Breaking

Showing posts with label Hindi is the first language. Show all posts
Showing posts with label Hindi is the first language. Show all posts

Thursday, August 25, 2022

August 25, 2022

ஆங்கிலத்தால் 5% மட்டுமே பயன் தாய் மொழியில் படிப்பதால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு

‘ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,’ என்று அமித்ஷா பேசிய நிலையில், அவர் இந்திக்கு ஆதரவாக மீண்டும் கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை - 2020 என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

குஜராத் அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அடியெடுத்து வைத்த காலத்தில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் இந்தியில் இருந்து குஜராத்திக்கு மொழி பெயர்த்து கட்டுரைகளை படித்தேன். இந்தியில் எனது புலமையை மேம்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள் என்று தலைவர் ஒருவர் கூறினார். தாய் மொழியில் படிக்கும் 95 சதவீத குழந்தைகளின் திறன்கள் பயன்படாமல் போவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தாய் மொழி திறனை முழுமையாக பயன்படுத்தினால் நாடே பிரகாசமாக இருக்கும்.

ஆங்கில மோகத்தால் நாட்டின் ஐந்து சதவீத மக்களின் திறன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இந்தியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என அமித்ஷா ஏற்கனவே கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இந்திக்கு ஆதரவாக அவர் பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Monday, April 11, 2022

April 11, 2022

10ம் வகுப்பில் முதல் மொழி பாடம் ஹிந்தி? போலி சான்றிதழ் அளித்தோருக்கு வருது 'ஆப்பு!'

The Tamil Nadu School Education Department has recommended that legal action be taken against those who were selected for the postal service for forging certificates that they had studied Hindi as a first subject in class X in Tamil Nadu.

Last year a competitive examination was held and the list of those who were selected for postal posts and allotted to Tamil Nadu came to the Tamil Nadu Post Office. Of these, hundreds of students from the northern states had issued certificates certifying that they had passed Class 10 in Tamil Nadu. The certificate stated that he had studied Hindi as the first language in Tamil Nadu school education. In this regard, a detailed report was published in our newspaper last week. . The use of Hindi in many places in the certificate has shocked the authorities.

In this regard, the letter sent to the Postal Department through the State Examination Department: The Tamil Nadu Class 10 Pass Certificates issued by those who have been selected for the post office post and are from the Northern State are fake. They were not provided by the Tamil Nadu Election Commission.

Those who misused the stamp of the Government of Tamil Nadu, name of Tamil Nadu school education etc. and issued fake certificates; Appropriate legal action should be taken against those who prepared it, the letter said. தமிழக பள்ளிக் கல்வித் துறை தபால் துறை பணிக்கு தேர்வானோர், தமிழகத்தில் பத்தாம் வகுப்பில் ஹிந்தியை முதல் பாடமாக படித்ததாக கொடுத்த போலி சான்றிதழ்கள் தொடர்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு போட்டி தேர்வு நடத்தப்பட்டு, தபால் துறை பணிகளுக்கு தேர்வாகி, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியல், தமிழக தபால் துறைக்கு வந்தது. இதில், வட மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர், தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் வழங்கி இருந்தனர். அந்த சான்றிதழில், தமிழக பள்ளிக் கல்வியில் முதல் மொழியாக ஹிந்தி படித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.அதிர்ச்சிஇதனால், சந்தேகம்அடைந்த தபால் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பத்தாம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய, தமிழக பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த வாரம் விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில், தபால் துறை வழங்கிய தேர்வர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த பள்ளிக்கல்வி அதிகாரிகள், பத்தாம் வகுப்பு தேர்வு சான்றிதழில், ஹிந்தி மொழியை முதல் பாடமாக குறிப்பிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் முதல் மொழி பாடம் ஹிந்தி

. சான்றிதழில் பல இடங்களில் ஹிந்தி பயன்படுத்தப்பட்டு உள்ளதும், அதிகாரிகளை அதிர வைத்துள்ளது.இதையடுத்து, பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு வந்தவர்களில், ஏராளமானோர் அளித்துள்ள தமிழக சான்றிதழ் போலியானது என்பதை, தமிழக பள்ளிக்கல்வி துறை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வழியே, தபால் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:நடவடிக்கைதபால் துறை பணிக்கு தேர்வாகி, வட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வழங்கியுள்ள, தமிழக 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்கள் போலியானவை. அவை தமிழக தேர்வுத்துறையால் வழங்கப்படவில்லை.

தமிழக அரசின் முத்திரை, தமிழக பள்ளிக் கல்வியின் பெயர் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, போலி சான்றிதழ் அளித்தவர்கள்; அதை தயாரித்தவர்கள் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog