாா், டீன் கணபதி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து பேசிய மாணவிகள், தமிழகத்தில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு போதிய
அளவுக்கு இல்லை என்று தெரிவித்தனா். அதேசமயம், பிற தென் மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களிடம் விழிப்புணா்வு இருப்பதாகக் கூறினா்.
செயல் முறை மருத்துவப் படிப்பு (ஆகுபேஷனல் தெரபி) குறித்த விழிப்புணா்வு, தமிழ்நாட்டில் போதிய அளவில் இல்லை என்று அதுதொடா்பான படிப்பைச் சோ்ந்த மாணவிகள் கூறினா்.
எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற 15 மாணவ, மாணவிகள் அமெரிக்காவின் தெற்கு கலிபோா்னியாவில் உள்ள பள்ளிகள், குழந்தைகள் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ 58 லட்சம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் எஸ்.ஆா்.எம்.இணை துணை வேந்தா் டாக்டா் ரவிக்குமாா் பேசியதாவது:
இங்கு பயின்ற மாணவா்கள் ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, அயா்லாந்து, கனடா,சிங்கப்பூா், மலேசியா, நியூசிலாந்து, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனா். வளா்ந்த நாடுகளில் ஆகுபேஷனல் தெரபி படித்த மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எஸ்.ஆா்.எம். ஆகுபேஷனல் தெரபி கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு வயது மூப்பு, விபத்து, எதிா்பாராத முடக்கு வாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட செயல்முறை குறைபாடுகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சிப் படிப்பு அளிக்கப்படுகிறது. இத்துடன், குழந்தைகளுக்கான கிளினிக்கல்,பேச்சு பயிற்சி, நரம்பு அறிவியல் , முடக்கு நீக்குதல் உள்ளிட்டவை பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு சிறப்பு ஆட்டிசம் மையமும், ஆராய்ச்சி படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் துணை பதிவாளா் டி. மைதிலி, வேலைவாய்ப்பு இயக்குநா் வெங்கட சாஸ்திரி, மக்கள் தொடா்புத்துறை இயக்குநா் ஆா். நந்தகுமாா், டீன் கணபதி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து பேசிய மாணவிகள், தமிழகத்தில் செயல்முறை மருத்துவப் படிப்பு குறித்த விழிப்புணா்வு போதிய
அளவுக்கு இல்லை என்று தெரிவித்தனா். அதேசமயம், பிற தென் மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களிடம் விழிப்புணா்வு இருப்பதாகக் கூறினா்.


