Breaking

Showing posts with label textbooks. Show all posts
Showing posts with label textbooks. Show all posts

Friday, May 03, 2024

Friday, January 12, 2024

January 12, 2024

12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்! - AICTE



12 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகங்கள்!

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், முதலில் ஹிந்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா ஆகிய 9 மொழிகளில் தொழில்நுட்ப புத்தகம் எழுதும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து, அஸ்ஸாமி, மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் புத்தங்கள் வெளியிடப்படுகின்றன.

12 மொழிகள்முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு சார்ந்து டிப்ளமோ அளவில் 11 மற்றும் பட்டப்படிப்பு அளவில் 9 என மொத்தம் 20 பாடப்பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆங்கில மொழிகளில் அசல் புத்தகத்தை எழுதுவதற்காகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் மாநில மொழிகளில் எழுத மொழிபெயர்ப்பாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு மொழிக்கும், தரமான பாடப்புத்தகங்களை வழங்குவதற்காக பல்கலைக்கழகங்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மற்றும் குடிமைப் பொறியியல் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் 42 பட்டப்படிப்பு பாடங்கள் மற்றும் 46 டிப்ளமோ பாடங்கள் என மொத்தம் 88 பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய பாடப்பிரிவுகள் ஆங்கிலத்தில் எழுதுதோடு, 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.ஏ.ஐ.சி.டி.இ., புத்தகங்களின் அம்சங்கள்:

புத்தகத்தின் உள்ளடக்கம் பாடநெறி மற்றும் அலகின் அடிப்படையில் முறையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு யூனிட்டின் தொடக்கத்திலும், அந்த அலகை முடித்த பிறகு, மாணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்றல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. புத்தகம் சமீபத்திய தகவல்கள், சுவாரஸ்யமான உண்மைகள், மின்-வளங்களுக்கான கியு.ஆர்., குறியீடு ஆகியவற்றை வழங்குகிறது.

சமச்சீர் மற்றும் காலவரிசைப்படி, புத்தகத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர்களை மையமாகக் கொண்ட பாடப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

தலைப்புகளின் தெளிவை மேம்படுத்த புள்ளிவிவரங்கள், அட்டவணைகள் மற்றும் மென்பொருள் ஸ்கிரீன் ஷாட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு இந்திய மொழிகளில், விளைவு அடிப்படையிலான தொழில்நுட்பக் கல்வி புத்தகங்களை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விபரங்களுக்கு:

https://ekumbh.aicte-india.org/allbook.php

Tuesday, December 26, 2023

December 26, 2023

பள்ளி புத்தகத்தை காணும் முன்பே சாதனை புத்தகங்களில் இடம்: அசத்தும் சிறுமி



பள்ளி புத்தகத்தை காணும் முன்பே சாதனை புத்தகங்களில் இடம்: அசத்தும் சிறுமி

எதிர்காலத்தில் ஒருவரது சாதனை என்பது அரை மணி நேரம்தான்’ என்பார் எழுத்தாளர் சுஜாதா. அதேபோல், சாதனைக்கும், சாதிக்கவும் வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் திருப்பூரை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி அவீர்ணா. திருப்பூர் - காங்கயம் சாலை பள்ளக்காட்டுபுதூரை சேர்ந்த இவரது தந்தை ஹரிபிரசாத், சொந்தமாக பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருபவர். தாயார் பூர்ணிமா. இருவரது ஊக்கத்தால் சிறுமி அவீர்ணா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்டு ரெக்கார்ட் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். பாடப்புத்தகங்களை படிக்க பள்ளிக்கு செல்லும் முன்பே, சாதனை புத்தகத்தில் மிளிரத் தொடங்கியுள்ளார் சிறுமி அவீர்ணா.

வாகனங்களின் பெயர்கள், பூக்களின் பெயர்கள், நிறங்கள், பழங்கள், காய்கறிகள், தேசத் தலைவர்கள், உலக அதிசயம், விண்வெளி கோள்கள், தேசிய சின்னங்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என, எந்தவொரு பொருள் மற்றும் நிறம் சார்ந்த படத்தை காட்டினாலும், அந்த படத்தில் என்ன உள்ளது? என்றும், யார் இருக்கின்றனர் என்றும் போகிற போக்கில் சட்டென்று கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்! இது மட்டுமில்லை, ஆங்கில மொழித்திறனில் அசத்துகிறார். ஆங்கிலத்தில் கதை சொல்கிறார், பாடல் பாடுகிறார்... மழலை மொழியில் கேட்க, கேட்க அத்தனை அழகு! பெற்றோருடன் சிறுமி அவீர்ணா இதுதொடர்பாக அவீர்ணாவின் தாயார் பூர்ணிமா கூறும்போது, ‘‘ 3 மாத குழந்தையாக இருந்தபோது, விளையாட்டாக அவளுக்கு பிடித்த விஷயங்களை மறைத்துவைத்து, அவள் நினைவில் வைத்து தேடி எடுப்பாள். அப்போது, மகளின் ஞாபக ஆற்றலை உணர்ந்தேன். தொடர்ந்து வண்ணங்களை சொல்லி கொடுத்தபோது, பிறழாமல் கூறி அசத்தினாள். மேலும், ஊக்கமளிக்கும் வகையில் பழங்கள், காய்கறிகள், தேசத் தலைவர்கள், உலக அதிசயங்கள் என அனைத்தையும் கற்று கொடுத்தேன். அதேபோல், இரவில் கதை சொல்லி கொடுப்பேன். அதுவும், அவளது ஞாபக ஆற்றலை மேம்படுத்த உதவியது. இதையடுத்து, இந்த ஞாபகத் திறனை கூர்மையாக்கி, சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க ஏற்பாடு செய்தோம். எடுத்த எடுப்பிலேயே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் வேர்ல்டு ரெக்கார்ட் ஆகியவற்றில் பதிவு செய்தோம்” என்றார்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேடியோ, டீசல் இன்ஜின், தொலைக்காட்சி, அலைபேசிகள், மின்சாரம், ஹெலிகாப்டர், சீலிங் பேன் வரை என அத்தனை கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களையும் மிக சர்வ சாதாரணமாக கூறி அசத்துகிறார் சிறுமி அவீர்ணா! நல் விருட்சத்துக்கான விதை துளிர்க்கிறது அவரது சிரிப்பில்..

Wednesday, October 25, 2023

October 25, 2023

இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் Bharat instead of India in textbooks



இனி பாடபுத்தகத்தில் இந்தியாவிற்கு பதிலாக பாரத்

என்சிஇஆர்டி ன் ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாரத் என்று மாற்றுவதற்கு என்சிஇஆர்டி ஒப்புதல் அளித்துள்ளது.இனி என்சிஇஆர்டி யின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாரத் என்ற வார்த்தையே இருக்கும். இந்தியாவுக்கு பதில் பாரத் - NCERT பரிந்துரை!

சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் 'இந்தியா' என்ற வார்த்தைக்கு பதிலாக 'பாரத்' என மாற்ற என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரை - கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்!

ஏற்கனவே ஜி20 மாநாடு அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் மேஜையிலும் | இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது!

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டில் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யவும் இந்த கவுன்சில் பல்வேறு நிபுணர்களை கொண்டு குழுக்களை அமைத்துள்ளது.

இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, பாடப்புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என அச்சடிக்க பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிந்துரையை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இனி அச்சடிக்கப்படும் NCERT-ன் பாடப்புத்தகங்கள் அனைத்திலும் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயரே இடம்பெறலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இதே போன்று, இந்திய வரலாறு பாடப்புத்தகத்தில் பண்டைய வரலாறு என்ற தலைப்புக்கு பதிலாக, கிளாசிக்கல் வரலாறு என்ற பெயர் மாற்றவும், இந்திய அறிவு அமைப்பை பிரதானப்படுத்தவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tuesday, September 26, 2023

September 26, 2023

30-50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் - அக்டோபர் 15 வரை விற்பனை!



உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் 30-50 சதவீத தள்ளுபடி விலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி வரை 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் உலகத்  உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் ஆகியப் பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அரிய நூல்கள், பாரதியார் சித்திரக் கதைகள், பாரதி வாழ்க்கை வரலாறு, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான கருவி நூல்கள் ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் முதல் அக்டோபர் 15ஆம் நாள் வரை 30 முதல் 50 விழுக்காடு கழிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

நூல் விற்பனை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிறுவன வளாகத்தில் நேரடியாக நடைபெறும்.

எழும்பூரிலுள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல் விற்பனை நிலையத்திலும் நடைபெறும்.

நூல்கள் பற்றிய விவரங்கள் அறிய www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். *இணைய வழியில் (Internet Banking) தொகை செலுத்தும் முறை.*

வங்கி கணக்கு பெயர் – INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES

கணக்கு எண்         – 33068172999

ஐஎப்எஸ்சி(IFSC) குறியீடு எண்  – SBIN0013361

இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப்

பயிலக வளாகம் தரமணி, சென்னை – 600 113.

தொடர்புக்கு – 044- 22542992, 044 – 22541436 / 9600021709. 

Monday, June 12, 2023

Total Pageviews

Search This Blog