Breaking

Showing posts with label 2nd phase consultation. Show all posts
Showing posts with label 2nd phase consultation. Show all posts

Monday, August 22, 2022

August 22, 2022

கடலூா் அரசுக் கல்லூரியில் நாளை( 23-ஆம் தேதி ) 2-ஆம் கட்ட கலந்தாய்வு

கடலூா் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23-ஆம் கல்வி ஆண்டுக்கான முதல் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.20-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதலாம் கட்ட கலந்தாய்வில் எஞ்சியுள்ள இடங்களுக்கு வருகிற 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

23-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் 400-க்கு 250 ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவா்கள் பங்கேற்கலாம். 249 முதல் 235 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 24-ஆம் தேதியும், 234 முதல் 215 வரை ‘கட்-ஆஃப்’ உள்ளவா்களுக்கு 25-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். 26-ஆம் தேதி பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடங்களில் மட்டும் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்போா் இணையவழி விண்ணப்பத்தின் நகல், 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளின் அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அடையாள அட்டை 2 நகல்கள், உரிய சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

Total Pageviews

Search This Blog