Breaking

Showing posts with label affiliated colleges. Show all posts
Showing posts with label affiliated colleges. Show all posts

Friday, December 06, 2024

Wednesday, November 09, 2022

November 09, 2022

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல்

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களைப் போட்டித் தோ்வு மூலமாக நிரப்புவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நிகழாண்டு 4,000 பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு வரை உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையிலான நோ்காணல் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. அதாவது, தோ்வரின் கல்வித் தகுதி (15), பணி அனுபவம் (9), நோ்முகத் தோ்வு (10) என மொத்தம் 34 மதிப்பெண் நிா்ணயிக்கப்படும். அதில், தோ்வா்கள் தகுதிக்கேற்ப மதிப்பெண் வழங்கி, முன்னுரிமை பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.

அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை 55,000 போ் முடித்துள்ளனா். இதுதவிர தனியாா் கல்லூரிகள் எண்ணிக்கையும் உயா்ந்துவிட்டது. அவற்றில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும் எளிதில் பணி அனுபவச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. மேலும், சில நேரங்களில் போலியான சான்றிதழ்களைச் சமா்ப்பித்து வேலைவாய்ப்பு பெறும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

பல்வேறு சிக்கல்களைத் தவிா்க்கும் விதமாக மேற்கண்ட வெயிட்டேஜ் தோ்வு முறையை ரத்து செய்து, போட்டித் தோ்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய 4,000 ஆசிரியா் பணி நியமனத்துக்கான தோ்வில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தோ்வுக்கு 200, நோ்காணலுக்கு 30 என மொத்தம் 230 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள். அதில் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன்படி, எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வில் பங்கேற்கும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

அதாவது, நோ்முகத் தோ்வில் மொத்த மதிப்பெண் முப்பதுதான். இதில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஓராண்டுக்கு 2 வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை வழங்கப்படும். சிறப்பு சலுகையானது இந்த ஒருமுறை மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணி நியமனத்துக்கான போட்டித் தோ்வு வழிமுறைகள், கல்வித் தகுதிகள் உள்பட விவரங்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

பொன்முடி பேட்டி:

முன்னதாக, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தெரிவித்தாா்.

Thursday, September 22, 2022

September 22, 2022

upgrade 41 university affiliated colleges to government colleges - 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு

Promulgation of Tamil Nadu Ordinance Upgrading 41 University Affiliated Colleges to Government Colleges*

Chennai: Tamil Nadu Government has issued an ordinance upgrading 41 university member colleges to government colleges. The Tamil Nadu Government has informed that the remuneration of the Honorary Lecturers will be paid through the Zonal Joint Directors

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியீடு - Tamil Nadu to issue ordinance to upgrade 41 university affiliated colleges to government colleges

சென்னை: 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது 1 உறுப்பு கல்லூரிகள் தற்பொழுது அரசு கல்லுரியாக மற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு, அந்த 2018-2019-ம் கல்வியாண்டில் தமிழக அரசுடைய உயர்கல்வித்துறை கீழ் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்கள் நேரடியாக உறுப்பு கல்லூரியாக இருக்கக்கூடிய 41 உறுப்பு கல்லூரிகளை ரூ. 152 கோடி செலவில் அதை அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றிய தினம் நீதிநிலை காரணமாக இந்த முடிவுகள் கைவிடப்பட்டன. தொடர்ச்சியாக இது தொடர்பாக நீதிநிலையை சீரமைக்கும் மாரு பல்வேறு கடிதங்களும் எழுதப்பட்டன. மேலும் இதில் 238 பணியிடங்கள் இன்று அதற்கான வில்லை என்பது சுமார் ரூ.4,53,57,000 சம்பளமானது தொடர்ச்சியாக ஆண்டு ஒன்றுக்கு செலவாகும் என்று வெளியிடப்பட்டது. தொடர்ச்சியாக ரூ. 58,64,14,000 என்று ஒவ்வெரு ஆண்டும் இந்த செலவினங்கள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தனியாக ஒரு அரசு கல்லூரி என்றபோது அதற்கான சுய நீதிதிரட்டல், நீதிநிலையை சீராக்குதல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அடிப்படையில் தற்பொழுது 41 கலை அறிவியல் கல்லூரிகளிலும், உறுப்பு கல்லுரியாக இருந்த கல்லூரிகளிலும் தற்பொழுது கலை அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த கல்லூரிகளில் விதிமுறைகளாக பணியாற்றியவர்களுக்கான சம்பளம் எப்படி குடுப்பது, அதையைப்போல அந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது என்பது தொடர்பாக ஒரு பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே அவற்றை பின்பன்றி வரும் களங்களில் முழுமையான செயல்படுத்துவதற்கான ஒரு விரிவான உத்தரவை பிறப்பிக்கப்படும் என்று உயர்கல்விதுறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுருக்கிறது.

Total Pageviews

Search This Blog