Breaking

Showing posts with label TNEA 2022 Counselling. Show all posts
Showing posts with label TNEA 2022 Counselling. Show all posts

Saturday, August 26, 2023

August 26, 2023

TNEA கவுன்சலிங்; ஒரு மாணவர் கூட சேராத இன்ஜினியரிங் கல்லூரிகள்!

TNEA கவுன்சலிங்; 37 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவடைந்து, தற்போது மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மூன்றாம் சுற்றில் 89,694 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2 சுற்று கலந்தாய்வுகளின் முடிவில் 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், கலந்தாய்வில் பங்கேற்ற மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகளில், 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப முடிந்தது. 126 கல்லூரிகளில் 50%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

176.99 முதல் 142 மதிப்பெண்கள் வரையிலான இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்ற 64,286 மாணவர்களில் 35,474 பேர் மட்டுமே இடங்களைப் பெற முடிந்தது. இதுவரையிலான இரண்டு சுற்று கவுன்சிலிங்கில் மொத்தம் 50,615 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இருப்பினும், நடப்பு கல்வியாண்டில் முதல் இரண்டு சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, முந்தைய ஆண்டை விட கவுன்சிலிங் சுற்றுகள் குறைக்கப்பட்டதே இதற்குக் காரணம். இருந்த போதிலும், கடந்த ஆண்டை விட முதல் இரண்டு சுற்றுகள் அதிக இடங்களை நிரப்பியதாக கல்லூரிகள் தெரிவித்துள்ளன.


”நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில்துறை தொடர்புகள் கொண்ட 41 பொறியியல் கல்லூரிகள் ஆரம்ப இரண்டு சுற்றுகளில் 80 சதவீத இடங்களை நிரப்பியுள்ளன. இந்த கல்லூரிகள் கோர் பிரிவுகளில் கூட வெற்றிகரமான சேர்க்கைகளைக் கண்டுள்ளன,” என்று கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளில் உள்ளது. இருப்பினும், இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கைத் தொடர்ந்து, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகள் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆர்வம் உள்ளது, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர் சேர்க்கையை ஈர்க்க போராடும் கல்லூரிகளில் கவுன்சிலிங்கிற்கு பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனங்களுக்குள் உள்ள உள்கட்டமைப்பை ஒரு குழு மதிப்பீடு செய்யும். குறைந்த உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரிகள் தகுந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Saturday, August 20, 2022

August 20, 2022

TNEA கவுன்சலிங்; கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் அரசு பொறியியல் கல்லூரிகள்

Tamilnadu Government Engineering colleges campus placements status: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங் தொடங்கி உள்ள நிலையில், அரசு பொறியியல் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிவிட்டது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு மேல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் பொறியியல் படிக்க நினைக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதல் விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி போன்ற அரசு கல்லூரிகள் தான்.

ஆனால் அதன் பிறகு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சேலம் அரசு கல்லூரி உள்ளிட்ட ஒரு சில அரசு கல்லூரிகளைத் தவிர பிற அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்தநிலையில், அரசு கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்காது, சிறந்த கற்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பு இருக்காது என்ற பொதுவான எண்ணம் பலரிடையே இருந்து வருகிறது. ஆனால் அரசு கல்லூரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன, மேலும் அங்கு வளாக நேர்காணல் எனும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் நூற்றுக்கணக்காணோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த அரசு கல்லூரிகளில் புகழ்பெற்ற தனியார் மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூ-வில் தேர்வு பெற்றவர்களின் சதவீதத்தையும் ரமேஷ் பிரபா வழங்கியுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டில் 90% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டில் 79% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 77% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

சேலத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 70% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 56.5% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

பர்கூரில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 53.2% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

போடிநாயக்கனூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 52.5% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

தருமபுரியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் 50.7% பேர் கேம்பஸ் இண்டர்வியூ-வில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலே உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுதரும் நிலையில், அங்கு கட்டணங்களும் குறைவு என்ற நிலையில், மாணவர்கள் இந்த கல்லூரிகளை விரும்பினால் தேர்வு செய்துகொள்ளலாம் என்று ரமேஷ் பிரபா கூறியுள்ளார்.

Total Pageviews

Search This Blog