Breaking

Showing posts with label மத்திய அரசு. Show all posts
Showing posts with label மத்திய அரசு. Show all posts

Saturday, July 30, 2022

July 30, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

📚அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள்

காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தர கூடும் என தெரிகிறது.

📚ஏனென்றால் DA உயர்வு மட்டுமல்ல 18 மாத அரியர் பே (arrear pay) தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 📚அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து இன்னும் முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், DA உயர்வு குறித்த முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

📚மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் AICP index குறைந்தபட்சம் 4% உயர்த்தப்படலாம் என் கூறுகிறது. இதன் பொருள் மொத்த DA சதவீதம் 38-ஐ எட்ட கூடும். அதாவது ஊழியர்களுக்கான DA சதவீதம் 34-ல் இருந்து 38% அதிகரிக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை மாற்றியமைக்கப்படுகிறது.

📚முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலும், இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திலும் வழங்கப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இந்த முறை ஏன் 4% உயர்த்தப்பட உள்ளது என்பதை சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு தரவு (All India Consumers Price Index data ) தெளிவாக காட்டுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஏப்ரல் 2022க்கான அகில இந்திய CPI-IW 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7-ஆக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 0.42 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 1-மாத சதவீத மாற்றத்தில் இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய அமைச்சக அறிக்கைகளின் படி, மே மாதத்திற்கான AICPI புள்ளிவிவரங்கள் 129-ஆக உள்ளது. இதுவே DA-ல் 4% அதிகரிப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் கீழ் இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளத்திற்கு ஆண்டுக்கு ரூ.8,640 உயர்வை எதிர்பார்க்கலாம்.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலமாக நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை பிரச்சனையையும் மத்திய அரசு தீர்க்கலாம் என்றும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மாற்றப்பட்டது. இருப்பினும் நிலுவை தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை.

முன்னதாக 1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2021-ல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், 2022 ஜனவரியில் 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக சரிந்தது.

Wednesday, July 27, 2022

July 27, 2022

கேந்திரிய வித்யாலயாக்களில் 12,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய அரசு

தமிழகத்தில் அதிகபட்சமாக 1,162 காலியிடங்களும், மத்தியப் பிரதேசத்தில் 1,066 இடங்களும், கர்நாடகாவில் 1,006 இடங்களும் உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து அரசு கவலைப்படுகிறதா? குறிப்பாக தமிழ்நாட்டில்; அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இவ்வளவு பெரிய காலியிடங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, மாநில வாரியாக; இந்தப் பணியிடங்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்புவதற்கான செயல்திட்டத்தை அரசாங்கம் சிந்தித்து வருகிறதா என்பதையும் மற்றும் அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் இதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக? என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி, ஓ.பி ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி , தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் 12044 ஆசிரியர் பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. மாநில யூனியன் பிரதேசம் வாரியாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு எதிராக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்த காலியிடங்களின் விவரங்கள் & இடமாற்றம். பணி ஓய்வு போன்றவற்றால் அவ்வப்போது காலியிடங்கள் எழுகின்றன. காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயலாகும், மேலும் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிகளின் விதிகளின்படி காலியிடங்களை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. கற்பித்தல்-கற்றல் செயல்முறை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கேந்திரிய வித்யாலயா சங்கதன் மூலம் தற்காலிக காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என பதில் அளித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog